Monday, December 21, 2009

எழுத்துகள்



எண்ணமெனும் உயிரூதி
எழுப்பி விட்ட எழுத்துகள்
என்னைப் பிரம்மானாக்கி

சின்னக் காகிதத்தில் இருந்து
செவ்வாயில் சனி நீக்கி
திங்களில் ஞாயிறு படைத்து
தானும் பிரம்மமாகும்

சித்துவிளையாடிச் சித்தமேறிச்
செத்துப்போகாத எழுத்துக்கள்

எழுத்தறிவித்தவன் இறைவனாம்
நானும் இறைவனாக
எழுத்தும் இறைவனாக

No comments:

Post a Comment