Saturday, June 19, 2010

ரசத்தில் நவரசம்...!!!





கண்ணே!
உன் கைபட்டு
கரைந்ததில்
ஆனந்தமாய்
கண்ணீர் விட்டதோ புளி..
...
...
...
...
ரசத்தில்
உப்பு கொஞ்சம் தூக்கல்தான்



-----------------------------------------------------------------------------


கண்ணே! உன் கைபட்டு ------ காதல்
கரைந்ததில் ------- கருணை
ஆனந்தமாய் கண்ணீர் விட்டதோ புளி..----- மகிழ்ச்சி

ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான் -- ஹாஸ்யம் (நகைச்சுவை)


இதை சொல்லும் போது எனக்கு ------ வீரம்
கேட்டவுடன் மனைவிக்கு ------- குழப்பம்


சிறிது நேரம் கழித்து ---- கோபம்
என் மனைவியின் கோபம் கண்டு எனக்கு ------ பயம்
என் மனைவி பாத்திர வீசல் ----- ரௌத்திரம்
கடைசியில் என் நிலை ------- சோகம்....


ரசத்தில் நவ ரசம் ---- நிஜம் தானே.....

.

No comments:

Post a Comment