Wednesday, September 15, 2010

படிச்சதும் கடிச்சதும்

 

Set என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 192 அர்த்தங்கள் உண்டாம்..!


எத்தனை இருந்து என்ன பிரயோசனம். நமக்குதான் ஒண்ணும் Set ஆகமாட்டேங்குதே!!!

கொசுக்களை நீல நிறம் அதிகமாகக் கவருமாம்..!

அப்புறம் பகல்ல ஏன் வானத்தை நோக்கிப் பறக்கறது இல்லை?

கங்காரு விலங்குகளால் பின்புறமாக நடக்க இயலாதாம்..!

அப்போ முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்னு சொல்றவங்களை கங்காருன்னு சொல்லலாம்னு சொல்லுங்க.


அமெரிக்கர்கள், தினமும் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிட்சாவை தின்று தீர்க்கிறார்களாம்..!

ஒரு ஏக்கர் 100 செண்ட்,. ஒரு செண்ட் 100 சதுர மீட்டர். அதாவது 7 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர். ஒரு சதுர மீட்டர் பிஸாவை 16 பேர் சாப்பிடறாங்க அப்படின்னு வச்சுகிட்டா அமெரிக்காவில் 1 கோடியே25 லட்சம் பேர் ஒரு நாளைக்கு பிஸா சாப்பிடறாங்க. அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடி. அதாவது 4 சதவிகிதம் பேர். கொஞ்சம் கொறைச்சலாதான் இருக்கு.

நம்ம நாட்டுல இவ்வளவு பேர் சாப்பிடறதே இல்லை.  

சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது.

எட்டுன தூரம் வரை சுட்டும் விரல்னு சொல்றாங்களோ??


அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

அடராமா

உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

ஆளுக்கொரு கோழி வச்சு ஆண்டவன் படைச்சான்னு சொல்லுங்கோ!!!

(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ

யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)
ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

புதுசா? பழசா??

இல்லை 5 ரூபா மாதிரியே ஹம்மிங் பறவையும் (தேன்சிட்டு) இளைச்சுகிட்டே போகுதா?
அப்போ சுத்தத் தேன் எடையைக் குறைக்க உதவும்னு ஒரு அழகுக் குறிப்பு போட்டுடலாமே!! 

அகராதியில் ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தப்பா இருந்தா யாருக்குத் தெரியும்..?

படிக்கிறவங்களுக்கு.


நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?

நாய்க்கு பிஸ்கட் போட்டு பிராக்கெட் பண்ணும் திருடங்கதான் சொன்னாங்களாம்.



அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சா செத்துப்போயிடுவோம்ன்னு உலகுக்கு உணர்த்திய தியாகிக்கு அப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா..? இல்லே பசிக்கு தின்னுருப்பாரா..?

அது ஒரு மாமியாரோ மருமகளோ சொன்னதா இருக்கலாம் இல்லியா! தியாகி மட்டும் இல்லை துரோகியும் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். ஹி ஹி..

சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?

அவங்களுக்குக் கிடைக்காதுங்கறது அவங்க ஜாதகத்தில இருக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ?? ஏன்னா இந்த லாட்டரியை வெல்வேன் அந்த பதக்கத்தை வெல்வேன் அந்த பந்தயத்தை வெல்வேன் அப்படின்னு அவங்க அறிக்கை கூட விடறதில்லையே!!!

டோக்கியோ நகரில், காரைவிட சைக்கிள் சீக்கிரம் பயணதூரத்தைக் கடக்கும்..!


பெங்களூரிலும் அப்படித்தானாம்..



சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!

நாம கடிகாரம் கட்டிகிட்டு சூதாட்ட விடுதிக்குள்ளப் போனா விடமாட்டாங்களா? அடப் பாவமே! நான் உள்ளயே அடகு வச்சுக்கற வசதி இருக்கும்னு நெனச்சேன். 

பொதுவாகவே வாயை மூடிட்டு இருக்கறது நல்லது.. முக்கியமா நீங்க தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கும்போது..!

ஆமாம் வாயைத் திறக்காம எப்படி தண்ணியில முழுகறது?

ஒருக்காலும் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் இந்த நிலையை அடைய என்னென்ன அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்ததோ..?

அதை கேட்டுச் சந்தோஷப்படவாவது ஒப்பிடணும் போல இருக்கே!!!

