Showing posts with label புதுக் கவிதைகள். Show all posts
Showing posts with label புதுக் கவிதைகள். Show all posts

Tuesday, July 22, 2014

தேடலும் தெய்வமும்!



இறைவன் ஆடும்
கண்ணா மூச்சி ஆட்டத்தில்
கண்கள் கட்டப்பட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன் அவனை

கையோ காலோ
சட்டையின் நுனியோ
எதையாவது ஒன்றைத் தொட்டு
அவனை அவுட் ஆக்க (வெளிப்படுத்த)
தேடிக் கொண்டிருக்கிறேன்..

ஐம்புலனும் கூர்மையாய்
அவனையே நோக்கி
ஆறாம் புலனில்
தேடிக் கொண்டிருக்கின்றன..

தேடிக் கொண்டிருப்பது தெரியும் மட்டும்
ஆட்டம் தெரிந்து கொண்டே இருந்தது..

சோர்ந்து போகும் பொழுது
அவன் ஓசையோ,
மணமோ அல்லது
கடந்து போகையில் உண்டாகும்
காற்றின் ஸ்பரிசமோ
அவன் அருகில்தான் இருக்கிறான்
 என்பதை உணர்த்தி
தேடலைத் தொடரச் சொல்லும்..

அந்த ஒரு துளிக் கணத்தில்
மனம் சோர்ந்து உட்கார்ந்த பொழுது
மூச்சிழுத்தேன்.. விட்டேன்
அவனின் மணம் சுவாசிக்கப் பட்டது

எதோ ஒரு புலனின்
பொத்தான் அழுத்தப்பட்டு
எங்கெங்கும் பிரகாசம் பரவியது..
மூச்சினால் அவனைத் தொட்டு விட்டேனென
மெல்லப் புரியத் தொடங்கியது..

எங்கும் இருப்பவனைத் தொட
எங்கேயும் செல்ல வேண்டாமே எனப்
புரியத் தொடங்கியது..

புலன்களைக் கூராக்கினேன்

சத்தியமா இது சாத்தியமா
கேள்விவியும் கேட்டது..

பதில் தேட அலையத் தோன்றவில்லை.
ஏனென்றால் புரிய ஆரம்பித்தது.
இரண்டும் அவனே.. !!

தேடல்!




தேடலின் தொடக்கமும்
தேடலின் எரிபொருளும்
தேடலின் வழித்துணையும்
தேடலின் இன்னும் அனைத்தும்
ஏக்கங்களில் இருந்தே
பிறப்பிக்கப்படுகின்றன..

ஏக்கத்திலிருந்து பல பாதைகள் தொடங்குகின்றன..
ஒவ்வொரு பாதையின் முடிவிலும்
இறைவன் காத்திருக்கிறான்..

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

ஏக்கத்தின் தாக்கம் தீருதல்
தேடல்களில் மாத்திரமே


தேடலுக்காகத்தான்
நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.

தேடல்கள் உள்ளேயும் இருக்கலாம்
தேடல்கள் வெளியேயும் இருக்கலாம்.

வெளியே தேடும் பொழுது என்ன என்ன காண்கிறோமோ
அதையே உள்ளே தேடும் பொழுதும் காண்கிறோம்

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதே ஒன்று
நம்மில் நாமாக இருப்பதை அறியும் வரை
ஏக்கத்தின் தாக்கமும் தேடலும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்..

யதார்த்தங்கள் என்பவைகள்
எதோ அர்த்தங்கள் ஆகும்.

அந்த அர்த்தங்கள் புரியாமல்
இருக்கும் வரை
அவை யதார்த்தங்களாகவே
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சித்தமும் யதார்த்தமும்
என்றுமே
யுத்தம் கொண்டதில்லை..

சித்தம்தான் யதார்த்தங்களாக
வேடம் பூண்டு வந்து கொண்டிருக்கிறது..

கழித்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுதல்

கூட்டிக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

பெருக்கிக் கொண்டே போய்
கட்வுளைத் தேடுவது

வகுத்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

எல்லாம் தெரிந்துதான்
பயணம் தொடங்க வேண்டும்
என்பது இல்லை.
இது இலக்கறியாப் பயணம்
பாதையிலே
பயணத்தை அறிந்து கொள்கிற
விசித்திரப் பயணம்

எவ்வழியில் சென்றாலும்
பூஜ்யமாகவும்
முடிவிலியாகவும்
எல்லாப் பக்கங்களிலும்
இறைவன் இருக்கிறான்
காத்துக் கொண்டு!!!

Tuesday, July 8, 2014

கத்தியும் உறையும்!







துரோகம்!






புன்னகை!






அப்பன் - மகன்






ஆடை!!






மன்னிப்பு!







சிறப்பு இரயில்!





வெளிச்சமும் தெரிவதுவும்





புதையல்


தீபம்!






அஞ்சும்!!!






காதலினால் காதல் செய்வீர்!


உயிர் மூச்சு!!!