Saturday, June 5, 2010

தாமரை பதில்கள் : 115

கேள்வி எண் 115:



கேட்டவர் : loshan


ஈழத்து போராட்டத்தின் முடிவு எவ்வாறனதாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட கருத்து மட்டுமே..!




என்னைப் பொறுத்த வரை முடிவு என்பது வெகுதொலைவில் இருக்கிறது. புலிகள் வேரறுந்து போவதோ அல்லது தனி ஈழமோ இரண்டுமே என்னைப் பொறுத்தவரை முடிவுகள் அல்ல. இவைகள் இன்னொரு ஆரம்பம்தான்.

ஈழப் போராட்டம் மக்களின் நிம்மதியான வாழ்க்கையில் முடிய வேண்டும் என்பது ஆசை. 

ஈழப் போராட்டம் தமிழனின் வீழ்ச்சியில் அல்ல. உலகளாவிய 
விழிப்புணர்ச்சியில் முடியும் என்பது என் கணிப்பு. 

என் சகோதரர்கள் தங்களின் சொந்த பூமியில் சந்தோசமாய் வாழவதைக் கண்டு விட்டுத்தான் நான் மாள்வேன் என்பது என் உறுதி.
 

No comments:

Post a Comment