Wednesday, August 4, 2010

தாமரை பதில்கள் - 151


கேள்வி எண் : 151



கேட்டவர்: சுகந்தப்ரீதன்



கடந்தகால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள் - இவற்றில் எதை அடிப்படையாக கொண்டு இரவில் உறங்கும்போது நமக்கு கனவுகள் வருகின்றன..? 

கனவுகளே வராமல் உறங்குவதற்க்கு ஒரு எளிய வழி சொல்லுங்கோ..?! (சீரியஸா கேட்குறேன் செத்துப்போன்னு சொல்லக்கூடாது ஆமாம்..)


கனவுகளைப் பற்றி உறுதியாகத் தெரிந்த ஒரே விஷயம் அது தொடர்பான சில விஷயங்களை கடந்த மற்றும் நிகழ்காலத்தில் நாம் கண்டோ கேட்டோ படித்தோ உணர்ந்தோ இருப்போம்..

கனவுகள் ஏன் வருகின்றன என பல அனுமானங்கள் உண்டு..

குப்பையாய் உபயோகப்படாமல் கிடக்கும் எண்ணங்கள்..

நீண்ட நாள் நினைவுப் பெட்டகத்தின் வெளிப்பாடு

தொடர்பறுந்த நினவுகளின் ஒருங்கிணைப்பு.. (நம்ம கணிணியில் சிதைந்த கோப்பினை ஒழுங்காக்குதல் போல)

மூளையின் தற்காலிக நினைவிலிருந்து தகவல்கள் நிரந்தர நினைவிற்கு போகும் போது ஏற்படும் பக்க விளைவுகள்..

உணர்வுப் பூர்வமான களைப்பு ஏற்படுதல்... அதை தீர்க்கத் தயாராகும் மூளை..

நாம் மனதில் விலக்கத் துடிக்கும் அடிமன நினைவுகள் 

தூங்கும் போது புலன்களுக்கு உண்டாகும் உண்ர்வுகள் தவறாக தூங்கிக் கொண்டிருக்கும் மூளையினால் புரிந்து கொள்ளப்படுவது

இப்படி கனவு வருவதற்கு எத்தனையோ தேற்றங்களை அனுமானித்துக் கொண்டு இருக்கிறது விஞ்ஞானிகள் உலகம்.

கனவு வரும் பொழுது கண்மணிகள் அசைகின்றன எனபது மட்டுமே உறுதியாக்கப்பட்டுள்ளது..

எனக்கு எப்பவாவது கனவு வரும். அதுக்கெல்லாம் என் நினைவு பகுதியை அலசிப் பிழிந்து பார்த்தால் ஒரு ஒப்புமை முன்னே நிற்கும்..

அதாவது நான் அப்ப எல்லாம் எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டு தெளிவில்லாம இருந்திருக்கேன்... என் சிந்தனை முற்றுப் பெறாமல் ஒரு திருப்தி அடையாமல் களைப்பினால் மட்டுமே உறங்கி இருக்கிறேன். அதாவது ஓய்வு தேடி உறக்கம்.

மற்ற நாட்களில் நிம்மதியாக எல்லா வேலையும் முடிச்சாச்சி என்று ஒண்ணும் செய்ய பாக்கி இல்லாம... கண்களை மூடி சிந்தனைகளே இல்லாம கொஞ்ச நேரம்.. அப்புறம் "கொர்" கொர்"

தூங்கும் பொழுது பிராஸஸ் முடிக்கப் படாமல் (சரியாக மூடப்படாத ஃபைல் கரப்ட் ஆகிற மாதிரி) மூளையின் கட்டுப்பாடில்லாமல் இந்த எண்ண அலைகள் உணர்வுகளாக மனதில் எழுகின்றன என நினைக்கிறேன். அது கட்டுப்பாடில்லாமல் இருப்பதால் எதெதோ தோன்றுகிறது...

எண்ணங்கள் வலிமை அடைந்து புலன்கள் விழிக்கும் வரை இந்த மாய உணர்வுகள் ஆழ்மனதில் பிராஸஸ் செய்வதே கனவு என்று படுகிறது.

அதனால்தான் எதிர்காலமும், தீர்வுகளும் கனவில் கிடைக்கிறது..

கனவு வராமல் இருக்க, எல்லா எண்ணங்களையும் முடிந்த வரை முடித்துக் கொண்டு தூங்கறது நல்லது. (இந்தக் கேள்விக்கு நான் பதில் எழுதின மாதிரி). 

கனவில் அடிக்கடி பயம் வருகிறது என்றால் 

ஒரு முறை பெங்களூர் வந்து செல்லவும்.

No comments:

Post a Comment