Wednesday, December 23, 2009

தமிழாக்கம் எதுவரை?



போத்தல் - தமிழில் எப்படிச் சொல்றதுங்கோ.

பாட்டில் - ஆங்கிலம்

குப்பி - சிறிய பாட்டில்
குடுவை - பெரிய பாட்டில்

நறுமணக் குப்பி
கண்ணாடிக் குடுவை

ஆனால்

தாமஸை - தோமையர் என்பதாலோ, சேவியரை - சவேரியார் என்பதினாலோ யூசூஃபை யாக்கோபு என்பதனாலோ தமிழில் சொல்வதாக அர்த்தம் எடுத்துக்காதீங்க
நம்ம திருநெல்வேலி டின்னவேலி, திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன், பூவிருந்தவல்லி பூனமல்லி ஆன கதையா இருக்கு பாட்டிலை போத்தல் என்பது..
 
ஏற்கெனவே இருக்கும் சொல்தான் குப்பி, குடுவை என்பது..

நான் சொன்னது பாட்டிலை போத்தல் என்று சொல்லி விட்டு அதைத் தமிழாக்கம் என்பது...

இதற்கு பாட்டில் என்றே சொல்லிவிட்டுப் போகலாம்..

தமிழுக்கு ஒரு தனித்தன்மை இருக்குண்ணா! ஒவ்வொரு வார்த்தை உருவாக்கும் பொழுதும் அந்தத் தனித்தன்மையை மனசில வாங்கி செய்யணும்..

இல்லைன்னா மொழிச்சிதைவுதான்,,


ஈழத்தில் போத்தல் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் குப்பி, குடுவை போன்ற வார்த்தைகள் மறக்கப் பட்டுள்ளனவே அதைக் கவனித்தீரா? அதனால்தான் சொல்கிறேன்...

ஒரு குரூப்பே திரியுது. இதுவரை நீங்கள் சந்திச்சிருப்பீங்க.. ஆனால் அடையாளம் கண்டிருக்க மாட்டீங்க. எல்லோரும் தனித்தமிழில் தான் பேசணும் என்று.. அவங்க மொழியைப் படுத்துகிற பாடு இருக்கே ஆஹாஹா...

பெயர் என்பது ஒருவருடைய உரிமை. நாம் எப்படி ஒருவரால் அறியப்பட வேண்டுகிறோம் என்ற உலகுக்குப் பறை சாற்றுவது.

ஒரு பொருளை நாம் கண்டு பிடிக்கும் பொழுது அதற்கு ஒரு பெயர் சூட்டுகிறோம். அதை அந்தப் பெயரால் அழைப்பதை கண்டுபிடிப்பாளனுக்குக் கொடுக்கும் மரியாதையாக நான் கருதுகிறேன்.

இராமன் விளைவு - அதுதானே மரியாதை, அதை ரேமாண்ட்ஸ் எஃபக்ட்(Raymand's effect) எனச் சொன்னால் சரியா? ஒரு அமெரிக்கன் இப்படிச் சொன்னால் கோபம் வருமா வராதா?

நாம் கண்டுபிடித்தால் தூயத் தமிழில் பெயர் வைக்கலாம்.. சரியா!!! மொழி வளரணும் என்றால் கூடவே இது மாதிரி கொஞ்சம் ரோஷமும் இருக்கணும்.

பாட்டல் என்பதைப் போத்தல் உச்சரிப்பதில் என்ன தவறு?

பாட்டல் என்பதை போத்தல் எனச் சொல்லக் காரணம் என்ன? தமிழனால் பாட்டல் என உச்சரிக்க இயலாதா? முடியும். ஆனால் போத்தல் என்பது அவன் பேசும் மொழியில் பொருந்த ஆரம்பித்தது..

ஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டல் - ஆங்கிலம் போத்தல் - தமிழ் என்ற நிலை கண்டிப்பாய் வரும்..

குப்பி, குடுவை போன்றவை வழக்கொழிந்து போகும்.. அதாவது பாட்டல் என்பதைக் கண்டுபிடித்தவனுக்கும் மரியாதை இல்லை, அதே சமயம் இருக்கும் வார்த்தைகளையும் இழந்து நிற்போம்..


கண்டுபிடிப்பாளன் வைத்த பெயர் பாக்டீரியா! . நுண்ணுயிர்க் கிருமி தமிழன் மாற்றிய பெயர். அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டது வைரஸ்.. இதுக்குத் தமிழன் வைத்த பெயர் என்ன? நுண்ணுயிர்கிருமிதான். அப்ப பாக்டீரியா? அது கிருமி.. அப்ப கண்ணுக்குத் தெரியும் கிருமிகள்? ஹி ஹி இப்படியெல்லாம் குடைஞ்சா நான் தமிழ் துரோகியென அறிவிக்கப் படுவேன்.

இருக்கிற வார்த்தைகளையும் இழக்க வைக்கும் இப்படி உச்சரிப்பு மாற்ற வார்த்தைகள் முழுமையான வேற்றுமொழி வார்த்தையை விட மிகக் கொடியவை..


சும்மாச் சும்மா மொழிமாற்றம் செய்து கொண்டிருக்காமல் உருப்படியா நம்ம பேர் சொல்ற மாதிரி எதாவது கண்டுபிடிக்கலாமா?


ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கும் பொழுது "கபடி" என்று அழைக்கப் பட விரும்புகிறோம்.

ஜப்பானில் சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது சிலம்பு என அழைக்கப் பட விரும்புகிறோம்.

இட்டாலியில் இட்லி இட்லி என்றே அழைக்கப்பட விரும்புகிறோம்..

தோசை ஃபிரான்ஸில் தொசை என்றே அழைக்கப் படட்டும்..

ரெயின்போ யாரும் கண்டு பிடித்ததல்ல இயற்கையான ஒன்று. அதற்குப் பலமொழிகளில் பல பெயர் இருக்கட்டும்..

ஆனால் புளூட்டோவும் இயற்கையானதுதான். ஆனால் அதை உலகிற்கு அறிவித்தவன் கொடுத்தப் பெயரைக் கொண்டே அழைப்போம்..

 சரிதானே!.. இப்ப உலகம் தானே ஒரு குடும்பமாக ஆரம்பித்து விடும்..


.

No comments:

Post a Comment