Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 17

நாட்டாமைத் தீர்ப்பு

நான் தீர்ப்பு சொல்ல எழுந்தேன்.. முதல்ல முடிவுகளைச் சொல்லிட்டேன்.. அப்புறம்தான் சொன்னேன்.. நண்பர் ஒரு கருத்து சொன்னார்.. நான் நானாக இருந்தால் நீ நீயாக இருந்தால் அது அதுவாக இருந்தால் இது இதுவாக இருந்தால் நாம் நாமாக இருக்கலாம் என்று..

இது தவறான கருத்து..

நான் நானாக இருந்து நீ நீயாக இருந்து இதோ இந்த நாற்காலி மரமாய் இருந்தாலென்ன மரம் நாற்காலியாய் இருந்தால் என்ன நாம் நாம்தானே!

ஆனால் அப்படி மட்டுமே சொல்லிவிட முடியுமா நானும் நீயும் மட்டுமே நானாகவும் நீயாகவும் இருந்தால் நாம் ஆகிய மூகாம்பிகைக் கல்லூரி மாணவர்களும், நீங்கள் ஆகிய பல கல்லூரி நண்பர்களும் நாங்களாகவும் நீங்களாகவும் இருந்தால் தானே நாம் நாமாக இருக்க முடியும்..

அவ்வளவுதானா இல்லையே! நாங்களில் நானடக்கம், நீங்களில் நீ அடக்கம். அப்படியானால் நாங்களும் நீங்களும் போதுமே நாம் நாமாக இருக்க...

இப்போது அவர்கள் அதாவது இவ்விழாவில் பங்கு கொள்ளாதவர்கள், இவர்கள் இவ்விழாவினைக் காண வந்திருக்கும் ஊர்மக்கள், அனைவரையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள், இவர்கள் என எவர்களையும் பற்றிக் கவலைப்படாமல் நாங்களும் நீங்களும் இருப்பதில் தானே நாம் நாமாக இருக்கிறோம்..

ஆக நாம் நாமாக இருக்க நாங்கள் நாங்களாயிருந்து நீங்கள் நீங்களாயிருந்தால் போதும் இப்போது இன்னொரு சாத்தியக் கூறும் உள்ளது.. நாங்கள் நீங்களாயிருந்து நீங்கள் நாங்களாயிருந்தால் நாம் நாமாக இருக்க முடியுமா? இது சற்று கடினமான கேள்விதான்.. ஏனென்றால்

வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்.. பிளேடை பிளேடால் தான் அறுக்க முடியும்.. ஆனாலும் ஒரு சந்தேகம். அறுக்கிற பிளேடு அறுபடுமா? அறுபடும் பிளேடு அறுக்குமா? எனவே அறுப்பது என் கடன் அறுபடுவது வினைப்பயன்..

இங்கே நடந்தது அறுவைப் போட்டி.. மக்களின் சிந்தனையே மழுங்கும் அளவிற்கு அறுத்த பச்சையப்பாஸ் மாணவரையே சிறந்த பிளேடு என்று அறிவிக்கிறேன் எனத் தீர்ப்பு சொல்ல..

பந்தலே அதிர்ந்தது..

போட்டிகள் முடிய நிறைவு விழாவும் இனிதே முடிந்தது. இப்பொழுது அதே ஜெய்சங்கர் முன்னிலையில் மேடையேறி கவிதை படைத்து அந்தக் கடைசிக் கலிங்கப் போரையும் (Final Frontire) வென்றேன்..

ஆனால் கல்லூரி சாகஸங்கள் இதோடு முடியவில்லை..

தொடரும்.
.

No comments:

Post a Comment