Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 11

இரண்டாம் புத்தகம் வெளிவந்ததும் நன்கு விற்பனயாச்சு. அதே சமயம் சக்திவேல் திருச்சி வானொலியில் இளையபாரதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான் என்.எஸ்.எஸ் மூலமாக. (இளைய பாரதம் இரவு 8:00 மணியிலிருந்து 8:30 மணி வரை).

இந்த முறை என்கவிதையை மட்டுமல்ல, புத்தகத்தில் வெளியாகி இருந்த ஒரு பெண்கவிஞரின் கவிதையயும் உபயோகப் படுத்தினான். கவிஞரின் பேரையும் சொல்லாமலே.. அது ஒளிபரப்பான அடுத்த நாள்தான் மத்தவங்களுக்குத் தெரியும்..

நமக்குத் தான் தங்கைகள் அப்படின்னா வே ஒரு சாஃப்ட் கார்னராச்சே! கல்லூரி வராண்டாவில் வைத்து கண்டபடித் திட்டி அவமானப் படுத்தினேன்.. புத்தகத்தில் வந்த கவிதை என்பதால் கையும் களவுமாய் மாட்டிகிட்டான்.. பழைய வண்டவாளங்களும் வெளியே வர வெட்டி பந்தா ஆப்பு வச்சது அவனது இமேஜூக்கு..

அந்த வருடம் அதுக்கு மேல அவ்வளவு சுதியில்லை.. பாழடைந்த மண்டபம் எங்க கவனத்தை திசை திருப்பி இருந்தது..

மூணாம் வருஷம்.. இதுதான் வெற்றி மேல வெற்றி வந்து குவிந்த வருஷம்..

வருஷம் தொடங்கின உடனே முடிவு பண்ணினோம்.. நம்முடைய தம்பி தங்கைகளை வளர்த்து மன்றத்தை அவங்க கையில ஒப்படைக்கண்ணும்னு..
வருட ஆரம்பத்தில போட்டிகள்ள் நடத்தினோம், கதை, கவிதை, கட்டுரை, பேச்சு இப்படி பலபோட்டிகள். அதில் கிடைத்த வாரிசுகள்

முருகானந்தம், பாலசுப்ரமணியம், லஷ்மி, சுமதி சாமுண்டீஸ்வரி இப்படிச் சிலர்.. இதில் முருகானந்ததைப் பத்திச் சொல்லணும்.

இந்த வருஷம் இவன் கல்லுரியில் சேர்ந்தவன்,, ஆனால் ஒருத்தர் திடீர்னு என்கிட்ட எதாவது ஒரு கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்வேனோ, ஏறத்தாழ அதே பதில்தான் அவன்கிட்ட இருந்து வரும். அவனுடைய அறை நண்பர்கள் என்கூட நல்லா பழகிட்டாங்க.. கோபி வேற ஸ்ட்ரைக் பிரச்சனையில் (யாரையும் கை நீட்டி அடிக்காதே) ஹாஸ்டலை விட்டுப் போயிட்டதால இவங்க ரூம்லதான் மூன்றாம் வருஷம் கழிஞ்சது.

இந்த முறை பத்திரிக்கைக்காக இளசை சுந்தரம் அவர்களை பேட்டி எடுத்தோம். வானொலி அண்ணா என அன்போடு அழைக்கப்படும் அவர் குழந்தைகள் நிகழ்ச்சிகளின் இயக்குனர். அவர் இளைய பாரதம் இயக்குனர் சக்ரவர்த்தியை அறிமுகம் செய்ய இளைய பாரதம் ஸ்லாட் கிடைச்சது..

நான், பழனியப்பன் இரண்டு பேரும் ஆலொசனை செஞ்சோம்.. முத்தமிழ் மன்றம் என்பதால மூணு தமிழும் இருக்கணும். 1 நாடகம், இரண்டு பாட்டு, மூணு கவிதை என முடிவானது..

பாட்டுக்கு சிகாமணி குழுவினரைத் தயார் பண்ணினோம். பாடலகளை நாங்களே எழுதினோம். நான் ஒரு பாட்டும் (சேரன் வில்லொன்று கண்டேன்) தளபதி ஒரு பாட்டும் (நீதானா அழைத்தது) எழுத சிகாமணி இசையமைத்தான்..

நாடகத்துக்கு நம்ம பாசக்கார மதுரைக் கோஷ்டியைத் தயார் செய்தேன், அதில் என்.எஸ்.கே என்று அறியப்பட்ட ராஜேந்திரன் ஒரு முதல் வருஷப் பொண்ணு பின்னால சுத்திகிட்டு இருந்தார். அவரையும் அந்தப் பொண்ணையும் மையமா வச்சு நாடகம் எழுதியாச்சு (கதாநாயகியா நடிச்சது நளினி என்ற தங்கை) மூணு கவிதை.. ஒண்ணு நான், ஒண்ணு சர்வாதிகாரி (முதல் வருட மாணவர்) ஒண்ணு பழனியப்பன்..

