Monday, August 9, 2010

ஒரு நடிகையின் கொலைவழக்கு

பாதிக்கதை - சிவா.ஜி!!!



புதிய இயக்குநராக போன வருடம்தான் அறிமுகமாகி, சிறந்த அறிமுக இயக்குநராக விருது வாங்கிய சேகரன் அந்தக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தார்.


ஐந்து ஆண்டுகளுக்குமுன் அறிமுகமாகி இன்றைக்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியிருந்த ரதிப்பிரியா தன் ஒனிடா வயிற்றை(தட்டையான) குளோஸப்பில் காட்டிக்கொண்டு நடித்துக்கொண்டு(?) இருந்தாள்.

அந்தக்காட்சிக்குத் தேவையான முகபாவனையை அவள் காட்டாமல், தன் தொப்புளே போதுமென அலட்சியமாய் நின்றிருந்ததை சேகரன் விரும்பவில்லை. கோபத்தோடு அவளை அணுகி,

“மேடம், ப்ளீஸ்...ஸீன் என்னன்னு கொஞ்சம் மனசுல வாங்கிக்கிட்டு அதுக்குத் தேவையான எக்ஸ்பிரஷன் குடுங்க..” என்றதும்,

சுரு சுருவென கோபம் ஏற,

“ஹலோ...டைரக்டர்...என் ஸீன் என்னன்னு எனக்குத் தெரியும். டோண்ட் ட்ரை ட்டூ டீச் மீ...”

என்று ரோஸ்பவுடர் போட்ட முகம் குங்குமமாக சிவக்க ஃப்ளோரே அதிரும்படியாக அவள் கத்தியதும், அவமானமாக உணர்ந்த இயக்குநரும்,

‘மேடம் நீங்க பெரிய ஆர்டிஸ்ட்டா இருக்கலாம். ஆனா இங்க நான் தான் டைரக்டர். நான் சொல்றதைக் கேக்கனும்”

“புல்ஷிட்...ஒரு படம் ஹிட் குடுத்தா...பெரிய டைரக்டர்ன்னு நெனைப்பா....நான் 25 படம் ஹிட் குடுத்திருக்கேன், இன்னைக்கு இண்டஸ்ட்ரியே என்னோட கால்ஷீட்டுக்கு காத்துக்கிட்டிருக்கு. எனக்கு நீ எதுவும் சொல்லித் தரவேண்டிய அவசியமில்ல...தெரியுதா...ஷூட் வாட் ஐ டூ...”

அன்றைய மார்க்கெட்டுக்கு அதிக விலைபோகக்கூடிய நடிகையாய் அவள் இருந்ததால் அடங்கிப் போனார் சேகரன்.....மனதில் அடக்க முடியாத கோபத்துடன். 

அடுத்த காட்சியில் சோகத்தைக் காட்ட வேண்டிய காட்சியில் அவள் மோகத்தைக் காட்டியதால்...ஏற்கனவே அடக்கி வைத்திருந்த கோபம் அவரையும் மீறி வெளிப்பட்டு பளாரென்று அறைந்துவிட்டார்.

அடி வாங்கிய அதிர்ச்சியில் இரண்டுவினாடிகள் அமைதி காத்த ரதிப்பிரியா, அடுத்த நொடி ஆவேசத்துடன்,

“என்னையே அடிச்சிட்டியா.....பாஸ்டர்ட்....உன்னை இந்த ஃபீல்ட்லயே இல்லாம பண்ணிடறேன்...”

என்று இரைந்துகொண்டே தன் உதவியாளினியையும், தன் மேனேஜரையும் அழைத்துக்கொண்டு அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாள்.

அடுத்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் பொதுமன்னிப்பு கேட்டதும், பத்திரிக்கைகளில் வெளியான அந்த செய்தியால் தன் அடுத்தப் படத்துக்கு முன்பணம்கொடுத்தவர்கள் பின்வாங்கியதையும் நினைத்து, அடையாறுகேட் ஹோட்டலில் அரையடித்தபின் சேகரன் மொழிந்தது...

