Saturday, August 7, 2010

தாமரை பதில்கள் - 161



கேள்வி எண் : 161


கேட்டவர் : கலைவேந்தன்


சூடான ஒரு பொருளை ( தோசை சட்டி. சூடான கரண்டி போன்றவை) தண்ணீரில் போடும்போது சுர்ர்ரென்று ஒலி எழும்புவது ஏன்...? 


சூடு போட்டா யாருதான் கத்த மாட்டாங்க. அதனால கத்துறது தண்ணிதான்..

அப்படின்னுதான் எல்லோரும் நினைப்பாங்க, அதுதாங்க தப்பு!

ஆனால் மனைவிதானே கணவனை அடிக்கிறாங்க? அந்த மாதிரி இங்க கத்தறது தோசைக்கல் தானுங்க. 

தோசைக்கல் சூடாக இருக்கும் பொழுது நீர் தெளிப்பதால் தண்ணீர் பட்ட உடனே கல் சுருங்குகிறது. அதிவேகமான இந்தச் சுருங்கல் காரணமாக வலி தாங்காம ரோஷம் கொண்டு (சூடு -சொரணை இருப்பதால்) தோசைக்கல் கத்துது.
.
தண்ணீர் தோசைக்கல் மீது பட்ட உடனே ஆவியாகிவிடுது. (கணவனை அடிக்கிற மனைவி பேய் மாதிரி தெரிகிற மாதிரி) இந்த ஆவி மெல்லிய படலமாக உடனே தோசைக்கல் மீது தோன்றுகிறது. இந்த ஆவி அடுத்து வரும் தண்ணீர் படலத்தை சிறிது லேட்டா தோசைக்கல் மீது பட வைக்கிறது...

இதனால் அடுத்த லேயர் தண்ணி ஆவியாகுது.. தோசைக்கல் இன்னும் கொஞ்சம் குளிர்ந்து இன்னும் கொஞ்சம் சத்தம் போடுது. (இன்னும் கொஞ்சம் சூடு- அதாங்க ரோஷம் பாக்கி இருப்பதால்) இன்னொரு படலம் நீராவி உண்டாகி வெளியேறுது...அதாவது முதல் அடி விழுந்த உடனே கணவன் சத்தம் போட்டு விலக, அடுத்த அடி கொஞ்சம் லேட்டா விழறது மாதிரி

அடி வாங்கி வாங்கி குறுகிப் போன கணவன் ஈனஸ்வரத்தில் முனகி அடங்கிப் போவது போல கொஞ்சம் கொஞ்சமா குளிர்ந்த தோசைக்கல், ஒரு கட்டத்துக்கு அப்புறம் திராணியற்றுப் போய் ஒடுங்கி விடுகிறது. அதுக்கப்புறம் சத்தம் போடாம "கம்முன்னு" நம்ம ஆரென் அண்ணா மாதிரி ஆகிடுது.
.

No comments:

Post a Comment