ஒரு வேலையை மகா சொதப்பலா செய்யறதிலக்கூட ஒரு நன்மை இருக்கு.. மறுபடி உங்ககிட்ட அதே வேலையைத்தர யாருக்கும் தைரியம் வராது..!

அதுக்குப் பதிலா வேலையே செய்யாம இருந்தா எந்த வேலையையுமே யாருமே குடுக்க மாட்டாங்க இல்லியா?

சமரசம் : நமக்கு கிடைத்திருப்பதே மற்றவர்களுக்கு கிடைத்திருப்பதைவிட அதிகம் என்று எல்லோரையும் நம்பவைக்கும் கலை..!


அடி உதையைக் கூடவா?? 
.

Tuesday, September 7, 2010

உங்க மேனேஜர் இம்புட்டு நல்லவரா?






கீழே இருப்பது இணையத்தில் பழகிப் புளித்துப் போன மென்பொருள் புராஜக்ட். நான் இந்த டீமுக்கு மேலாளரா இருந்தால் அவர்களின் பணி ஆய்விற்கான ரிபோர்ட்டை எப்படிச் செய்வேன் தெரியுமா?




1. மார்க்கெட்டிங் என்பதன் உச்சமே கஷ்டமருக்கு என்ன தேவை என்ப்தை மறக்கச் செய்வதே ஆகும். வாடிக்கையாளருக்கு என்ன வேண்டும் என்பதைக் கொடுக்க ஒரு சேல்ஸ்பாய் போதும். இதுதான் நீங்கள் விரும்புவது என ஒரு பொருளை வாடிக்கையாளருக்கு அறிமுகப் படுத்துவதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை. வாடிக்கையாளரும் அந்த விரிவுரையில் மயங்கி ஆர்டர் கொடுத்திருக்கிறார். எனவே மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் தன் பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார்.



வாடிக்கையாளருக்கு தன் தேவையைச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மூன்று பலகைகள் அவருடைய விவரிப்பில் இருக்கின்றன. இரண்டை அவர் உபயோகப்படுத்தவே போவதில்லை.


புராஜக்ட் லீட் தன்னுடைய மேன்மையான நேரத்தை உபயோகப்படுத்தி, மூன்று பலகைகள் தேவையில்லை ஒரே பலகை போதும் என சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் தயாரிப்புச் செலவு வெகுவாக குறையும். வாடிக்கையாளர் தான் ஊஞ்சலாட விரும்புவதாக ஆரம்பத்தில் சொல்லவே இல்லை. அதனால் கயிறின் இரு முனைகளையும் இருவேறு கிளைகளில் கட்டியதன் மூலம் எடை வெவ்வேறூ கிளைகளுக்கு பிரிவதால் உறுதி அதிகமாகிறது. இதனால் ஊஞ்சல் மேலும் அதிக எடையைத் தாங்கும் சக்தி உள்ளதாக இருக்கிறது. எனவே புராஜக்ட் லீட் தன்னுடைய நுண்ணறிவின் மூலம் செலவைக் குறைத்து தரத்தை உயர்த்தி மிகச் சிறப்பான காரியம் செய்திருக்கிறார்.

இதைப் பொறியாளர் வடிவமைத்த பிறகே ஊஞ்சலாடவும் வெண்டும் என்ற மாற்றம் வந்திருக்கிறது. அதை, மிகத் திறமையாக பொறியாளர், மிகக் குறைந்த நேரத்திலும், மிகக் குறைந்த மாற்றங்களுடனும் வடிவமைத்து இருக்கிறார். இது அவரின் மிகச் சிறந்த மதிநுட்பத்தையும் செயலாக்கத் திறனையும் காட்டுகிறது.

ப்ரோக்ராமருக்கு வாடிக்கையாளர் சரியான தகவல்களைத் தரவில்லை. அவர் சொன்னது பலகையை மரத்தில் இருபுறமும் கட்டவேண்டும் என்பதுதான். அவருடைய இதற்கு முந்தைய புராஜக்ட் ஒரு பசுவை மரத்தில் கட்டுவதாகும். அதற்கு எழுதிய அதே கட்டளைகளை மீண்டும் உபயோகித்ததின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தினார். இதனாலேயே புராஜக்டை உரிய நேரத்தில் முடிக்க முடிந்தது.