“அந்த பொம்பள உயிரோடவே இருக்கக்கூடாது.....எனக்கு கேரியரே இல்லாமப் போனாலும் பரவால்ல...அவளைப் போட்டுத் தள்ளிடனும்...”


னக்கு ஒப்பனை செய்துகொண்டிருந்த பழம்பெரும் ஒப்பனையாளர் தர்மலிங்கத்தின் கைகளை தட்டி விட்டு விட்டு,

“என்னய்யா மேக்கப் போடற...நான் என்ன கிழவியா....ஒன்னோட அந்தக்காலத்து மேக்கப்பெல்லாம் எனக்குத் தேவையில்ல....முடிஞ்சா மாடர்னா போடு...இல்லன்னா....ஊரப்பாக்க போய்த்தொல....ஏன் எங்களை மாதிரி கவர்ச்சி கதாநாயகிகளோட அழகோட விளையாடறே”

என்று அவரைத் தாறுமாறாக பேசிவிட்டுப் போன ரதிப்பிரியாவை, கோபம் கொப்பளிக்கும் கண்களோடு பார்த்துக்கொண்டிருந்த தர்மலிங்கம்....

“இருடி....ரொம்ப அலட்டிக்கிறயா....உன் மொகத்துல ஆஸிட் ஊத்தி..கோரமாக்கலன்னா எங்கப்பன் சம்முகத்துக்கு நான் பொறக்கல...”

என்று பல நாட்களாய் மனதில் ஊறியிருந்த வன்மத்தை வார்த்தைகளில் காட்டிக்கொண்டே ஒப்பனை சாதனங்களை இடக்கையால் தட்டிவிட்டார்.


திப்பிரியாவின் வீடு. மேனேஜர் பாண்டியன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தார். ரதிப்பிரியா ஆத்திரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள்.

“கேரளாவுல இருந்து, பஞ்சாப்புல இருந்து, மும்பையிலருந்து வர்ற நடிகைங்கன்னா...சின்ஸியரா இருக்கீங்க....நான் திருவாரூர்லர்ந்து வந்த தமிழ் நடிகைங்கறதால.....குழி பறிக்கறீங்களா? ஏன்யா இந்த புத்தி? நம்ம ஆளுங்கதான் நமக்கு எதிரிங்கங்கறத மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டியேய்யா...”

“மேடம்....நீங்க நினைக்கற மாதிரி ஒன்னுமில்ல....யாரோ சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு....”

“தப்பா இல்ல....ரொம்ப சரியாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். அந்த பஞ்சாப் பொண்ணு ஜால்வாவோட ஆள்தானே நீ. அவ பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தானே நீ வேணுமின்னே என் கால்ஷீட்ல குளறுபடி பண்ணி எனக்கு மார்கெட் இல்லாம போகனுன்னு முயற்சி பண்ணே”

‘அய்யோ...அப்படியெல்லாம் அபாண்டமா சொல்லாதீங்க மேடம். உங்க உப்பத்திண்ணவன் நான்....உங்களுக்குத் துரோகம் பண்ணுவனா?”

“பண்ணிட்டியே.....சாய்மீரா ப்ரொடெக்*ஷனுக்கு நான் குடுத்த என்னோட கால்ஷீட்டை பிரமிட்டுக்கு குடுத்து, அதையும் மாத்தி ரெட்சன்னுக்கு குடுத்து....இப்ப எதுவுமே இல்லாம பண்ணிட்டியே....ஓக்கே....நவ் கெட் அவுட். என் கண்ணு முன்னால நிக்காத....போய்த்தொலை.”

“மேடம் ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம்...”

“கேக்க வேண்டிய அவசியமில்ல....என் கிட்ட ஆதாரம் இருக்கு. நீ ஜால்வாகூட எப்பவெல்லாம் போன்ல பேசின, எங்கெங்க சந்திச்சீங்க எல்லா டீடெய்லும் என்கிட்ட இருக்கு.....ஸோ....இதுக்கு மேல இங்க நின்னா வாட்ச்மேனைக் கூப்பிட்டு கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ள வேண்டியிருக்கும்....எப்படி வசதி...?” 

