Saturday, June 12, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி. -பாகம் 1




தமிழ் வழிக் கல்வியே பிரதானமாக இருந்த அந்தக் காலத்தில் (70 களின் ஆரம்பத்தில்) சிண்ட்ரெல்லா, ஸ்னோ வைட் எல்லாம் கேள்விப்படாத கதைகள். ஆனால் அதே போல சில கதைகள் புழக்கத்தில் இருந்தன, அவற்றில் ஒன்றுதான் இந்தக் கதை.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. அவருக்கு ஒரே ஒரு குட்டிப் பொண்ணு. அவள் பேரு மரகதவல்லி.

மரகதவல்லி பிறந்த உடனே, ராணி இறந்துட்டாங்க,

அம்மா இல்லாம குழந்தையை எப்படி வளர்க்கறது என்று ராஜா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாராம்.

சித்தி-ராணி சித்ராங்கி மொதல்ல அமைதியாத்தான் இருந்தா, ஆனால் அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

மரகதவல்லி இருந்தா தன் மகள்களுக்கு அரசாங்கம் கிடைக்காது என்று சித்ராங்கிங்குப் பொறாமை. அதுவும் இல்லாம மரகதவல்லி அழகு, அழகு அப்படி ஒரு அழகு.

அதனால சித்தி - ராங்கி சித்ராங்கி தன் நம்பிக்கைக்கு உரிய ஒரு வீரனை அழைத்து மரகதவல்லியை கடத்திகிட்டுப் போய் தலையை வெட்டிப் போட்டிடச் சொன்னா.

அந்த வீரன் மரகதவல்லியை ஒரு சாக்கு மூட்டையில் வச்சுக் கட்டிகிட்டு காட்டுக்குப் போனான. அவலை அவிழ்த்து வெட்டப் போனான்.

மரகதவல்லியின் அழகான குழந்தை முகத்தைக் கண்டதும் வீரனால வெட்ட முடியலை. நாட்டுப் பக்கம் வந்திடாதே வந்தா சித்தி வெட்டிருவா என்றுச் சொல்லி காட்டுக்குள் விரட்டி விட்டுட்டான்.

காட்டுக்குள் அழுதுகிட்டே போன மரகதவல்லி களைத்துப் போய். ஒரு மரத்தடியில் தூங்கிட்டா..

அந்த மரத்தில் ஏழு பச்சைக்கிளிகள் வாழ்ந்துகிட்டு இருந்திச்சு, ஏழும் மிக மிக புத்திசாலிக் கிளிகள்,

மரத்தடியில் படுத்துக் கிடந்த மரகதவல்லியைப் பார்த்த கிளிகளுக்கு பாவமா இருந்தது.. ஒரு கிளி பக்கத்தில ஓடிய ஓடையில் முழுகி பறந்து வந்து மரகதவல்லி முகத்தின் மேல உதற, தண்ணீர் பட்டு மரகதவல்லி எழுந்தா.

இன்னொரு கிளி கூட்டில இருந்து பழங்களை எடுத்து வந்து கொடுத்தது.

பழம் சாப்பிட்டு பசியாறிய மரகதவல்லியோட கதையைக் கேட்டக் கிளிகள், இனி நீ எங்கயும் போகவேணாம். எங்களோடயே இருந்து விடு என்று சொல்ல இந்தச் சின்னக் கூட்டில நான் எப்படி இருக்கறது என்று கேட்டாள் மரகதவல்லி.

ஏழு கிளிகளும் சேர்ந்து மளமளன்னு ஒரு சின்ன குச்சு வீட்டைக் கட்டின.

குச்சு வீட்டைப் பார்த்ததும் மரகதவல்லிக்கு ஒரே சந்தோஷம். வீட்டைச் சுத்தி சுத்தம் பண்ணி அழகா ஆக்கிட்டா..

கிளிகள் பறந்து போய் கொத்து கொத்தா வேப்பிலைகள் கொண்டுவந்து வீட்டைச் சுத்திக் கட்டின.

வேப்பிலை எதுக்குன்னு மரகதவல்லி கேட்டா. இந்தக் காட்டில நிறைய பூதங்கள் இருக்கு. அதெல்லாம் மாயமந்திரம் தெரிஞ்சதுங்க. யார் உருவத்தில வேணும்னாலும் வரும். வேப்பிலை இருக்கிற எடத்தில அதுங்களால வரமுடியாது. அதனாலதான் கட்டறோம்.

பூதங்கள் எந்த உருவத்தில வேணும்னாலும் வரும் . அதனால் எந்தக்காரணம் கொண்டும் இந்த வேப்பிலை தோரணம் தாண்டி வந்திடாதே என்று கிளிகள் எச்சரிக்கை பண்ணின.

கொஞ்ச காலம் வாழ்க்கை சுகமா போயிட்டு இருந்தது. மரகதவல்லிக்கு 18 வயசாச்சு. மிக அழகிய பெண்ணாக வளர்ந்துட்டா..

சந்தோஷமா சிரிச்சுகிட்டு விளையாடிகிட்டு இருந்த மரகதவல்லியை ஒரு நாள் ஒரு பூதம் பார்த்திட்டது...


இவளை எப்படியாவது தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கணும்னு பூதம் நினைச்சது...


அன்னிக்கு எல்லாக் கிளிகளும் உணவு தேட போன பின்னாடி ஒரு பாட்டி உருவம் எடுத்துகிட்டு அந்தக் குச்சு வீட்டுப் பக்கம் போனது.

தொடரும்

No comments:

Post a Comment