டெஸ்டிங் டீம் இந்த புராஜக்டில் இல்லை என்பதுதான் உண்மையானப் பிரச்சனை இங்கே. வாடிக்கையாளர் டெஸ்டிங் தேவையில்லை என்று சொல்லிவிட்டதால் புராஜக்ட் டெஸ்டிங் செய்யப்படவில்லை. எனவே கம்பெனியில் இதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது.




உண்மையாப் பார்க்கப் பொனால், ஆபரேசன்ஸ் டீம் மிக அழகாக வாடிக்கையாளரின் உள்ளம் அறிந்து செயல்பட்டிருக்கிறது. சரியாக ஒரு கயிறை மரத்தில் கட்டி இருக்கிறது. வாடிக்கையாளர் அவர் இஷ்டத்திற்கேதுவான டயரையோ அல்லது தனது தலையையோ தொங்கவிட்டுக் கொள்ளலாம். எந்தக் கம்பெனி டயர் என்று சொன்னால் ஆபரேஷன்ஸ் டீம் வாங்கி மாட்டி விடுவார்கள்.

டாக்குமெண்டேஷன் டீம் இருப்பதிலியே மிகச் சிறப்பான வேலையைச் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் உதவும் வகையில் டாக்குமெண்டை அழகாகத் தயார் செய்திருக்கிறார்கள். தற்போது வாடிக்கையாளர்களிடம் உள்ள பொருளுக்கும் இந்த டாக்குமெண்டேசனுக்கும் ஒரு வித்தியாசம் கூடக் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு தொலை நோக்கோடு செயல்பட்டு உள்ளார்கள்.

வாடிக்கையாளர் அடிக்கடித் தன் தேவைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப பில் செய்யப்பட்டிருக்கிறார். டிஸைனில் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும் போதும் இப்படி செலவுகள் அதிகரிப்பது சகஜம்தான். வாடிக்கையளர் சரியான தேவைகளைக் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது.



வாடிக்கையாளர் சேவைப் பிரிவுதான் மிகக் கனக்கச்சிதமாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் பிரச்சனைகளை அலசும் விதம் மிகத் தீர்க்கமானது. இத்தனை களேபரங்களுக்கும் மூல காரணம், வாடிக்கையாளர் வீட்டின் புல்வெளியில் ஒரு மரம் இருந்ததுதான் என்பதை மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த மரத்தினால்தானே ஊஞ்சல் ஆசை. அந்த ஆசையில் தானே இத்தனைக் களேபரங்கள். அந்த மரத்தை அகற்றியதன் மூலம் பிரிச்சனையின் ஆணைவேரையே அகற்றி வாடிக்கையாளருக்கு இனி ஒரு பிரச்சனை கூட வராத அளவிற்கு செயல்பட்ட இவர்களை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும்.


ஆக மொத்தம் நம் கம்பெனியின் அத்தனை ஊழியர்களும் திறமையாகவும், விவேகத்தோடும், அர்ப்பணிப்பு உணர்ச்சியோடும் செய்த இந்த புராஜக்ட் மாபெரும் வெற்றி அடைந்தது என்று அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்..


Friday, September 3, 2010

சீட்டு - விளையாட்டு!!




ஒரு நாள் ஒரு ட்ரெய்னிங் ப்ரோகிராம். அதில நானும் இன்னொரு என்னோட பலியாடும் கலந்துகிட்டோம்..

அதில அஞ்சு பிரிவா இருந்தது. சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக ஒரு ப்ரிவு முடிஞ்சது சீட்டுக் கட்டில ஒரு சீட்டு உருவிக்கணும்

ஐந்து பிரிவு பயிற்சியும் முடிந்ததும் யார் கைல போக்கர் விளையாட்டு விதிப்படி அதிக மதிப்புள்ள சீட்டுகள் இருக்கோ அவர்களுக்கு பரிசு உண்டுன்னு சொன்னாங்க.

எனக்கு முதல் கார்டா வந்தது டைமண்ட் குவின்.

அதைக் காட்டி அவர்கிட்ட கேட்டேன். இதுக்கப்புறம் என்ன?

அவர் முழிச்சார்,


குவின் டைஸ் - கிங் ரீ மேரிஸ். அதாவது இராணி செத்துப் போறா. அதனால ராஜா மறுமணம் செய்துக்குவாறு என்றேன்.


