Thursday, July 31, 2014

ரிலெடிவிடி தியரி!




சொல்லால் மனதால் தொடராச்சம் பூரணத்தில்
நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ ?



தாயுமானவர்




பூரணம் என்றால் முழுமை. சம்பூரணம் என்றால் என்றால் நிறைவான முழுமை. பூரண நிலவை சம்பூர்ண நிலவு என்று ஏன் சொல்வதில்லை? காரணம் அதில் கறை இருக்கில்லையா? அதனால்தான் அதைச் சம்பூர்ண நிலவு என்று சொல்வது இல்லை.


அந்தச் சம்பூர்ணம் எப்படிப் பட்டச் சம்பூரணம்.. அதைச் சொல்லால் முழுமையாகச் சொல்ல முடியாது. மனதால் முழுதால் அறிந்து கொள்ளவும் முடியாது..


இவ்வளவுதான் என்று வரையறை செய்ய முடியாத அந்தச் சம்பூர்ணத்தை சொல்லாலோ அல்லது கற்பனையாலோ எட்ட முடிவதில்லை.


அதில் எப்படி நிற்க வேண்டும் என்று கேட்கிறார், நிலை நிற்பதென்னாளோ என்கிறார், நில்லா நிலையாய் நிலை நிற்க வேண்டுமாம்.


இந்தப் பேரண்டத்தில் எல்லாமே நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கின்றன. அப்படி சுழன்று கொண்டே இருக்கும் பேரண்டத்தில் நிலையாய் இருக்கணும் என்றால் நிற்கவே கூடாது.


நிலையாய் நின்றால் நிலை தவறிவிடும் என்பதுதான் இந்தப் பேரண்டத்தில் உண்மை. அண்டச் சுழற்சியின் வேகத்திற்கேற்ப நகர்ந்து கொண்டே இருப்பதுதான் நிலையாய் இருக்க ஒரே வழி. ஐன்ஸ்டீன் சொன்ன ரிலேடிவிட்டி தியரியை தாயுமானவர் எவ்வளவு அழகாக நான்கே வார்த்தைகளில் நறுக்கென்று சொல்லி விட்டார்.


நில்லா நிலையாய் நிலை நிற்பதென்னாளோ..


தாயுமானவனும் அப்படித்தான். ஆடிக் கொண்டே இருக்கும் நடராஜன், அந்த ஆட்டத்தில் அவனுள் நிலைநிற்க நாமும் நில்லாமல் இருக்கவேண்டியதாக இருக்கிறது..


சொல்லாலும் கற்பனையினாலும் அளக்க முடியா அந்தக் குறையில்லா பூரணத்தில் நிற்க அவன் ஆட்டுவிப்புக்கெல்லாம் ஆட வேண்டியதாக இருக்கிறது.

No comments:

Post a Comment