Sunday, March 5, 2017

ஜோதிடமும் சோதனையும்




மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம் போன்றவற்றை சிறுவயதில் நான் தேவாங்கர் செம்மல் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி (சேலம்) அவர்களின் பிரசங்கம் மூலமே முழுமையாக அறிந்து கொண்டேன். அவரின் விரிவான விளக்கமான அலசல்களே புராணங்களின் பால் என்னை கவர்ந்திழுத்தவை. அவரை எனது முதற்குரு என்று சொன்னாலும் மிகையாகாது.

பிப்ரவரி 8 ஆம் தேதி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் கும்பாபிஷேகம் என்றால் என்ன? அதை ஏன், எப்படி, எதற்கு செய்கிறோம் என விளக்கவுரையுடன் ஒவ்வொரு சடங்குகளையும் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்,

ஒரு இடைவேளை கிடைத்தபோது என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவரின் மருமகன் புலவர் கி.பிள்ளார் செட்டி அவர்கள் என் ஆசிரியர் என்பதால் இன்னாரின் மாணவன் என எளிதில் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. பின்னர் அவர் எழுதிய தேவாங்க சிந்தாமணி பற்றிய எனது நன்றியினைச் சொல்லிக் கொண்டேன். வாழ்வில் பல கட்டங்களில் அந்நூல் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்பதால் அதற்குரிய நன்றியை தெரிவித்துக் கொண்டு தற்பொழுது அவர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் என விசாரித்தேன்.

“தேவாங்க பாரதம்” என்ற நூலை எழுதுவதில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். மகாபாரதத்தின் மூல ஓலைச் சுவடிகள் சேலத்தில் ஒரு மடத்தில் இருப்பதாகவும், அதைக் கொண்டே இராஜாஜி தலைமையில் பலர் ஒன்றிணைந்து ஆராய்ந்து கும்பகோணம் மஹாபாரதப் பதிப்பு தொகுத்து வெளியிடப்பட்டதாக சொன்னார். அந்த மூல ஓலைச் சுவடிகளின் ஆய்வில் அவர் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் எங்கள் குல முன்னவரான தேவலர் மற்றும் தேவாங்கர் குலச் சிறப்புகளை வெளிக் கொணர ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதாக விவரித்துக் கூறினார்.
அப்பொழுதுதான் நான் செய்த சிறிய ஆய்வான பாரதப் போர் நடந்தது ஆடி மாதமா? மார்கழி மாதமா? ஓர் ஆய்வு. என்ற கட்டுரையை அவரிடம் கொடுத்து அவர் கருத்தை அறிய வேண்டும். நான் எடுத்தாண்ட தகவல்கள் மூல ஓலைகளில் எப்படி உள்ளன? என்று அறிய வேண்டிய ஆவல் உண்டானது. அவரிடம் விஷயத்தை விவரித்தேன்.

அவர் சொன்னது மார்கழி மாதத்தில் தான் போர் நடந்தது என்று பண்டிதர்கள் சொல்லி இருப்பதைச் சொன்னா. நான் என் கட்டுரையின் கோணமான கிரக நிலைகளைப் பற்றி விளக்கினேன். சூரிய / சந்திரன் ரோகிணியில் இருக்கும் பொழுது வரும் அமாவாசை வைகாசியில் தானே வரும் என்பதையும், செவ்வாய் வக்கிர கதி விளக்கம், மற்றும் சுக்கிரன் நிலை பற்றியும் விளக்கினேன். பிறகு நான் எடுத்துள்ள ஆதாரம் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் "மஹாபாரதம்" ஆங்கில மொழி பெயர்ப்பு, அதன் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ள அருட் செல்வப் பேரரசு பற்றியும் விளக்கினேன். அதன் பின்பு கிருஷ்ணர் தூது சென்ற ஸ்லோகத்தின் பொருள்படி கிருஷ்ணர் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்டார் என்று வருகிறது. ரேவதி நட்சத்திரம் கார்த்திகை மாதம் வளர்பிறை 12 ஆம் நாள்தான் வரும். அந்தக் கணக்குப்படி பார்க்க, கிருஷ்ணன் தூது நடக்க 13 + 8 நாட்களை கூட்டினாலேயே மார்கழி பிறந்து விடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அதன் பின்னர் கிருஷ்ணர் திரும்பி போர் ஆரம்பித்திருந்தால் போர் தை மாதம் அல்லவா ஆரம்பித்திருக்கும் என கொக்கியைப் போட்டேன்.