அதான் அதேமதிரிதாங்க அவரும் என்னைக் கொலைவெறியோடப் பார்த்தாரு..

அடுத்த சுற்று பயிற்சி முடிந்ததும் மறுபடியும் சீட்டு வினியோகிக்கப் பட்டது.

இம்முறை எனக்கு வந்தது கிங் டைமண்ட்.

அதையும் அவருக்குக் காட்டினேன். குவின் டைஸ், கிங் டைஸ், ஒய்? ஏன் என்று கேட்டேன்.

அவரும் உங்களை மாதிரிதாங்க, பேந்தப் பேந்த விழிச்சார்.

பிகாஸ் ஜாக் ஈஸ் கிளவர் அப்படின்னேன்.


அவர் என்னை அடிக்க ஆள் வச்சி நேரம் பார்த்துகிட்டு இருக்கறதா கேள்வி!!

Friday, August 27, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 2




நீலவேணிக் கரையோரம் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன. நீலவேணி பதறிப் போனாள். பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் அவளுக்கும் பாலமிட்ட புதர்கள் காணாமல் போனது வலிக்கத்தான் ஆரம்பித்தது. அவள் தொட்டு அணைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே சென்ற அந்தச் சொந்தங்களின் இழப்பு அவளுக்கு சோகத்தை உண்டாக்கியது...

அவள் இரு விலாக்களின் ஓரமும் சிந்தனாவாதிகள் காலாற நடந்தனர். அவளருகில் அமர்ந்து பல கதைகள் பேசினர். கதைகளை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே மெதுவாக ஒலியெழுப்பிச் செல்வாள் நீலவேணி.

குடிசைகள் சற்று இடம் மாறி இருந்தன. நீலவேணி இன்னும் அங்கிருந்த எல்லோர் வாழ்விலும் பங்கு பெற்றிருந்தாள். பறவைகள், விலங்குகள் தாவரங்கள் மற்றும் சிந்தனாவாதிகள் எல்லோருக்கும் அவள் தேவையாக இருந்தாள்.

சிந்தனாவாதிகள் கைவேகம் குறைய ஆரம்பித்தது, அவர்களின் இதயம் அங்கீகாரத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. யாராவது வந்து ஆஹா இது அற்புதம் என்று சொல்ல மாட்டார்களா? நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன? இதைப் பார்ப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என நமக்குத் தெரியவா போகிறது?

மிகப் பெரிய கவலை சிந்தனா வாதிகளைச் சூழ்ந்து கொண்டது. எல்லாம் எதற்காக என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது.

மீண்டும் நீலவேணியின் கரையில் அமர்ந்தார்கள்.

எதற்காக இங்கே வாழ்கிறோம் என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பித்தனர்.

நாம் மட்டுமே என்பதில் ஒரு அர்த்தமும் இருப்பதாக படவில்லை எனக்கு.. முதல் சிந்தனையாளன் ஆரம்பித்தான். நீலவேணிக்கு சிறிது குழப்பம். இந்த நாம் என்பதில் தானும் சேர்த்தியா இல்லையா என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

காலம் என்பது நீண்டு கொண்டே போனாலும் அதில் நம்முடையது என்பது மிகச்சிறிய துண்டாகவே தெரிகிறது என்றார் இரண்டாமவர்.

அந்தத் துண்டை நாம் நீட்சி செய்ய வேண்டும் என்றார் மூன்றாமவர்.,,

நீட்சி செய்யலாம்.. யாருக்காக? எதற்காக? கேள்விகள் பிறந்தன சிந்தனாவாதிகளிடமிருந்து.

நீலவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாட்கள் யாரும் இப்படி கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. கேள்வி என்பது அவள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது.

எல்லோரையும் இங்கே வந்து பார்க்கச் செய்யவேண்டும்..

முதல் சிந்தனாவாதி உதிர்த்த அந்த வார்த்தைகள்..

வரமா? சாபமா..? தெரிய நியாயமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது சிந்தனாவாதிகளுக்கு.

சிந்தனாவாதிகள் தீவிர சிந்தனை வசப்பட்டனர். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெளிவில்லாமல் இருந்தது.

பொந்துக்குள் ஒரு வால் தெரிந்தது. அது எலி வாலா பாம்பு வாலா தெரியவில்லை.

