Tuesday, June 15, 2010

பத்து!!!



பத்திலொன்று நூலெடுக்க
பத்திலொன்று நிலைப்படுத்த
பத்திலொன்று வெளியெடுக்க
பத்திலொன்று வெளிவர
பத்திலொன்று உள்புகுத்த
பத்திலொன்று தலையெடுக்க
பத்திலொன்று சிலையெடுக்க
பத்திலொன்று களையெடுக்க
பத்திலொன்று மலையெடுக்க
பத்திலொன்று எல்லாம் எடுக்குமோ
பத்துமோ பத்தாதோ
பத்து.





பத்திலொன்று நூலெடுக்க - பத்தில் ஒரு அவதாரமான மச்ச அவதாரத்தில் வேத நூட்களை கடலின் ஆழத்தில் இருந்து மீட்டெடுத்த..


பத்திலொன்று நிலைப்படுத்த - பத்தில் ஒரு அவதாரமான கூர்ம அவதாரத்தில் மந்தார மலையில் சாயாமல் நிலைப்படுத்தி அமிர்தம் எடுக்க உதவிய

பத்திலொன்று வெளியெடுக்க - பத்தில் ஒரு அவதாரமான வராக அவதாரத்தில் கடலடியில் ஒளித்து வைக்கப் பட்ட பூமியை வெளியில் எடுக்க..

பத்திலொன்று வெளிவர பத்தில் ஒரு அவதாரமான நரசிம்ம அவதாரம் தூணைப் பிளந்து வெளிவந்தது


பத்திலொன்று உள்புகுத்த பத்தில் ஒரு அவதாரமான வாமன அவதாரத்தில் மஹாபலியை பூமிக்கடியில் பாதாளத்தில் புகுத்திய

பத்திலொன்று தலையெடுக்க பத்தில் ஒரு அவதாரமான பரசுராம அவதாரத்தில் 21 சத்ரிய வம்சத்தவரை அழித்த

பத்திலொன்று சிலையெடுக்க பத்தில் ஒரு அவதாரமான இராம அவதாரத்தில் வில்லெடுத்த

பத்திலொன்று களையெடுக்க பத்தில் ஒரு அவதாரமான ப்லராம அவதாரத்தில் கலப்பை கொண்டு பல வீணர்களை அழித்த..

பத்திலொன்று மலையெடுக்க பத்தில் ஒரு அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன மலையைத் தூக்கிய

பத்திலொன்று எல்லாம் எடுக்குமோ பத்தில் ஒரு அவதாரமான கல்கி அவதாரத்தில் உலகத்தை மஹாபிரளயத்தில் அழிக்க


பத்துமோ பத்தாதோ

பத்து


இந்தப் பத்து அவதாரங்களும் போதுமோ இன்னும் பற்பல அவதாரங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்குமோ சொல்.

No comments:

Post a Comment