அதன் பின்னர் பீஷ்மர் சொன்ன ஸ்லோகத்தைக் குறிப்பிட்டேன்
AshtaPanchasatam ratrya sayana syasyama gatha Sarashu nisitagresu yatha varsha satam tatha Tribhaga seshah pakshyam suklo

அஷ்ட - எட்டு பஞ்ச - ஐந்து சதம் - நூறு

158 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்ததாக பீஷ்மர் சொல்லுகிறார் என்று எனக்குப் படுகிறது, ஆனால் மொழி பெயர்ப்பாளர்கள் ஏன் 58 நாட்கள் என்று சொல்லுகிறார்கள் எனப் புரியவில்லை என்றும் கேட்டேன்.
அப்பொழுது அவருக்கு ஓய்வு நேரம் முடிந்து விட தன் பிரசங்கத்தைத் தொடரச் சென்றார்.

பிரசங்கம் செய்ய ஆரம்பித்தவர், எடுத்தவுடனேயே, தன்னுடைய மருமகன் புலவர் கி,பிள்ளார் செட்டி அவர்களின் மாணவன் நான் என்பதைப் பொதுவில் அறிமுகப்படுத்தி, பின்னர் இன்று இந்த சிறுபிராயத்தவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது, நிறைய ஆணித்தரமான வாதங்களுடன் ஜோதிடம், கிரக நிலைகள் எல்லாம் சொன்னார். நான் வயதானவன். என்னால் இவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா என பீடிகைப் போட்டுவிட்டு...


இப்பொழுது நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று ஆரம்பித்தார்,
ஒரு காலத்தில் ஒரு நாட்டு அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த நாட்டில் இருந்த மிக உயர்ந்த ஜோதிட ஆசானை அழைத்த மன்னன், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்லச் சொன்னான்.


ஜோதிடர் சொல்லிவிட்டுப் போன பிறகு மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதே நேரத்தில் பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் இந்த யோகம் இருக்குமல்லவா? அவை தன் மகனின் பாதையில் குறுக்கிடக் கூடாதே என்று கவலை வந்தது. உடனே அந்த நேரத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான்.

ஆசான் ஜாதகம் கணித்துவிட்டு மன்னனிடம், மன்னா இந்த உங்களுடைய மகனுக்கு ஒரு யோகம் இருக்கிறது. இவன் உங்களைப் போல பலமடங்கு உயர்ந்தவனாக ஒரு பேரரசசானகத் திகழ்வான் எனச் சொன்னார்.
மொத்தம் ஐந்து வேறு குழந்தைகள் பிறந்திருந்தன. நான்கு குழந்தைகளை வீரர்கள் கொல்ல, ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு அதன் தந்தை தலைமறைவாக அண்டை நாட்டுக்கு தப்பியோடி விட்டான்.


இத்தோடு கதையை நிறுத்திய அவர் இப்பொழுது தாமரைச் செல்வனுக்கு இந்தக் கேள்வி...


இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஓடின. ஜோதிடர் சொன்ன மாதிரியே மன்னன் மகன் பேரரசன் ஆகிவிட்டான். ஜோதிடரின் சீடனுக்கு தப்பிப் போன அந்தக் குழந்தை என்ன ஆகியிருக்கும் என யோசனை வந்தது. ஜோதிடரிடம் அவன் வினவ ஜோதிடரும் அவனும் தீவிரத் தேடலின் மூலம் அந்தக் குழந்தை இருக்குமிடம் அறிந்து அவனைப் பார்க்கப் போனார்கள்.
அங்கே அவன் நாடக மேடையில் ஒரு அரசனாக நடித்துக் கொண்டிருந்தான், சகல பரிவாரங்களோடு.


இரவு வீட்டுக்குத் திரும்பும்போது இல்லாள் உங்களுக்கு இது அவசியமா? என்று கேட்க, நான் விளக்கினேன்.



