Saturday, July 19, 2014

தாமரை பதில்கள் - 166

கேள்வி எண் : 166


கேட்டவர் : இரஞ்சிதம்


பிடிவாதகுணம் ஏன் உண்டாகிறது? தவிர்க்கவழி உண்டா?


பொதுவாக ஒவ்விரு குணமும் எப்படி உண்டாகிறதோ அப்படித்தான் பிடிவாத குணமும் உண்டாகிறது.

அதாவது, சூழல். பிடிவாதம் அழுதால் பால்கிடைக்கும் என்று தெரிந்த குழந்தை பருவத்திலேயே இது ஆரம்பம்.

அதைத் தவிர்க்க வழி இல்லை, பிடிவாதம் செய்கிறோம் என்று நன்கு தெரிந்தவர்களால் கூட அதை தவிர்க்க இயல்வதில்லை. உதாரணம் காந்தி.

உழைப்பால் மட்டுமே எதையும் பெற இயலும். என்பதை குழந்தைப் பருவத்தில் இருந்து உணர்த்தினால் அர்த்தமற்ற பிடிவாதங்கள் குறையும். கொடுப்பதைக் குறைத்து அவர்களை எதையாவது செய்து சம்பாத்தியம் என்பதின் அர்த்தத்தை உணர வையுங்கள்.

அதாவது எதற்கு அடம் பிடிக்கிறார்களோ அது தீமை பயப்பது என்றால் அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லி வாருங்கள்...

தீமை தராதது என்றால் அவர்கள் அதை பெற உழைக்க வேண்டும். சில காரியங்களைச் செய்ய வேண்டும் எனச் சொல்லி சில ஆக்க பூர்வமான வேலைகளைக் கொடுங்கள். உழைத்துப் பெறும் பழக்கம் வந்துவிட்டால் போதும் அடம் பிடிப்பது நல்லதாகும்

No comments:

Post a Comment