Thursday, August 7, 2014

சிவ எண்ணம்



எண்ணமுந்தான் நின்னைவிட இல்லை யென்றால் யான்முனமே
பண்ணவினை யேது பகராய் பராபரமே


                                                                                                         தாயுமானவர்


எண்ணங்களில் உயர்ந்த எண்ணம் சிவ எண்ணம்.  அந்த எண்ணங்கள் மட்டுமே நெஞ்சில் வாழட்டும்.


வரும் அத்தனை சஞ்சலங்களும் அந்த சிவசிந்தையை விட பெரியது ஒன்றுமில்லை. அந்தச் சிந்தையை அகற்ற மட்டுமல்ல, வேறு எதுவும் சிவசிந்தையை விட்டுச் சிந்திக்க அருகதை அற்றவை.


சிவனை சிந்திக்கின்ற மனதிலா சிறு சிறு விஷயங்களைச் சிந்திப்பது?


இதுவரை செய்த வினைகள் - கவலையில்லை..
இனிமேலும் வினைபயனோ வரப் போவதில்லை..
முன்னமும் ஒன்றில்லை.. பின்னையும் ஒன்றில்லை..


பரவெளியிங்கும் பரவியுள்ள பரமனே
நின்னைச் சிந்திந்தால்
முக்கால வினையின் சிந்தை இல்லை.!!!

No comments:

Post a Comment