
கோபம் பல கஷ்ட நஷ்டங்களுக்கு அடிப்படையாகும். 

இந்தக் கோபம் வராம தடுப்பது எப்படின்னு பார்ப்போம்.

நமக்கு கோபம் வர முக்கியக் காரணமே இந்த நியூஸ் தாங்க.. 

நியூஸ் சென்ஸா இல்லாம நியூஸன்ஸா இருக்கறதுன்னு தாங்க முதல் கோபம் எல்லாத்துக்கும் வருது.

எதாச்சும் ஒரு ஹாட் நியூஸ் கிடைச்சா போதும் கூடி கும்மாளமடிக்க கும்பல் கூடிருவாங்க.

ஆனால் பாவம் அந்த நியூஸில் மாட்டிகிட்டவங்க. படற பாடு இருக்கே, அது உலக மகாக் கொடுமை.

நியூஸ்ல நல்ல விதமா வந்தா சிலருக்கு கோபம். 

கெட்ட விதமா வந்தா சிலருக்குக் கோபம். 

நியூஸே வரலைன்னாலும் நிறையக் கோபம். 

அட மொக்கையா நியூஸ் வநதாலும் சிலருக்கு கோபம்.







நோ யூஸ்னு நியூஸை ஒதுக்கவும் முடிவதில்லை. 



நியூ யூஸ் அப்படின்னு எடுத்துக்கவும் முடிவதில்லை.





நியூஸ் தெரியலைன்னா மண்டை வெடிச்சிரும். 

நியூஸ் தெரிஞ்சா மண்டை குழம்பிரும். 





இதில பேப்பர் நியூஸ், மேகசின் நியூஸ், டி.வி.நியூஸ் இண்டர் நெட் நியூஸ், எஸ்.எம்.எஸ் நியூஸ் இப்படி நியூஸ் நம்மளைச் சுத்திச் சுத்தி வருது. 





ஆக நியூஸ்ல மாட்டாம இருக்கறதே கோபம் குறைய முதல் வழி. 

ஒரு சீரியஸ் நியூஸை சொன்னா மொக்கயா அப்படியா, அப்புறம் அப்படின்னு கருத்து சொல்லாம விட்டா சொன்னவனுக்கு கோபம்.

மொக்கையான நியூஸை சொல்றவனுக்கு இண்டரஸ்டிங்கா இருக்கே.. சூப்பர் அப்படின்னு சொன்னா அதை படிக்கிறவணுக்கு கோபம்.

என்னதான் ரெஸ்பான்ஸ் கொடுக்கிறது?



அதுக்குத்தான் ஸ்மைலீஸ் கண்டு பிடிச்சிருக்காங்க. பொருத்தமான ஸ்மைலீ போட்டுட்டா போதும்.





நான் எழுதினதை நீங்க ஒத்துக்கிட்டீங்களா? கோவம் வரலியா? 



ஹா ஹா ஹா
நீங்க பின்னூட்டம் போட்டா பிடிச்சிருக்குன்னு அர்த்தம்

ஸ்மைலீஸ் மட்டும் போட்டா ஒத்துக்கிட்டீங்கன்னு அர்த்தம் 

பின்னூட்டமே போடலைன்னா யோசிக்க வச்சுட்டேன்னு அர்த்தம். 

படிக்கவே இல்லைன்ன ஏற்கனவே நீங்கள் ட்யூன் ஆயிட்டிங்கன்னு அர்த்தம். 

உங்களுக்கு இதைப் படிச்சிட்டு கோபமே வரலைதானே


.
:)
ReplyDelete