Saturday, August 7, 2010

தாமரை பதில்கள் - 157

கேள்வி எண் : 157


கேட்டவர்: நேசம்


தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் சார்ந்து இருக்கும் நிலை நல்லதா....

இதனால் மட்டுமே நல்லது கெட்டது என்பது முடிவாவது இல்லையே...

அதிகம் சார்ந்திருப்பதால் உச்சங்களும் பாதாளங்களும் குறைகின்றன.. அதாவது மிகப் பெரிய நன்மையோ அல்லது மிகப்பெரிய தீமையோ நடைபெறாது..

அதாவது நாடு வேகமாக முன்னேற கூட்டணி ஒரு தடை.
அதேசமயம் நாட்டின் பொருளாதாரம் சடாரென படி பாதாளத்திலும் விழாது...

தேவைக்கு ஏற்ற மாதிரி நாமதான் தயார் செய்துக்கணும்.

முடிவுகள் எடுக்க வேகத் தடைகள் இருப்பது பரவாயில்லை.

ஆனால் முடிவெடுக்க முடியா நிலைக்கு கூட்டணி தள்ளுமானால் அதைவிட கொடியது இல்லை


.

No comments:

Post a Comment