Friday, August 13, 2010

ஆண் மனம்!!!




மேலோட்டமாய் பார்த்தால்
வறண்டு காய்ந்திறுகி
கிடப்பதாய் தோன்றும்


     தேங்கிக் கிடக்கும்

     ஆசை நீர்கள்
     குடிக்க ஒண்ணாத
     உப்பு நீர் என
     ஏளனம் செய்யப்படும்


அந்தப் பககமும்

இந்தப் பக்கமும்
பருவத்திற்கேற்ப
அலைபாயும்
சந்தர்ப்பவாதக் காற்றென்று தூற்றப்படும்


     அவ்வப்போது பெய்யும்

     காதல் மழையில்தான்
     பூக்களும் பயிர்களும்
     உண்டாகின்றனவென்று
     குறைத்துச் சொல்லப்படும்


ஏதோ சூரியன்

கொடுக்கும் ஒளி
ஏதோ சந்திரன்

கொடுக்கும் குளுமை
இந்தப்பாழும் பூமி

வாழ்ந்து கொண்டிருக்கிறது..


     இப்படித்தான்

     பல கதைகள்


இரும்புக் கருவும்
கொந்தளிக்கும்
நெருப்புக்குழம்பும்


     புரிந்து கொள்ளப்படாமலேயே

     அமுங்கிக் கிடக்கின்றன..


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே

அத்தனை மாற்றங்களுக்கும் அடிப்படையாக
அத்தனைக்கும் ஆதாரமாய்
ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கிறது


     அந்தச் சுழற்சியின்

     பயனாய் உண்டாகும் ஈர்ப்புதான்
     அத்தனைக்கும் அடிப்படை என்பது
     எங்கோ மறைந்து கிடக்கிறது



பொத்தலிடப்படும் போதெல்லாம்

நீர் கொடுத்தும்
கனிமம் கொடுத்தும்
இருதய ஓட்டைகளுடன்
வாழ்ந்து கொண்டு


     வேதனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம்

     கொடியவன் என
     முத்திரை குத்தப்பட்டு
     பழிக்கப்படுகிறது


இன்னொரு பூமி

இல்லையெனத் தெரியும்வரை
இந்தப் பூமி
ஏளனம் செய்யப்பட்டே
வாழ்ந்து கொண்டிருக்கும்!!!

No comments:

Post a Comment