Friday, October 30, 2015

பூஜையும் வழிபாடும் யாருக்காக?



பூஜை, வழிபாடு என்பது நம் மனம் செம்மைப்பட மட்டுமே. இறைவனை மகிழ்விக்க அல்ல.


தன்னைத் துதிப்பவனை மட்டுமே காக்கக்கூடியவர் கடவுள் அல்லவே!

நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.
கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.
தான் படைத்த படைப்பை
தான் படைத்த படைப்பால்
துன்புறுத்தி
தான் படைத்த படைப்பை
தானே அழித்து
தான் படைத்தவர்களிடம்
நான் நல்லவன் என்று நிரூபிக்க
அவருக்கு அவசியம் என்ன?

இவையெல்லாம் கடவுளுக்கு நாம் கற்பனை செய்திருக்கும் வடிவமே தவிர கடவுளின் பண்பு நமக்கு விளங்காத விஷயமென்று எண்ணுகிறேன்.

கடவுள் மேல் அவநம்பிக்கை இருந்தால்தானே காப்பாற்று என்ற சொல் எழவேண்டும்?

கடவுள் எதை எதுக்காக செய்யறார் என்று நமக்கு தெரியாதப்ப, நீ இதை இப்படிச் செய்ன்னு கடவுள்கிட்ட சொல்லலாமா?

அப்படி நடக்காவிட்டால் நிராசைப் படலாமா?


பிரார்த்தனை என்பது நம் மனதுக்கு நாம் செய்யும் ஒரு ம்னோதத்துவ சிகிச்சை.

இறைவனை திருப்தி படுத்துவது நம் நோக்கம் என்று கொண்டாலும் பலன் நம் மனதை உறுதியாக்கிக் கொள்வதே ஆகும்.

1008 பெயர் சொல்லி அர்ச்சனை செய்கிறோம் என்றால் ஆயிரெத்தெட்டு கதைகள், அவற்றின் நீதிகள் நம் நினைவுக்கு வரவேண்டும். அவற்றிலொன்று நம் ஒரு பிரச்சனைக்கு தீர்வின் வழியைச் சொல்லக் கூடும்.

ஒரு காரியம் நடத்த வேண்டும் என்ற உறுதி மனதில் உண்டாகக் கூடும். அந்த உறுதி சோர்வை விரட்டி நம் பலத்தை கூட்டக் கூடும். இப்படி உண்மையான வழிபாடு நம் மனதின் செயல்திறனை அதிகரிக்கும்.

ஆனால் பாலை ஊத்து, தயிரை ஊத்து, தண்ணிய ஊத்து பூவைப் போடு உண்டியல்ல காசைப்போடு என்பது போதை மருந்து மாதிரி.

கடவுளுக்காக பூஜையோ வழிபாடோ இல்லை. நமக்காகத்தான் பூஜையும் வழிபாடும்.

விதை, இலை, பூ, காய், பழம் என ஐந்தும் கொண்ட பூஜைத் தட்டுகள், வாழ்க்கையின் அனைத்து பருவங்களையும் குறிக்கும். முழு வாழ்க்கையும் இறைசிந்தனையில் என்பதன் பொருள் அது.

அந்த ஒவ்வொரு பூஜைத்தட்டிலும் ஆசை என்பது கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது வேண்டுதல் என்ற பெயரில்.

இதில் விதை இலை பூ ஆகியவற்றை கோவிலிலேயே விட்டு விடுகிறோம். அதனால் குழந்தைப் பருவமும் சிறுவர் பருவமும் கவலையற்றதாக இருக்கிறது. பூவை கொடுத்து வேறு பூ பெறுகிறோம். இளமை பருவம் இன்பம் கொடுத்து பெறுவதாக இருக்கிறது. காயையும் கனியையும் வீட்டுக்கு பெற்று வருகிறோம். நடுத்தர வயதும், முதுமைப் பருவமும் சுயநலம் மிக்கதாக இருக்கிறது..

மனம் போல் வாழ்வு!!

No comments:

Post a Comment