Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 18

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி!


இதென்றும் தமிழ் சேவை செய்ய முளைத்தது இல்லை. 1988 ஜனவரி மாசம் 14 ஆம் நாள் பொங்கலுக்கு ஆரம்பிக்கப்பட்டது இந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி.. எம்.ஜி.ஆர் நடிச்ச நாடகக் கம்பெனி பெயரான ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பேரில ஒரு கேங்க் சேர்ந்தோம். இதுதான் நான் ரொம்ப நாள் இருந்த குரூப்.

சஃபீ, ஜெயக்குமார், என்.எஸ்.கே, சிவகுமார், சுந்தரராஜன், நான், ராஜபிரபு, செல்வராஜ்.. இந்த எட்டுபேர்தான் இந்த கம்பெனி மெம்பர்கள். ஆரம்பமே அதிரடி..

காலேஜ் ஆஃபிஸ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸ் அட்ரஸூம் வாங்கினோம்.. நான் ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதை எழுத போஸ்ட் கார்ட் வாங்கி பிரிண்ட் செய்து .. இவண் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனின்னு மெம்பர்ஸ் பேர் போட்டு எல்லார் அட்ரஸும் இராப்பகலா எழுதி போஸ்ட் செஞ்சோம்.

ஒரே நாளில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி டாப் கியரில் எகிற ஆரம்பிச்சாச்சு..

எங்க கொள்கைகளா?

1. வெட்டி பந்தா பண்றவங்களை ஓய்க்கிறது
2. காதலர்களுக்கு உதவுவது
3. டைரக்டரிலிருந்து பியூன் வரை பாசம் காட்டறது
4. எல்லோரும் 8 வது செமஸ்டர்ல ஆல்பாஸ் பண்ணறது
5. கவலை இல்லாம வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணறது

இப்படி இருக்கறதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்??

இருந்திச்சே

தொடரும்
.

No comments:

Post a Comment