Tuesday, June 15, 2010

தாமரை பதில்கள் : 142

கேள்வி எண் 142:



கேட்டவர் : அன்புரசிகன்


தெற்காசிய நாடுகளின் வயல்வெளிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கடைகள் வாகனங்கள் திருத்துமிடம் போன்ற இடங்களில் வெள்ளையர்கள் வேலைசெய்யும் நிலை என்றாவது வருமா?


இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன் அன்பு..

காரணம் 1. தெற்காசிய நாடுகளில் தேவையான மனித சக்தி இருக்கிறது, அதற்கேற்ப வேலையில்லா திண்டாட்டமும் இருக்கிறது.

காரணம் 2. அதற்கான தேவை இல்லை. வெள்ளையர்களின் கைவசம் இருக்கும் இயற்கை வளங்கள் அதிகம். தனிமனிதனுக்கு கிடைக்கும் இயற்கை வளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது..

காரணம் 3. அவர்களின் மனப்பான்மை. எங்கு இருந்தாலும் தன்னை உயர்த்தி வைத்துக்கொள்ளூம் ஆளுமை மனப்பான்மை

காரணம் 4. அப்படியே அவர்கள் வந்தாலும் நாம் அவர்கள் அடங்கி விட்டதால் அடிமைகளாகத்தான் நடத்துவுமே தவிர வேலைக்காரர்களாக நடத்த மாட்டோம்.


No comments:

Post a Comment