ஒரே நேரத்தில், ஒரே கோள் அமைப்புகளுடன் பிறந்த அவர்களில் ஒருவன் நிஜ ராஜாவாகவும் இன்னொருவன் நாடக ராஜாவாகவும் இருக்கிறான். அப்படியானால் அவன் விஷயத்தில் யோகம் ஏன் பலிதம் ஆகவில்லை. அல்லது அந்த ஜோதிடமே தவறா? இந்தக் கேள்விக்கான பதிலை நாளை எனக்கு அவர் தரவேண்டும் என விண்ணப்பித்தார்.
சட்டென்று நானும், உங்களின் உத்தரவு நாளை பதில் தரவேண்டும் என்பதால் நாளை பதிலுடன் வருகிறேன் என்று பணிந்தேன்.




இவரிடம் தாங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்காக பலர் வந்து உதவி பெற்று பட்டம் பெற்று உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் செய்நன்றி யறியா பலரை இவர் பார்க்க நேர்ந்ததைப் பற்றி தன்னுடைய புத்தகங்களில் எழுதி இருக்கிறார். ஒரு பெரிய விசயத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புகிறார் என நினைக்கிறேன். எனக்கு அப்பொழுதே பதில் தெரியும் என்றேன்.

என்ன பதில் என்பதையும் என் மனைவிக்கு விளக்கினேன். மனைவி அப்படியானால் உடனே பதில் சொல்லி இருக்கலாமே என்றாள்.
நாளை இக்கதையை அவர் மீண்டும் சொன்னால், அவர் விருப்பப்படியே பதிலளிப்பேன் என்றேன்.

அவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் அளித்திருக்கிறார். அப்பொழுதே நான் பதில் அளித்தால் அது முரட்டுத்தனமாகி விடும். அவர் நாளை பதில் அளிக்கச் சொல்ல சரியான காரணம் இருக்கிறது, நாளை கும்பாபிஷேகம் நடக்கும். நாளை ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். அந்நேரத்தில் அந்தப் பதில் வரவேண்டும் என்பது அவரின் எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது ஆண்டவன் சித்தமாகவும் இருக்கலாம்.


மறுநாள் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவரது பிரசங்கம் மீண்டும் ஆரம்பமானது. நான் ஒரு ஓரத்தில் அமர்ந்து அங்காள பரமேஸ்வரியின் அற்புதங்கள் என்ற அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு இடத்தில் நிறுத்திய அவர் மீண்டும் அந்தக் கதையைக் கூறினார்.
ஜாதக யோகம் மெய்யா? பொய்யா? கதையைக் கூறி விட்டு இதை நமது அம்மனின் அருளுக்குப் பாத்திரமான நண்பர் தாமரையிடம் விடுவிக்கக் கேட்டிருந்தேன் என்றார்.

நான் எழுந்து முன்னே வந்தேன். ஐயாவின் உத்தரவிருந்தால் விடுவிக்கக் காத்திருக்கிறேன் என்றேன்.

அவர் மீண்டும் கூட்டத்திற்கு என்னை அறிமுகம் செய்தார். தன்னுடைய மருமகனின் மாணவன் என்று சொல்லி ஒலிவாங்கியை என்னிடம் ஒப்படைத்தார்.

நான் பேச ஆரம்பித்தேன்.


“ஐயா நான் உங்கள் மருமகனின் மாணவன் என்பதை விட, இன்னொரு சிறந்த அறிமுகம் உண்டு எனக்கு, நான் சிறுவயதில் இருந்தே உங்கள் பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவன்.


1977 ஆம் டிசம்பர் மாதம்.. மார்கழி காலை பிரசங்கத்தின் போதுதான் முதன் முதலாக உங்கள் குரலைக் கேட்டேன்.


ஆழியில் புக்கு முகர்ந்து கொடு.. அதாவது கடலில் இறங்கி அதில் ஒரு குவளையேனும் அள்ளி உலகிற்குக் கொடு என்பதையே சிரமேற் கொண்டு, “வைணவக் கடலாகிய” உஙகளிடம் பெற்ற சிறு அறிவு எனக்கு தெளிவிப்பதைச் சொல்கிறேன்.


ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்... ஆழியில் புக்கு முகர்ந்து கொடு என்ற உங்கள் குரல் இன்னும் காதில் அப்படியே இருக்கிறது.


இந்தக் கதையை கேள்விகளின் மூலமே அலசலாம்.

ஒரு நேரத்தில் ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஆறும் வெவ்வேறு இடத்தில், குலத்தில், செல்வாக்கில் பிறந்தன.

ஜாதகம் மட்டுமே எல்லாம் என்றிருந்தால் ஸ்தான பலங்களின் படி எல்லா குழந்தைகளும் அரச குடும்பத்தில் மட்டுமே அல்லவா பிறந்திருக்க வேண்டும்? ஏன் அப்படி இல்லை?


