Monday, June 14, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி.-இறுதிப் பாகம்




அங்க நாட்டு ராஜா படையெடுத்து வந்திருக்கார் என்ற செய்தி மரகதவல்லிக்கு தெரிஞ்சது, 

மரகதவல்லி உடனே உஜ்ஜயினி ராஜாவைப் பார்க்க ஓடினா...

ராஜாவைச் சந்திச்ச மரகதவல்லி தானும் போர்களத்துக்கு வருவேன் என்றாள். 

நாட்டில் ஆயிரக்கணக்கில் வீரர்கள் இருக்க ஒரு பெண்மகள் போருக்குப் போக அனுமதிக்க முடியாது அப்படின்னு சொன்னாரு..

அரசே நான் சென்றால் பல உயிர்ச்சேதங்களைத் தடுக்க முடியும் அதனால தயவு செய்து என்னை அனுமதிக்கனும்னு மரகதவல்லி சொன்னாள்..

மரகதவல்லிக்கு ஒரு தேரும் ஆயுதங்களும் கொடுத்து ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார் ராஜா.. ஏழுகிளிகளும் தேரின் மீது உட்கார்ந்து கொண்டன..

இரண்டு படைகளும் அணிவகுத்து நின்றன.. எதிரெதிரில் தேர்கல் நிற்க மரகதவல்லி கிளிகளிடம்.. அங்க நாட்டு அரசரோட தேரைச் சுத்தி வந்து தன் பேரைச் சொல்லி கத்தச் சொன்னா..

கிளிகளும் அங்க நாட்டு அரசரோட தேரைச் சுத்தி வந்து மரகதவல்லி.. மரகதவல்லி அப்படின்னு கத்திச்சுங்க...

எதிரிப் படைத் தேரில் ஏற்கனவே ஒரு பெண்ணைப் பாத்துக் குழம்பிப் போன அங்க நாட்டு அரசருக்கு மரகதவல்லி என்ற பெயர் ஒரு பொறியைக் கிளப்ப தேரை விட்டிறங்கி மரகதவல்லியோட தேரை நோக்கி ஓடிவந்தார்... 





மரகதவல்லியும் "அப்பா" "அப்பா" ன்னு அழைச்சுகிட்டே ஓடினா....

பல ஆண்டுகள் கழிச்சு அங்க நாட்டு மன்னருக்கு இறந்து போய்விட்டாள் அப்படின்னு நினைச்சுகிட்டிருந்த மகள் கிடைச்சுட்டா...

மரகதவல்லி எல்லாக் கதைகளையும் அப்பாவுக்குச் சொன்னா.. 

அங்க நாட்டு ராஜாவான மரகதவல்லியோட அப்பா, கொடூரமான சித்தியை நாடுகடத்த உத்தரவிட்டார்.. அவர் விருப்பப்படியே அவருடைய மகளுக்கும் உஜ்ஜயினி ராஜகுமாரன் உதயகுமாரனுக்கும் திருமணம் கோலாகலமா நடந்தது...

ராஜகுமாரிகள் இரண்டுபேரும் அம்மாவுக்காக வருத்தப்பட்டாலும் அக்கா கிடைச்சதால சந்தோஷம் ஆனாங்க..

உஜ்ஜயினி, அங்கநாடு இரண்டையும் உதயகுமாரன் அரசனாகி நல்லாட்சி நடத்தினான். 

எல்லோரும் சந்தோஷமா நீண்டகாலம் வாழ்ந்தாங்க..


முற்றும.


No comments:

Post a Comment