Friday, June 25, 2010

தாமரை பதில்கள் - 144

கேள்வி எண் 144:


கேட்டவர் : பரஞ்சோதி



நம் நாட்டினை பிச்சைக்காரர்கள், சோம்பேறிகளே இல்லாத நாடாக்க என்ன செய்ய வேண்டும்?



பதில் சொல்ல ரொம்ப சோம்பலா இருக்கு.    யாரையாவது கேட்டுச் சொல்றேன் இருங்க...

சரி சீரியஸா சொல்றேன்.. இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சினிமாவில் பதில் சொல்லிட்டாங்க ...


ஒரு டாக்ஸியில் நான்கு நண்பர்கள் டெல்லியைச் சுத்தி பார்க்கப் போனாங்களாம், டிரைவர் சர்தார்ஜியாம். சர்தார்ஜி ஜோக் சொல்லிச் சொல்லி கடுப்படிச்சாங்களாம். அவரும் சிரிச்சிகிட்டே வண்டி ஓட்டினாராம். 

கடைசியா டாக்சியை விட்டு இறங்கும் போது, அந்த டிரைவர் சர்தார்ஜி, ஒரு ரூபாயைக் கொடுத்து, டெல்லியில் நீங்க பார்க்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு இதைக் கொடுங்கன்னு சொன்னாராம்.

சீரியஸாவே தேடிப்பார்த்திருக்காங்க. ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனைக் கூட பார்க்க முடியலையாம். சர்தார்ஜிகள், தங்களால் முடிந்த அளவு சுயமா தொழில் செய்வாங்களாம்.

இது உங்க கேள்விக்கு பதிலா இருக்குமே.. (நன்றி : அபியும் நானும்)


ஒரு கலாச்சாரம், பண்பாடு மட்டுமே இவை இரண்டையும் ஒழிக்கக் கூடியது. நம் பண்பாடு பிச்சை எடுப்பதையோ அல்லது "சும்மா" இருப்பதையோ மிகப் பெரிய பாவம் என்று சொல்வதே இல்லையே. அது நடந்தால் தானே மாறும். வாங்க நம்ம நாட்டு சகோதரர்கிட்டயே இதையும் கத்துக்கலாம்



No comments:

Post a Comment