உலகில் ஒரே சமயத்தில் பல்வேறு ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பிறக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?


ஆக முக்கியக் காரணம் என்ன வென்றால் அது கர்மபலன் ஆகும். கர்மபலனின் படியே ஒருவன் அரச குடும்பத்திலும் பிறர் பிறகுடும்பங்களிலும் பிறந்தனர்.


ஆக ஜாதகமே, கிரக நிலைகளே எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் என்ற வாதம் அதனோடே முடிந்து போகிறது.
அப்படியானால் கிரகங்கள், கிரக நிலைகள், ஜாதகம் இவற்றின் பலன் என்ன என்பது என்பது அடுத்த கேள்வி.


ஜாதகன் தன் பிதாவை விட 10 மடங்கு சிறப்புறுவான் என்பான். இது பித்ருஸ்தானத்தை விட ஜென்மஸ்தானம் வலிமையாக விளங்குவதைக் கொண்டு அறியப்படுகிறது.


கிரகங்கள் உபகாரணமாக அமைகின்றன, கர்மபலனை அடைய அவை உதவுகின்றன அவ்வளவே. உங்கள் கர்மபலன்கள் மூல காரணம். கிரகங்கள் அவற்றின் உபகாரணம்.
இதை விளக்கவே இந்தக் கதை உதவுகிறது, இந்தக் கதையின்படி யோகம் எப்படிப் பட்டது என்றால்,
பிதாவின் நிலை 10 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 10 = 100
இதைக் கணிதத்தைக் கொண்டு எளிதாக விளக்கலாம்.


மிச்சம் நான்கு குழந்தைகளின் அப்பாக்கள் அரசனுக்காக உயிர்விடும் / உயிர்விட்ட சிப்பாய்கள். ஆக அவர்களின் குழந்தைகளும் பேரரசு ஆசை கொண்ட அரசனுக்காக பிறந்த உடனேயே உயிர் கொடுத்தார்கள்.

பிதாவின் நிலை 1 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 1 = 10
பிதாவின் நிலை 0 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 0 = 0
அரசனின் மகன் 10 மடங்கு உயர்ந்து பேரரசன் ஆனான்.
ஆக கர்மபலனின்படி 6 குழந்தைகள் பிறக்கின்றன.
நாடக ராஜாவின் அப்பா, சிறு வேஷங்களில் நடிக்கும் நடிகன். அவன் மகனும் 10 மடங்கு உயர்ந்து ராஜபார்ட் ஆனான்.


ஒரு சின்ன இழை இத்தனைச் சம்பவங்களையும் கோர்த்து இருக்கிறது. அரசனுக்கு சந்தேகம் வந்தபோது அவன் அதை உடனடியாக ஜோதிடரிடம் அந்தச் சந்தேகத்தைக் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.


ஆக கிரக பலன் என்பது நாம் எப்படி நமது கர்ம பலன்களை அனுபவிக்கப் போகிறோம் என்பதைக் காட்டுகிறது. அது நமது கர்ம பலன்களை காட்ட முடியாது. அதை ஜோதிடர்கள் குறிப்பாலும் தன் ஞானத்தாலும் மட்டுமே அறிய முடியும்.
இப்பொழுது இன்னும் சற்று ஆழ நோக்குவோம்.
தன்னைப் போலவே இன்னொரு அரசனின் மகன் மட்டுமே இப்படி ஒரு அமைப்புடன் பிறந்திருக்க முடியும் என அவன் எண்ணி இருக்கலாம் எண்ணவில்லை. அப்படி எண்ணி இருந்தால் மற்ற நாட்டு மன்னர்களுடன் ஆரம்பத்திலேயே பகை வ ஏற்பட்டு அரசனின் மகன் இறக்க நேரிட்டிருக்கலாம்.


கீதையில் ஞான யோகத்தை விட எளிதானது கர்ம யோகம் என்கிறான் கண்ணன். காரணம் இந்த மாயைதான்.


