Thursday, August 7, 2014

கண்ணோடு காண்பதெல்லாம்

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக் காணுவது எவர்பார் அருணாசலா

கையினிற் கனிஉன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொளவருள் அருணாசலா


ரமண மகரிஷி


அவனோ முக்கண்ணன்.
ஆனால் கண்ணின்றி காண்பவனும் அவனே.

முக்கண் இருந்தும் ஏனவன் கண்ணின்றிக் காண்கிறான்? அதை யார் அறிவார்?

கண்ணின்றிக் காணவேண்டுமாயின் மனதினாலேயேக் காணவேண்டும். அப்படி மனதினால் காண்பதற்குப் பெயர்தான் தியானம்.

சிவனோ ஓயாத தியானத்தில் மூழ்கியிருப்பவன். ஒன்றிற்கு மூன்று கண்ணிருந்தாலும் கண்ணின்றிக் காண்பவன் அவன்.

முக்கண்ணுடைய சிவனே கண்ணை மூடி சிவனே என்று தியானம் செய்து கொண்டிருக்க, கண்ணெனும் புண்கொண்ட மக்களோ தம் புறக்கண்களை மூடி அந்தர் தியானத்தில் கண்ணின்றிக் காண அறிவதில்லை.

இப்படிப் பட்ட இந்த சிவஞானம் நம்கையினில் இருக்கிறது. அதன் அருமையை உணராதோராய் நாமிருக்கிறோம். அதன் சிறப்பறியக் கூட அவனருள் நமக்குத் தேவைப்படுகிறது.

சிவமே எல்லாமே எங்கள் கண்ணெதிரே இருக்கிறது. எங்கள் கையில்தான் இருக்கிறது... கண்ணின்றிக் காணும் கலையறியாமல் கண்ணில் தோன்றும் மாயைகளினால் கட்டப்பட்டு கையில் உள்ளக் கனியைக் கூட அறியாமல், அதன் ஞான இரசம் பருகவியலாமல் இருக்கிறோம். அதற்காக அருள்வாயாக.

புறக்கண்கள் மாயையால் கட்டப்பட்டிருப்பதால் கையில் இருக்கும் கனி கூட தெரிவதில்லை, அம்மாயக் கட்டை அவிழ்க்க கண்ணின்றிக் காணும் அருணாசலனைக் கண்டு கொள்ள.

அகக்கண்ணால் காண முயற்சிப்பதே தியானம். தியானம் மூலம் உன்னை உணர, ரசிக்க, ருசிக்க அருள்வாய் அருணாசலா!!! 



அவனோ முக்கண்ணன்.

ஆனால் கண்ணின்றி காண்பவனும் அவனே.

முக்கண் இருந்தும் ஏனவன் கண்ணின்றிக் காண்கிறான்? அதை யார் அறிவார்?

கண்ணின்றிக் காணவேண்டுமாயின் மனதினாலேயேக் காணவேண்டும். அப்படி மனதினால் காண்பதற்குப் பெயர்தான் தியானம்.

சிவனோ ஓயாத தியானத்தில் மூழ்கியிருப்பவன். ஒன்றிற்கு மூன்று கண்ணிருந்தாலும் கண்ணின்றிக் காண்பவன் அவன்.

முக்கண்ணுடைய சிவனே கண்ணை மூடி சிவனே என்று தியானம் செய்து கொண்டிருக்க, கண்ணெனும் புண்கொண்ட மக்களோ தம் புறக்கண்களை மூடி அந்தர் தியானத்தில் கண்ணின்றிக் காண அறிவதில்லை.

இப்படிப் பட்ட இந்த சிவஞானம் நம்கையினில் இருக்கிறது. அதன் அருமையை உணராதோராய் நாமிருக்கிறோம். அதன் சிறப்பறியக் கூட அவனருள் நமக்குத் தேவைப்படுகிறது.

சிவமே எல்லாமே எங்கள் கண்ணெதிரே இருக்கிறது. எங்கள் கையில்தான் இருக்கிறது... கண்ணின்றிக் காணும் கலையறியாமல் கண்ணில் தோன்றும் மாயைகளினால் கட்டப்பட்டு கையில் உள்ளக் கனியைக் கூட அறியாமல், அதன் ஞான இரசம் பருகவியலாமல் இருக்கிறோம். அதற்காக அருள்வாயாக.

புறக்கண்கள் மாயையால் கட்டப்பட்டிருப்பதால் கையில் இருக்கும் கனி கூட தெரிவதில்லை, அம்மாயக் கட்டை அவிழ்க்க கண்ணின்றிக் காணும் அருணாசலனைக் கண்டு கொள்ள.

அகக்கண்ணால் காண முயற்சிப்பதே தியானம். தியானம் மூலம் உன்னை உணர, ரசிக்க, ருசிக்க அருள்வாய் அருணாசலா!!! 

No comments:

Post a Comment