Wednesday, August 18, 2010

டைட்டானிக் மூழ்கியது - தமிழ் டி.வி. நியூஸ்!!




சன் டிவி:

டைட்டானிக் கப்பல், நடுக்கடலில் மூழ்கியது. பல நூறு பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் கலைஞர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். துணை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைவு.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உயிர் தப்பிய தமிழர்களுக்கு தம் தாய்நாடு திரும்ப உடனடியாக தனி விமானம் அனுப்பி வைத்தார்.

ஜெயா டி.வி:

இலண்டனில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதற்கு காரணமான மைனாரிட்டி தி.மு.க அரசு நடுக்கடலில் தவிப்போரை மீட்காமல் அஞ்சலி என கண்ணீர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

விஜய் டி.வி

குற்றம்! நடந்தது என்ன?

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற டைட்டானிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது.

இது மூழ்கியதற்கு காரணம் டெக்னிகல் கோளாறா? கேப்டன் மற்றும் ஊழியர்களின் அலட்சியமா அல்லது அமானுஷ்யமா என்பது பற்றி அலசல்.

டைட்டானிக் கப்பல் ஸ்காண்டிநேவியா பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட போதே சிறிய விபத்தைச் சந்தித்தது. இதைக் கெட்ட சகுனம் என பல ஆண்டுகள் அன்பவம் வாய்ந்த காப்ட்ன்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் எச்சரிக்கையயும் மீறி கப்பலைச் செலுத்தியிருக்கிறார் கேப்டன்...

இடைவேளைக்குப் பிறகு...

நடுக்கடலில் செல்லும் பொழுது தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவத்தைக் கண்டிருக்கிறார் கப்பல் கோபுரக் கண்காளிப்பாளர் ஆண்ட்ரூஸ். அது என்னவென்று சொல்ல அவர் உயிருடன் இல்லை. அவருடன் பணியாற்றிய அவர் நண்பர் கில்பர்ட்டைப் பேட்டி கண்ட போது...

ஆமாங்க.. அது வெள்ளையா மசமசன்னு இருந்தது.. மெதுவா கப்பலை நோக்கி வந்தது, அப்படியே தண்ணி மேல நடந்து வந்த மாதிரிதான் இருந்தது. ஆனா அதுக்கு காலே இல்லை..

பக்கம் வர பக்கம் வர அது பெரிசா ஆக ஆரம்பிச்சது. மிகப் பெரிய பூதம் அது,, அது அப்படியே தன் கையை தூக்கி கப்பலை ஓங்கி அறைஞ்சது...

எனக்கு கிறு கிறுன்னு வந்துச்சி.. லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு கடலில் குதிச்சிட்டேன்..

முடிஞ்ச வரை நீந்தினேன்..

கப்பலில் இருந்து வந்த லைஃப் போட்ல ஒண்ணில ஏறிகிட்டேன்.. அதனால தான் தப்பிக்க முடிந்தது.

டைட்டானிக் கப்பல் கவிழக் காரணம் பூதமா?

இடைவேளைக்குப் பிறகு...

இதைப் பற்றி இன்னொரு பயணியிடம் கேட்டபொழுது..

அது பூதமில்லை.. நானும் பார்த்தேன். அது மிகப் பெரிய திமிங்கிலம். வெள்ளை நிறத்தில் கடலின் அடியில் இருந்து மேல வந்தது.. அது தன் வாயால் கப்பலை இடிக்க கப்பல் ஓட்டையாயிடுச்சி..

பிறகு கப்பலை கடிச்சி இழுத்தது இதனால் கப்பல் உடைந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பிச்சது... நான் பெண் என்பதால் உடனடியாக லைஃப் போட்டில் ஏற்றி அனுப்பிட்டாங்க.. அதனால் தப்பித்தோம்..

அந்த திமிங்கிலம் கப்பலை கடித்து கடித்து மூழ்கடிச்சிருச்சி...

டைட்டானிக் கப்பல் முழ்கியது பூதத்தினாலா, திமிங்கிலத்தினாலா? இல்லை தீவிரவாதிகள் செயலா..

நாளை தொடரும் 


No comments:

Post a Comment