Wednesday, December 16, 2009

திருமண வாழ்த்து!!!

மணமகனுக்கு

இல்லறம் என்னும் சோலையிலே - உன்
   இதயம் நுழைகின்ற வேளையிலே
நல்லற மாக வாழ்த்துகிறேன் - பாச
   நெஞ்சின் ஆசை கூறுகிறேன்
இருமனம் கலந்து உறவாட - இன்று
   இணைந்த கையென்றும் பிரியாது
திருமகள் துணையாய் வாழ்ந்திடுவாய் - நீ
   தினம்தினம் புதிதாய் பிறந்திருவாய்




மணமகளுக்கு

புண்ணியம் உனைப்போல் செய்தாரில்லை - இந்த
   புருஷோத் தமனை கைபிடிக்க
எண்ணிய தெல்லாம் ஈடேறும் - உன்
   எழில்மனை யில்புது ஒளிசேரும்
கண்ணிய மிக்க பெரியவர்கள் - மனம்
   கனிந்து வாழ்த்தும் வாழ்த்துக்களால்
எண்ணிலா வளங்கள் இயைந்துவர - நீ
   எழிலுடன் வாழிய பல்லான்டு


இருவருக்கும்

பேறெனக் கூறிடும் பதினாறும் - தாமே
   பெருமையுடன் வந்து உமைச்சேரும்
நூறென ஆகுக நுமதாயுள் - அதில்
   நிறைவுடன் வாழிய வளமோடு
சீரென பிறந்திடும் இருமகவு - நும்
   சந்தோச வாழ்வின் நல்வரவு
தேரென ஒடட்டும் நும்வாழ்வு - அதில்
   தேனென இனிக்கட்டும் நும்-நினைவு

No comments:

Post a Comment