அதையும் விட்டு தன் மகனின் எதிரிகளைக் களைந்து விட வேண்டும் என முடிவெடுத்தான் அல்லவா? அதுதான் மாயையின் விளைவு. அந்த ஒரு சின்ன மாயையால் ஆறு ஜாதகர்களும் அவர்களுக்கு உரிய பலன்களைப் பெற்றார்கள்.
ஆக அந்த யோகம் ஆறு பேர் விஷயங்களிலும் பலித்தது. கிரகபலன்கள் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. இந்தத் தோற்ற மயக்கம் நமக்குப் பல நேரங்களில் நடக்கிறது.




நாம் செய்யும் ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பது இம்மாயையால் நமக்குத் தெரிவதில்லை.

அதனாலேயே கர்மத்தை மட்டுமே செய் என்கிறான் பகவான். நம் மனமெனும் தேரின் சாரதியாக மனசாட்சியாக கண்ணனே வீற்றிருக்கிறான். அந்த மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு அந்தச் செயல்களைச் செய். அவற்றால் உண்டாகும் பலன்களைப் பாராதே. அவை மாயையின் காரணமாக நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ தோன்றலாம். அதன் விளைவு உனக்கு இழப்பாகவோ அல்லது இலாபமாகவோ தோன்றலாம். ஆனால் அவை அத்தனையும் மாயை. பலரின் கர்மபலன்களை பிணைக்கும் மாயவலை. அதில் மனசாட்சியில் அமர்ந்த ஆண்டவனின் சமர்ப்பணத்திற்கு உன்னை ஆட்படுத்திக் கொள். உனது கர்ம வினைகள் அத்தனையும் தானே அற்றுப் போய் அவன் விருப்பப்படி அவனடி சேர்வாய்,

ஆக இக்கதை எனக்குத் தெளிவாக்கிய நீதி

கிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.

ஆகவே நம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம். அதுதான் உய்ய ஒரே வழி...அத்தனைக் கர்மங்களையும் அது தொலைத்து முக்தி அளிக்கும் எளிய வழி அதுவே”


விடையைச் சொன்ன பிறகு ஐயா தன் உரையைத் மீண்டும் தொடங்கினார்..

வாதம் என்று ஒன்று உண்டு.. விதண்டாவாதம் என்று ஒன்று உண்டு..
வாதம் என்றால் சத்தியம் வெளிப்படும். நான் எழுப்பிய கேள்விக்கு கி்ட்டத்தட்ட சரியான விடை அளித்து தான் விதண்டாவாதி அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் தாமரைச் செல்வன்,

விதண்டாவாதம் என்றால் சண்டை வெளிப்படும்
ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஐந்தாம் இடத்தைச் சொல்லுவார்கள். லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் . இந்த ஸ்தான பலம் நோக்கப்படும். ஜன்ம ஸ்தானத்தின் பலமும் நோக்கப்படும்.

இதே போல் ஒன்பதாமிடம் என்பது ஒன்பதாம் பாவத்தை பிதா(தகப்பனார்) ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும்.
இந்த யோகம் பலனளிக்க ஜென்ம லக்ன பலமும், பூர்வ புண்ணிய பலமும் தேவைப்படுகிறது. அப்பலன் இல்லாவிடில் யோகம் பலனளிக்காது என யோகங்கள் பற்றிய தன் விளக்கத்தையும் அளித்தார்.

பத்தாம் பாவத்தை ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பத்தாம் பாவம் அமைந்த ராசியதிபதி கர்மாதிபதி என்று அழைக்கப்படுவார்.
இந்த ஒன்பதாம் இடம் மற்றும் பத்தாம் இட அமைப்பினால்தான் இந்த யோகம் உண்டாகிறது.
அவர் நினைத்திருந்தால் என்னை தவிர்த்திருக்கலாம். எதையாவது சொல்லித் தட்டிக் கழித்திருக்கலாம். அல்லது என்னை பின்னர் வரச் சொல்லி இருக்கலாம்.

அதன் பிறகு பிரசங்கம் முடிந்த பின்னர், என்னை அழைத்து தன் முகவரியை அளித்து மூன்று மாதங்களுக்குப் பின் என் குறிப்புகளை கொண்டு வந்து அளிக்கச் சொன்னார்.
என்னைச் சோதித்ததும் அல்லாமல் எனக்கும் ஒரு அறிமுகத்தை உண்டாக்கித் தந்தார். தான் செலவிடும் நேரம் உரிய மதிப்பைப் பெறுமா என்பதையும் சோதித்துக் கொண்டார் என்றே கருதுகிறேன்.

கிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.

நம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம்.

No comments:

Post a Comment