அவள் நக்கலுடன் கேட்டதைப் பார்த்ததும் ஆத்திரமாய்......

“போறேண்டி.....நீதான் பெரிய ஸ்டார்ன்னு நெனைச்சிக்கிட்டு என்னை எப்படியெல்லாம் அவமானப் படுத்தின.....இப்ப எனக்கு ஜாவ்லா இருக்காங்க. அவங்க கிட்ட போறேன். ஆனா........உன்னை இந்த இண்டஸ்ட்ரியில மட்டுமில்ல............இந்த உலகத்துலயே இல்லாமப் பண்றேன்.....”

அந்த இரவு நிம்மதியில்லாமல் படுக்கையில் புரண்டாள் ரதிப்பிரியா. 

“ச்சே எனக்கு மட்டும் ஏன் இத்தனை எதிரிகள்.....என்னுடைய நடவடிக்கையில்தான் தவறோ.....? வளர்ந்து வரும் இந்த நேரத்தில் நல்ல இயக்குநரையும், மூத்த மேக்கப் மேனையும், என் எல்லா ரகசியங்களும் தெரிந்த மேனேஜரையும் பகைத்துக்கொண்டது தவறோ...நாளை காலை விழித்தவுடன் அவர்களை சமாதானத்துக்கு அழைக்கவேண்டும்”

இப்படி நினைத்தவுடன் மனசு லேசாக...மெள்ளக் கண்ணயர்ந்தாள்.

டுத்தநாள் காலை அவளுக்கு காஃபி கொடுக்க வந்த வேலைக்காரி...அவள் கிடந்த ரத்தக்கோலத்தைப் பார்த்துவிட்டு காஃபிக் கோப்பையைக் கீழே போட்டுவிட்டு அலறலுடன் ஓடினாள். ரதிப்பிரியா கழுத்து அறுக்கப்பட்டு கட்டிலில் கிடந்தாள்.

சற்று நேரத்தில் போலீஸ் வந்தது.

வழக்கமான சம்பிரதாயங்கள்.....கைரேகை, புகைப்படமெடுப்பு, எதையும் தொடாதீர்கள் என்ற எச்சரிப்பு....கடைசியில் ஸ்ட்ரெக்ச்சரில் ரதிப்பிரியாவின் உடல் கொண்டுபோகப்பட்டப் பிறகு,

முதலில் பார்த்த வேலைக்காரியை விசாரித்தார்கள். கடைசியாய் அவளிடம் சண்டை போட்டுவிட்டு அவன் அவளை இல்லாமலாக்குவதாக சத்தமாகச் சொன்னதைக் கேட்டதாக வேலைக்காரி கூறியதைக் கேட்டதும், மேனேஜரைத் தேடிப்போனார் அந்த இன்ஸ்பெக்டர்.

போகும் முன் அந்த அறையைப் பூட்டி, யாரும் அதனுள் போகக்கூடாது என்று சொல்லி, சீல் வைத்துவிட்டுப்போனார்.

ரதிப்பிரியாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவள் வீட்டை விட்டு வெளியேறியதும் நேராக அந்த இரவுவிடுதிக்குத்தான் போனான் பாண்டியன். அன்று இரவு, புலம்பிக்கொண்டு ஃபுல்லை ஃபுல்லாக இறக்கிக்கொண்டு மட்டையாகிடந்தான், நாங்கள்தான் அவனை ஓரமாகப் படுக்க வைத்தோம் என்று அந்த கிளப்பிலிருந்தவர்கள் கூறியதும், கொலையாளி இவனாக இருக்க முடியாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.

வேறு யாராக இருக்கும்.......? இன்ஸ்பெக்டர் தமிழரசன் மூளையைக் கசக்கிக்கொண்டார். இன்றைய தேதியில் தமிழ்த்திரையுலகத்தின் வெற்றிகரமான நடிகை. பல அரசியல்வாதிகளின் தொடர்புள்ளவள்.

சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும்........





மீதிக் கதை தாமரை செல்வன்



குட்மார்னிங் இன்ஸ்பெக்டர் - இரட்டை நாயனமாக குரல்கள் ஒலிக்க, தனியார் துப்பறிவாளர் - உளவியலாளர் பெஞ்சமின் மற்றும் அவரின் சக துப்பறிவளர் கண்மணி இருவரும் வந்தனர்.

இருவரும் தமிழரசனின் பள்ளித் தோழர்கள். ஏறத்தாழ ஒரே தொழில் என்பதால் ஒருவருக்கொருவர் பெரும் உதவியாக் இருப்பார்கள். பென்ஸூடமும் கண்மணியிடமும் பேசிக் கொண்டிருந்தால் போதும் பல சிக்கல்கள் காணாமலேயே போய்விடும்.. வார்த்தைகளும் மிக்ஸரும் தேநீரும் கொண்ட உபசரிப்புக்கு பிறகு தமிழரசன் கதையைச் சொன்னார்.

உடனே சந்தேக லிஸ்ட் தயார் பண்ணி ஒவ்வொருத்தரா விசாரிக்க ஆரம்பிச்சி இருப்பீங்களே.. கண்மணி புன்னகையோடு சொல்ல 

தமிழரசன், ஆமாம் என்பது போல தலையசைத்தார்.

சரி ரதிப்பிரியாவை பற்றி என்னத் தெரியும்? சொல்லுங்க.. பென்ஸ் கேட்க 

தமிழரசன் 5 வருஷமா டாப் நடிகை அடிக்கடி பிரச்சனைகளில் மாட்டி வெளிவருகிற ஒரு சார்ட் டெம்பர்டு காண்ட்ரவர்ஷியல்.. ஆனால் கோபம் ரொம்ப நேரம் இருக்காது.. அடுத்த நாளே மன்னிப்பு பார்ட்டின்னு குழைய ஆரம்பிச்சிடுவாங்க.. பல விரோதிகள் இருக்கலாம்.

அப்போ ஏன் மூணு பேரு மட்டும் உங்க சந்தேக லிஸ்ட்ல? கண்மணி கேட்க.. 

வாஸ்தவம்தான் லிஸ்ட் போட்டு மாளாது. அப்புறம் என் ஆயுசுக்கு கண்டு பிடிக்க முடியாது.

சொல்லப் போனா குற்றவாளிகளை கண்டுபிடிக்க இரண்டு வழி இருக்கு பென்ஸ் சொல்ல ஆரம்பித்தார்.. 

ஒண்ணு சந்தேகலிஸ்ட்ல இருக்கிற எல்லாத்தையும் தனித்தனியே விசாரிச்சு அவங்க குற்றம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என உறுதி செய்வது,.

இன்னொன்னு குற்றம் நடந்த சூழ்நிலை, குற்றம் நடந்திருக்கிற விதம் இதை வைத்து குற்றவாளியைப் பற்றிக் கணித்து சந்தேக வட்டத்தைக் குறைச்சுகிட்டே போறது... அதாவது திருப்பதியில சில்லரைக் காசுகளை வச்சி சலிச்சி தனித்தனியா பிரிக்கிற மாதிரி கொலை நடந்த இடமும் விதமும் கூர்மையா ஆராயப்பட்டதுன்னா உங்களுக்கு பல தலைவலிகள் மிச்சம்.. கண்மணி தொடர்ந்து சொன்னார்.

உங்ககிட்ட இருக்கற ஃபோட்டோஸ் எடுங்களேன் பென்ஸ் சொல்ல,

தமிழரசன் ஃபோட்டோக்களை எடுத்துப் போட.. ஓஹோ இப்படித்தான் பிணமாகக் கிடந்தாரா பென்ஸ் நெற்றிப்பொட்டில் தட்டிக் கொண்டு யோசிச்சார்..