சிந்தனாவாதிகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வட்டமாகவும் வாட்டமாகவும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

போக்குவரத்து உண்டாக்கப்படவேண்டும். பலர் வந்து போக வேண்டும். அவர்கள் நம் தீவை(?) பார்த்துச் சிலாகிக்க வேண்டும்..

அதற்கு என்ன செய்யலாம்?

யாரேனும் வந்தால் தங்க வேணாமா.. இன்னும் சில குடிசைகள் வேண்டும். முதல் சிந்தனாவாதி சொன்னார்.

தங்கினால் போதுமா? உணவு, போக வர வசதி? இரண்டாம் சிந்தனாவாதி சொன்னார்..

இது ஒருபுறம் செய்வோம். ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதே பலருக்குத் தெரியாதே.. மூன்றாம் சிந்தனாவாதி யோசிக்கத்தூண்டினார்..

இதுநாள் வரை பேசியே இராத நான்காவது சிந்தனாவாதி பேச ஆரம்பித்தார்.

கற்பனை செய்யுங்கள்.. அந்தக் கடல் வழியே பெரும் படகொன்று வருகிறது. படகில் ஜனங்களும் பொருட்களும் வருகின்றன. நீலவேணியில் நீர் மேலேறும் ஓத ஏற்றத்தில் படகுகள் மேலே வருகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள துறையில் இறங்கி வந்த ஜனங்கள் தத்தம் குடிசைகளுக்குச் சென்று இளைப்பாறுகிறார்கள்.


பொருட்கள் எதற்கு? முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

பொருட்கள் தேவை.. தேவை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.. இங்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க.. அவர்களுக்கு உணவு சமைக்க, பரிமாற.. இரண்டாம் சிந்தனாவாதி ஆரம்பிக்க

அப்புறம் காடுகளுக்கும் மலைகளுக்கும் நீலவேணியின் நளினப் பகுதிகளுக்கும் பாதை அமைக்க வேண்டும். இளைப்பாற அங்கங்கே சின்னப் பூங்காக்கள்.. இரண்டாமவர் தொடர்ந்தார்

ஆமாம் விருந்தினர்கள் வரும்பொழுது எல்லாம் தேவை.. கூடவே உணவுப் பொருட்கள்.. எல்லோரும் நம் போல கனிகள் காய்கள் கிழங்குகளோடு திருப்தி அடையமாட்டார்கள். தானியங்கள் வேண்டும். சமைக்கப் படவேண்டும். இறைச்சிகள் வேண்டும்.. மசாலாக்கள் வேண்டும்.. மூன்றாமவர் தொடர்ந்தார்..

எல்லாவற்றையும் வெளியில் இருந்துதானா கொண்டு வரவேண்டும்? இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க? நான்காமவர் மீண்டும் கேள்விகளை வீசினார்.

கேள்விகள் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. கேள்விகள் சிந்தனையைத் தீண்டின. தூண்டின. பதில்கள் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக தலை நீட்டின. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருப்பதில்லை சிந்தனாவாதி ஒன்று ஒரு பெருமூச்சு விட்டார்.

எல்லா பதில்களும் கிடைத்த பின்னால்தான் பயணம் தொடங்கினோமா இரண்டாமவர் கேட்டார்.

மீண்டும் கேள்விகள் மூன்றாமவர் மெல்லச் சிரித்தார்.

நீலவேணிக்குச் சற்று கலக்கமாக இருந்தது, இவர்களின் பேச்சின் நீளம் அவளின் மொத்த நீளத்தை விட அதிகமாக இருந்தது. ஒன்றும் புரிந்த பாடும் இல்லை. பலவித மாற்றங்கள் வரும் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.

மாற்றங்களுக்கு எல்லாம் நானே காரணம் என்ற அவளின் அகந்தைக்கு சற்று பெரிய அடியாகவே விழுந்தது, மௌனமாக அவள் சென்றாலும் அவளின் பாதையில் சற்றே உப்பு படிவது அவள் அழுவதை உணர்த்தியது.

தொடரும் .

