Saturday, July 19, 2014

தாமரை பதில்கள் - 169

கேள்வி எண் : 169
கேட்டவர் : நேசம்



இந்தோனேசியாவில் அட்டிக்கடி பூகம்பம் ஏன் ஏற்படுகிறது.ஏதாவது சம்பந்தம் உண்டா...



இந்தோனேசியா பகுதியில் எரிமலைகள் அதிகம். இந்தோனேசியப் பகுதி யூரேசியன் பிளேட், பசிபிக் பிளேட், இந்தோ ஆஸ்திரேலியன் பிளேட், பிலிப்பைன்ஸ் பிளேட் என நான்கு பூமியின் மேலடுக்குத் தகடுகள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது.



இந்தோ-ஆஸ்திரேலியத் தகடு யூரேசியன் தகடுகளுக்கு கீழே அழுத்தப்படுகிறது, இந்த எல்லையில் பல எரிமலைகள் உண்டாகின்றன. அதே போல பசிபிக் தடும் யூரேசியன் தகடுக்கு கீழே அழுத்தப்படுகிறது. 

இப்படி மேலேட்டுத் தகடுகளின் எல்லையில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் அதிகமாக நிலநடுக்கம் உண்டாகிறது. இதனால் மேலோடுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இங்கு பல எரிமலைகள் உள்ளன.


இங்கு உள்ள டோபா என்னும் எரிமலையை சூப்பர் எரிமலை என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.. 75000 ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்த போது மனித இனம் அழிவின் விளிம்பிற்கே சென்று வந்ததாக சொல்கிறார்கள். இது வெடித்தால் இராட்சச சுனாமி அலைகளும், 2800 கிமீ கன அளவு கொண்ட சாம்பலும் வெளிப்படும் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.



இந்தோனேசியப் பகுதியில் அதிக பூகம்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று இப்போது விளங்கி இருக்குமே!

No comments:

Post a Comment