Friday, August 6, 2010

தாமரை பதில்கள் - 155

கேள்வி எண் : 155


கேட்டவர்: Mano.G



மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது
(கோபமோ, பயமோ அல்லது சந்தோஸமோ)
ஏன் எதனால் மூச்சுவிடுவது அதிகமாகிறது,
உடம்பில் ஏற்படும் இரசாயன மாற்றம் எனக் கூறுகிறார்கள்
எப்படி இந்த இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன????


எல்லாமே நமது மூளைப்பகுதியின் செயல்தான் மனோ.ஜி.

இப்போது பயம் என்பதை எடுத்துக் கொள்வோம்.

பயம் என்ற உணர்வு தோன்றிய உடனே, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள எந்த எந்த உறுப்புகள் அந்தச் சூழ்ந்லையில் தேவையோ அங்கு இரத்தம் அதிகம் செலுத்தப்படுகிறது. (எதிர்க்கறதா இருந்தா கைக்கு, ஓடறதா இருந்தா காலுக்கு.. ஹி..ஹி...)

உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. பயத்துக்கு அட்ரினலின் மாதிரி.. சாதாரணமா நம்மால் மிகப்பெரிய புன்னகையை 10 நிமிஷம் வச்சிருந்தா களைச்சுப் போயிடுவோம்.(42 தசைகளை விரிக்கணும்) ஆனா மணிக்கணக்கா சந்தோஷத்தில் குதிக்கும் பொழுது அந்தக் களைப்பு தெரியாம இருக்க ஹார்மோன்கள் உதவுது.

பயம் உண்டானவுடன் அட்ரினலின் சுரப்பு அதிகம் ஆகி தேவையான பகுதிகளுக்கு இரத்தத்தின் மூலம் விரைவாக அனுப்பப் படுது, அட்ரினல் வலியை உணர்வதை குறைத்து விடுகிறது. கையே வெட்டுப்பட்டுத் தொங்கினால் கூட வலி தெரியாமல் போராடுவது இதனால்தான்.

ஆனா பாருங்க இந்த மாதிரி ஹார்மோன்கள் வேலை செய்யும் பொழுது உடல் மிக அதிக வேலையைச் செய்யுது, அதனால் இரத்ததில் கழிவுகள் அதிகமாகின்றன. அதைச் சுத்தமாக்கவும் அதிக ஆக்சிஜனை அனுப்பனும். கழிவுகள் வெளியேற்றப் படணும். இதயத்தின் துடிப்பு வேகம் அதிகப் படுது.. நுரையீரலின் வேகம் அதிகரிக்கிறது..

இதை எல்லாம் கட்டுப்படுத்துவது எது? சிறுமூளை. நாளமில்லாச் சுரப்பியை இயங்க வைத்து இதயத்துடிப்பையும் நுரையீரலையும் வேகமாக இயக்கி அந்த நேர உணர்ச்சிகளுக்கு தீர்வு தருகிறது..

ஆனால் இதனால் பக்க விளைவுகள் உண்டு. இந்த ஹார்மோன்கள் நிலைகள் ஏற்ற தாழ்வு ஏற்படுவது உடலில் கழிவுகளை அதிகப் படுத்தி நாட்பட நாட்பட தளர்ச்சியை உண்டாக்கி விடும்

அதனால்தான் யோகா, முறையான உடற்பயிற்சி நன்மையைத் தந்து ஆயுளை நீட்டிக்கும் அதே நேரத்தில் உணர்ச்சி வேகம் நிறைந்த செயல்கள் ஆயுளைக் குறைத்து விடுகின்றன.

எனவே இதை உயிரியல் தூண்டிய வேதியியல் வினைகள் எனச் சொல்லலாம். 

உணர்ச்சிவசப் படும் பொழுது மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைந்து விடுகிறது. காரணம் மற்ற பகுதிகளுக்கு அதிக இரத்தம் தேவை.. மயக்கம் வருதல், சிந்தனை மழுங்கிப் போதல் போன்றவை இதன் காரணமாகவே உண்டாகின்றன.

ஹிஸ்டீரியா கூட இப்படியான ஒரு பாதிப்புத்தான.


No comments:

Post a Comment