Thursday, August 26, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 1





ஒரு தன்னந்தனித் தீவு.. அந்தத் தீவில் எத்தனையோ மரங்கள். பாறை இடுக்கிலும்,சமவெளியிலும், பள்ளங்களிலும், மலை முகடுகளிலும் அங்குமிங்கும் எங்குமாக பலப் பல மரங்கள். மரங்களில் சிலவற்றில் கனிகள் உண்டு. சில வெறுமனே நெடு உயரம் வளர்ந்து வெகுதூரத் தொடுவானத்தில் என்ன தெரிகின்றதென எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மெல்லிய கொடிகள் மரங்களின் உயர வித்தியாசங்களை கவனிக்காமல் அருகே இருந்த மரங்களின் மேல் படர்ந்து வளர்ந்திருந்திருந்தன. சின்னஞ்சிறு புதர்கள்.. புற்கள்.. 

அத்தனை பசுமைக்கும் ஆதாரமாய் அந்த மலை உச்சியில் இருந்து ஒய்யாரமாய் வளைந்து இடையசைத்து நடப்பாள் அந்த நீலவேணி. மனதுக்குள் சின்ன கர்வம் அவளுக்கு.. உச்சியில் இருந்து குதிக்கும் பொழுது ஆராவாரமாய் சிரிக்கும் அவளது கலகலச் சிரிப்பொலி அந்தத் தீவெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை வேர்களுக்கும் தான் மட்டுமே ஆகாரம் தரவேண்டும் என்ற ஆசை அவளுக்கு,

இங்கிருக்கும் ஒவ்வொரு பூவும் எனக்காகப் பூத்தது.. அவ்வப்பொழுது அவளுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். அவ்வப்பொழுது மழை பெய்தால் கோபப்படுவாள்.. குமுறுவாள்.. கொந்தளிப்பாள்.. தன் அருகில் உள்ள புதர்கள், மரங்கள் மீது சீறுவாள். 

எல்லாம் இப்படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாவாய் அந்தத் தீவோரம் ஒதுங்கியது...

சில சிந்தனைவாதிகள் அந்த நாவாயில் இருந்தனர். உலகத்தைப் புரிந்து கொள்ளக் கிளம்பிய சில சிந்தனைவாதிகள்.. அவர்களின் காலடி பட்டதும் மரங்களுக்கும் அந்தச் சிந்தனை வாதிகளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, அவர்களுக்கும் நீர் கொடுத்தாள். பூக்கள் பூப்பார்களென்ற எதிர்பார்ப்பில்..



சிந்தனைவாதிகளுக்கு அந்தத் தீவு மிகவும் பிடித்தே இருந்தது. அழகிய இயற்கையின் மடி. இதுதான் நாம் இருக்க வேண்டிய இடம்.

தீர்மானித்தவர்கள் நீலவேணியின் கரையையே தேர்ந்தெடுத்தார்கள். இங்கு அழகான சில குடில்கள்.. நமக்கு சகல வசதிகளும் இங்கே உண்டு..

சில மரங்கள் வெட்டப்பட்டன, சில ஓலைகள்.. நீலவேணியின் ஓரமிருந்த ஈரம் பொதிந்த களிமண்.. சில நாட்களில் குடிசைகள் தயாராகி விட்டன.

சிந்தனை வாதிகளுக்கு இப்பொழுது நீல வேணியிடம் நெருங்கிய நட்புண்டாகி விட்டது. நீலவேணிக்குச் சந்தோஷம். வெளிப்படையாய் இதுவரை எந்த மரமும் நன்றி சொன்னதில்லை. அவளைச் சிலாகித்ததில்லை. சில மரங்கள் போனது அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஆனால் அதனால் உண்டான விளைவு அவளுக்கு பெருமை தரக்கூடியதாய் இருந்தது..

அவர்கள் அவள் மீது படகு கட்டி உலாவினார்கள். அவளுக்குள் மீன் பிடித்தார்கள். அவளுக்குள் நனைந்து சுத்தமானார்கள். அவர்களின் பொழுதுகளில் அவள் மிகப் பெரிய பங்குகளை வகித்தாள்.


மாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது.

ஏன் என்ற கேள்வியை சிலர் ஒரு முறை கேட்டுவிட்டு விஷயத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். கிடைக்கும் பதில்களில் உடனடி திருப்தி கொள்ளாதவர்கள் தங்கள் மனதில் திருப்தி வரும் வரை ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் தான் விரும்பிய பதில் வரும் வரையில் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்க்கை நீரோட்டமாய் முன்னோக்கிச் செல்லும் வரையில் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதன் ஓட்டத்திற்குத் தடை உண்டாகிற போதுதான் ஏன் என்ற கேள்வி முதன்முறையாக எழுப்பப் படுகிறது.

