Tuesday, August 8, 2017

தினம் ஒரு திருமந்திரம்



பதிவிறக்கம் செய்ய அட்டைப்படம் மேல் சொடுக்கவும்



இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்



பதிவிறக்கம் செய்ய அட்டைப்படம் மேல் சொடுக்கவும்




பிக்பாஸ் ஒரு உருவக உலகம்




பிக்பாஸை வீடு ஒரு உருவக உலகம்.

இதில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உலகில் சிலர் இருந்தாலும் உலகின் வெளியே பல தேவர்களாகிய மக்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் இந்த சிறு உலகில் உள்ளோருக்கான விதியை நிர்ணயிப்பவர். அவரின் விதிப்படியே நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த விதியினால் பல செயல்களை செய்ய வேண்டியதாகிறது.

தேவர்கள், ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தச் சிறு உலகில் உள்ளவர்கள், தங்களுடன் உள்ள சில பேரை சந்தோஷப்படுத்தி தங்கள் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் திருப்தி செய்ய வேண்டியது தங்களை கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மட்டுமே. அவர்கள்தான் எத்தனை எதிர்ப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அங்கே உறுதுணையாக நிற்பதைப் போல.

ஒருவரிடம் அவரைப் பற்றிப் பேசும்போது தேனொழுகப் பேசுவதும் பின்னணியில் கழுவிக் கழுவி ஊத்துவதுமான இரட்டை வேடங்களை தேவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீ உனக்கும் உண்மையாக இல்லை. தேவர்களுக்கும் உண்மையாக இல்லை.

"ஒரு தலைவனாகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க கூச்சமாக இருக்கிறது", இந்த வரிக்கு பதிலாக "நீங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்" என்ற வரி பதிலாக வந்த போது ஆளாளுக்கு ஒரு விதமாய் புரிந்து கொண்டார்கள்.

கமல் இங்கே கிண்டல் அடித்தது சக்தியை அல்ல. அரசியல் தலைவர்கள் கொள்ளையடிக்க கூச்சப்படுவதில்லை என அரசியல்வாதிகளை மட்டுமே Nacl நக்கலடித்தார். தவறு செய்ய கூச்சப்படும் நல்ல தலைவர் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்கள்தான் அரசியலுக்கு வரணும் என நல்ல விதமாகத்தான் சொன்னார். நம் புரிதல் அரசியல் = கெட்ட வார்த்தை. அதனால் சக்தியைத் திட்டியதாக எடுத்துக் கொள்கிறோம்.

ஆமாம், கமல் யார் இந்தச் சின்னஞ் சிறு உலகத்தில்?

கமல் ஒவ்வொருவரின் மனசாட்சி. மனசாட்சி இடித்துரைத்தல் என்பது வலிக்கத்தான் செய்யும். கமல் என்னும் மனசாட்சி தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனைத்து செயல்களையும் எடைபோட்டு விமர்சிக்கத்தான் செய்யும். மன்சாட்சியை எதைச் சொல்லியும், எதைச் செய்தும் அடக்க முடியாது. மனசாட்சி உறுத்துகிறது என்றால் தவறு செய்கிறோம் என்று பொருள்.

ஓவியா, தேவர்களை திருப்தியுடன் வைத்துக் கொண்டார். அவரின் நிறை குறைகளுடன் தேவர்கள் திருப்தியுடன் இருந்து அவரை ஆதரித்தார்கள். சிறு உலக மாந்தரைத் தவிர வெளி உலகம் இல்லை, நாம் நாமினேட் ஆகாமல் இருந்தால் போதும் என சிறு உலகத்தில் தங்களை நிலைபடுத்திக் கொள்ள சிந்திக்கும் அந்த மனிதர்கள் தங்கள் செயல்களால் சம்பாதிக்கும் பாவங்கள் "இன்னொரு உலகில்" அவர்களின் விதியை நிர்ணயிக்கப் போகிறது. 

வையாபுரி என்ன அழுதாலும் அவர் விதி முடியப் போவதில்லை. பரணி தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் மனசாட்சி, பரணியின் தற்கொலைக்கு நீயும் காரணம்தானே என உறுத்திக் கொண்டிருக்கிறது.

மனம் - சொல் - செயல் மூன்றிலும் உண்மையாக தங்களை தேவர்வசம் ஒப்படைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மனசாட்சிக்கு மரியாதை கொடுத்தால், அது காட்டும் சரியான வழி புலப்படும்.

Thursday, August 3, 2017

தாமரையின் புத்தக வெளியீடு!!!




சில மாதங்களாகவே என் எழுத்துக்களைக் கோர்த்து, புத்தகமாக்கி வெளியிட வேண்டுமென மிக ஆர்வத்துடன் இருந்தேன். அதன் பயனாக, 07-08-2017 ஆவணி அவிட்டத் திருநாளில் என்னுடைய படைப்புகளில் இரண்டை அமேசான் கிண்டில் வழியாக மின்பதிப்பாக பின்வரும் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை வாங்க விரும்புவோர், புத்தக அட்டைப் படத்தின் மீது சொடுக்கி, அமேசான் கிண்டில் பதிப்பை பதிவிறக்கிக் கொள்ளலாம். 


புத்தகங்களின் அறிமுகங்கள் இதோ 👇



இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்



திருமணம் என்பது இல்லற வாழ்வின் மகத்துவம், அதன் பொருள், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சடங்குகளைக் கொண்டது ஆகும். 

மதம், சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறிகளாகும். அவை வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.

அந்தச் சடங்குகள் அனைத்தையும் விளக்குவதே இந்தப் புத்தகம்.









தினம் ஒரு திருமந்திரம் 
பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள்



திருமந்திரம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இது மனிதர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது. அது சாதாரண மனிதனைச் சென்று அடையா விட்டால் திருமூலரின் தவமே பயனற்றது போலே ஆகி விடும்.


எனவே சாதாரணத் தமிழில் அதற்கு விளக்கம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் எழுந்தது. அதைத் தமிழ் மன்றம் என்ற இணைய மன்றம் நீர் விட்டு வளர்த்தது. எனவே எளிய நடையில் செய்யுள்களின் உண்மையான பொருள்களை எழுதியிருக்கிறேன்.

திருமூலர், என்ன சொல்லி இருக்கிறார்? ஏன் சொல்லி இருக்கிறார்? எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று அறிய விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த நூலை நான் அமைத்த விதம் ஒரு நோக்கம் உடையது. ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பக்கத்திலேயே விவரித்து முடிக்க வேண்டும். தினம் ஒரு செய்யுளைச் சொன்னேன் எனத் திருமூலர் சொன்னார். அதே போல் தினம் ஒரு மந்திரம், ஒரே ஒரு பக்கம் கற்றுத் தெளியட்டும் என்பதற்காக ஒரு செய்யுளுக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டுள்ளது.