Thursday, August 7, 2014

இறைவன் இருக்குமிடம்



உள்ளும் புறமும் ஒருபடித்தாய் நின்றுசுகங்
கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ ?


தாயுமானவர்



இறைவன் இருக்குமிடங்கள் எவை?
இறைவன் அவற்றில் எப்படி இருக்கிறான்?



இறைவன் உள்ளும் இருக்கிறான். இறைவன் புறமும் இருக்கிறான். நமக்குள்ளும் இருக்கிறான் நமக்கு வெளியேயும் இருக்கிறான்.



உள்ளும் புறமும் அவன் ஒரே நிலையில் இருக்கிறான்.அவன் அப்படி இருப்பதிலே சுகம் கொள்கிறான்.


இறைவனை உணர்வதிலே பல நிலைகள் உள்ளன. பொருட்களின்,  உயிரிகளின் பரிமாண படிகளின் படி அவனை உணரும் நிலைகளும் மாறுகின்றன. புலன்களாலும் அறிவினாலும் உணரும் பல நிலைகள் உள்ளன. அப்படிப்பட்ட அனைத்து நிலைகளிலும் இறைவன் அவனே புலப்படுகிறான்.


இறைவனை உணரும் அப்படி நிலை உயர உயர ஜீவன்களுக்கும் இன்பம் கூடுகிறது.



கண்ணால் கண்டு, காதால் புகழ் கேட்டு, ருசித்து, பேசி, நுகர்ந்து, மனதால் உணரும் 6 படிகள் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இன்னும் பல நிலைகளும் உண்டு.



உள்ளும் புறமும் பல நிலைகளில் உணரப்படும் ஆனந்தமான இறைவனை இன்னும் பல படிகளில் காண என்ன வேண்டும்?
அவன் அருள்தான் அல்லவா?



அத்தகைய அருளை ஈந்து இன்னும் பல நிலைகளைக் காட்ட இறைஞ்சுகிறார் தாயுமானவர்

No comments:

Post a Comment