ஸ்கிரிப்டை சக்ரவர்த்தி அவர்களிடம் காட்டி ஓ.கே வாங்கினோம்.. மட மடவென ரிகர்ஷல் நடந்தது..

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். இரண்டு மணிக்கு ரெகார்டிங் ஆரம்பம்.. முதல்ல ஒரு கவிதை - பழனியப்பன் ஆரம்பித்தார். அரைமணி நேரத்தில் அது முடிய அடுத்து நீதானா அழைத்தது பாட்டு, அதுவும் முப்பது நிமிடம் எடுத்துகிச்சு. அப்புறம் நாடகம். இரண்டு மண்ணி நேரமாச்சு நாடகம் முடிய.. அப்புறம் சர்வாடிகாரியின் கவிதையும், சேரன் வில்லொன்று கண்டேன் பாட்டும் பதிவாகி முடிய மணி 7:00.. ரெகார்டிங் இதோட முடிச்சிக்கலாமா அப்படின்னு சக்ரவர்த்தி அவர்கள் கேட்க இல்லை இன்னும் ஒரே ஒரு கவிதை தானே முடிச்சிரலாம் என்றேன்..

சரி ஒரு அரைமணி நேரம்தானே என அவரும் ஒத்துழைத்தார்.

ஒரு கல்யாணத் தூது - இதுதான் அந்தக் கவிதை.. மைக் முன்னால் நின்று கண் மூடி சரளமாய்ச் சொல்ல ஆரம்பித்தேன்.. மூன்றரை நிமிடங்கள், தங்கு தடையின்ற்றி வெள்ளமாய் வார்த்தைகள் வழிந்தோட ஏதோ என் சொந்தக் கதையை நண்ண்பனுக்குச் சொல்லுவதாய் இயல்பாய் ..

முடித்த பொது பலமான கைதட்டுகள்.. சிங்கிள் ஷாட்.. ஷாட் ஓ.கே.. சக்ரவர்த்தி ஓடோடி வந்து என் கைகளைப் பிடித்துக் குலுக்கி கட்டிக்கொண்டார்.. இது காகிதத்தில எழுதினதா இல்லை மனசில எழுதினதா? உங்க அப்பா புரிஞ்சுக்குவாரில்லையா எனக் கேட்க, அவருக்கு இதெல்லாம் கற்பனை என்று விளங்க வைக்கவே எனக்கு வெகுநேரம் பிடித்தது.. ரெகார்டிங் சந்தோஷமாய் முடிய இரண்டு நாட்கள் கழித்து எடிட் செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவை அவர் போட்டுக் காட்ட மிகச் சிறப்பாய் வந்திருந்தது அது..

ஆக எங்களது படைப்புகள் காற்றில் கலந்து தமிழகமெங்கும் ஒலித்தன. கல்லூரியில் திடீர் ஹீரோக்கள் ஆனோம்.. சிகாமணிக்கும் அவன் குழுவிற்கும் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா டீமில் இடம் கிடைக்க, நானும் அதில் பாடல் எழுத ஒட்டிக் கொண்டேன்.. நளினியும் நன்றாகப் பாடுவார். அவர் முதலிலேயே ஆர்கெஸ்ட்ரா குழுவில் இருந்தார்..

கல்லூரியில் அந்தப்பாட்டைக் கேட்ட அத்தனைத் தங்கைகளும், தம்பிகளும் கவிதை நாயகி ஒருத்தி இருப்பதாகவே முடிவு கட்டினதுதான் உச்சகட்டம். அந்த வதந்தி அடங்கி விட்டது காலம் போகப் போக..

அடுத்த படையெடுப்பு புதுக்கோட்டை முற்ற்போக்கு எழுத்தாளர்கள் நடத்திய மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஒவியம், புத்தக அறிவு, கதை போட்டிகள் தான்..

நடுவர்கள் ஒரு கவிதையை, பாடலை அதன் வரிகளின் அழுத்தம் புரியாமல் மதிப்பிடுவது எவ்வளவு கடினம் எனப் புரிய வைத்தது அது..

அதே சமயம் ஒரு கிசு கிசு.. யாருமே எதிர்பார்க்காட அந்தப் போட்டியில் எனக்கு மாவட்ட அளவிலான இரண்டாம் பரிசு கிடைத்தது..
இது உங்களுக்கும் ஷாக்காக இருக்கும்.!!!

தொடரும்.

.

No comments:

Post a Comment