இரண்டு மூன்று குடிசைகளுடன், சில சிந்தனாவாதிகளுடன் நீலவேணியும் அந்தத் தீவும் அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகின்றன..

அமைதியான தீவில் ஆளரவமற்ற இடங்களில் தனிமையாய் இனிமையாய் வாழ்ந்து முடிந்து போவது மட்டுமே வாழ்க்கையா? ஒரு சிந்தனாவாதிதான் முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன பலன் இருக்கப் போகிறது? இரண்டாம் சிந்தனாவாதி தன் மனதில் ஊறிய எச்சிலைத் துப்பினார்.

நாம் பலகாலம் வாழப்போவதில்லை.. காற்றை இழுத்து வேகமாக வெளியேற்றினார் மூன்றாமவர்.. கொஞ்ச காலம். பின்னர் மூப்பு மரணம்.. நாம் இங்கிருக்கும் மண்ணோடு கலந்து விடப் போகிறோம். சிந்தனாவாதிகள் இருந்ததிற்கு அடையாளமே இருக்கப் போவதில்லை. 

என்றோ வரும் இன்னொரு சிந்தனாவாதிகளின் காலில் நம் மண்டையோடுகள் இடறக் கூடும். நமது சிலபல எச்சங்களும் காணக்கூடும். இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கலாம் என்றும் எண்ணக் கூடும்..

சொன்னார் முதலாம் சிந்தனாவாதி.

எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். நாம் அறிவு மிகுந்தவர்கள். புத்திசாலிகள்.. இதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும்.. ஆலோசித்தார் இரண்டாம் சிந்தனாவாதி..

கல்லில் எழுதுவோம்.. அவை நீண்ட நாட்களுக்கு அழியாது.. மூன்றாம் சிந்தனாவாதிக்கு பளிச்சென எண்ணம் மின்னியது..

எழுத ஆரம்பித்தார்கள்.. 

வாழ இருந்த காலம் போதுமானதாக இல்லாமல் போய் விட்டது இப்போது.

உணவு ஓரிடம், வாழ்க்கை ஓரிடம், கதை எழுத மலை உச்சி.. இப்படி தீவு முழுதும் தினமும் அலையத் தலைப்பட்டனர். நீல வேணியிடம் அவர்கள் செலவிடும் காலம் குறுக ஆரம்பித்தது..

தொடரும்

.

Sunday, August 22, 2010

படிச்சதும் கடிச்சதும்




 படிச்சது

நேத்து உன்னையும், உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!...
பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால்
அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"


கடிச்சது
அதிர்ஷ்டம் அடிக்கலாம்.. ஆனா கழுதை உதைக்குமே!!!


படிச்சது

துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.
வலித்தால் சொல்லிவிடு நிறுத்தி விடுகிறேன்.
துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.




கடிச்சது
உனக்கெதுக்கு சிரமம்! துடிக்கறதை நானே நிறுத்திடறேன்.

படிச்சது

ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!


கடிச்சது
ஆனா உன் கோலத்தைப் பார்த்துதானே உங்க வீட்ல தண்ணி தெளிச்சாங்க

படிச்சது

காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது.

கடிச்சது

ஏன், நம்ம தலை காலிஃபிளவர் சாப்பிட மாட்டாரா?


படிச்சது

கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது.
கடிச்சது

அதைக் கோல்டில கவரிங் பண்ணி வைக்கறாங்க. http://www.dinamalar.com/Incident_de...?news_id=17275

படிச்சது

கோல மாவில் தோசை சுட முடியாது.

கடிச்சது

எந்த மாவிலும் தோசை சுட முடியாது,, தோசைக்கல்லில் தான் சுடணும்



படிச்சது

நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா?
கண்களை தானம் செய்....
(பாருங்கப்பா ஒரு நல்ல செய்தியை எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு)

கடிச்சது

அதை பொண்ணுக்கு பொருத்திட்டாங்கன்னா?

(பாருங்கப்பா எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாங்கன்னு)

படிச்சது

உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன் ..
என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?


கடிச்சது

அனுப்பறனே... சார்ஜ் தீர்ந்து போன அந்த பேட்டரி செல்லை குப்பையில போடலாம்னு தான்னு நினைச்சேன். வித்தியாசம் ஒண்ணுமில்ல


 
.