Saturday, July 19, 2014

தாமரை பதில்கள் - 171

கேள்வி எண் : 171
கேட்டவர் : சரண்யா


ஆத்திரம் அடையும் போது தவிர்க்க என்ன செய்வது?
ஏன் நம்மையே கட்டுபடுத்த முடியாமல் போகிறது.....
அதீத கோபத்தால் வருவது தான் ஆத்திரமா? 
எடுத்தெரிந்து பேசுவது தான் ஆத்திரமா?
தனக்கு ஏதும் நடக்கவில்லை என்பதால் வருவது பொறாமையா? ஆத்திரமா?


கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்.

கோபம் வரும்பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பயம் அளவு மீறிப்போய் அட்ரினலும் எக்கச்சக்கமாய் சுரக்கிறது. இதனால் ஒரு போதை கூடிய நிலைக்குப் போய் விடுகிறோம். மூளைக்கு இரத்தம் செல்வது குறைந்து போகிறது. இதனால் சிந்தனை மழுங்கி விடுகிறது. நமது கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். அனிச்சை செயல்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் உண்டாகும் பின்விளைவு தான் ஆத்திரம். திட்டுதல், அடித்தல் இன்னபிற கோபத்தின் வெளிப்பாடாகிய ஆத்திரம்.. எல்லாவற்றிற்கும் அடிப்படை இயலாமை என்ற தாழ்வு மனப்பான்மைதான்.

ஆளுமை மனப்பான்மை கொண்டவருக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டு.. அதைத்தான் அவர்களின் கோபமும் காட்டுகிறது. எப்போதெல்லாம் நான் என்ற அகந்தைக்குச் சவால் வருகிறதோ அதை எதிர்கொள்ள இயலாத போது அவர்களுக்குக் கோபம் வரும்.
 



இங்கே கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லி இருக்கிறேன்..

தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் முதலில் எழுவது ஏமாற்றம். ஏமாற்றங்கள் அதிகரிக்கும் போது இயலாமை மேலோங்கி கோபமாகிறது.

No comments:

Post a Comment