கழுத்தை நெறிச்சோ, இல்லை கையில் கிடைச்சதை வச்சோ கொலை இல்லை போராட்டம் அதிகம் இல்லை.. அதனால இது திடீர்னு நடந்த கொலை இல்லை.. - பென்ஸ்

ஆமாம், கத்தி என்பது ஒரு ஆயுதம். அதுவும் கழுத்து அறுபட்டு இறந்திருக்கிறாள். அப்படின்னா என்ன புரியுதா கழுத்தறுப்பு - அதாவது நம்பிக்கைத் துரோகம் - கண்மணி

அட ஆமாம் இப்படி ஒரு கோணம் இருக்கே தமிழரசன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கொலை செய்தது தனியாளா இல்லை ஆளை ஏவி செஞ்சிருக்காங்களான்னு முதல்ல கண்டு பிடிக்கணும்.. பெட்ரூம், கழுத்தறுப்பு புதுசா யாரோ வந்து போனதைப் பற்றிச் சந்தேகமோ ஸ்பெஷல் தகவலோ, தடையமோ இல்லை.. அப்போ கொலையாளி கூலிப்படை இல்லை. - பென்ஸ்

அவங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது..- தமிழரசன்

கொலை பொதுவிடத்தில் நடக்கலாம். வீட்டில் என்றால் விஷம், தூக்கு, துப்பாக்கி, நெஞ்சில் கத்திக் குத்து, கழுத்தில் பின்புறம் வெட்டு.. இப்படி அவங்களுக்கே உள்ளே சிக்னேச்சர் உங்களுக்குத் தெரியாதா என்ன? பழைய கொலை விபரங்களைக் கொஞ்சம் உங்க கம்ப்யூட்டர்ல அலசி கடந்த 3 வருடங்களில் எத்தனைக் கழுத்தறுப்பு நடந்திருக்குன்னு பார்த்தீங்கன்னா தெரியுமே! - கண்மணி

அட ஆமாம் இதுவரை ஒண்ணுகூட இல்லை. - தமிழரசன்.

போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்ல அவளுக்கு தூக்க மாத்திரையோ அல்லது மயக்க மருந்தோ கொடுக்கப் பட்டிருந்ததா என உறுதிப் படுத்தணும்.. ஏன்னா கழுத்தை அறுக்கும் பொழுது போராட்டம் நடந்திருக்கணும் ஆனால் அதிகம் நடக்கலை.. - பென்ஸ்

அட ஆமாம். உடனே அரசு மருத்துவமனைக்கு தகவல் சொன்னார் தமிழரசன்.

இரண்டு சாத்தியக் கூறு இருக்கு 1. கொலையாளிக்கு வீட்டில் ஒரு உள்கை இருக்கு.. உள்குத்து இருக்கு. இன்னொன்னு கொலையாளி அந்த வீட்டுக்கு சகஜமா வந்து போகிறவர். - கண்மணி..

இப்படி பூஜ்யத்திலிருந்து ஆராய்ந்து கொஞ்சம் கொஞ்சமா உருவம் கொடுத்து ... - பென்ஸ்

இதைத்தான் படம் காட்டறதும்பாங்க - கண்மணி..

ரொம்பத் தெளிவாயிட்டேன். குற்றவாளியைப் பிடிச்ச உடனே உங்களுக்கு ட்ரீட்தான்.. உற்சாகமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார் தமிழரசன்..

தமிழ்நாடு போலீஸ்தான் நெம்பர் ஒன் அப்படீன்னு நிரூபியுங்க.. அட்வான்ஸ் கங்கிராட்ஸ்.. வாழ்த்தியபடியே எழுந்தனர் 
பென்ஸூம் கண்மணியும்...

எழுந்து விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார் தமிழரசன். புத்துணர்வுடன்.. ஐ வில் கேட்ச் ஹிம் இன் டூ வீக்ஸ் ஸார்...

கலகலவென சிரித்தனர் அனைவரும்

முற்றும்

No comments:

Post a Comment