Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 9

நடமாடும் பல்கலைக் கழகம்

நான் மக்களோட ஃபுட்பால் ஆடிகிட்டு இருந்தப்ப ஒரு பியூன் வந்து (பிரின்சிபல் கிடையாது எங்க காலேஜூக்கு, அப்ப டைரக்டர் தான்).. டைரக்டர் கூப்பிடறாருன்னு சொன்னார்.. சரின்னு போனா பெரிய பெரிய தலையெல்லாம் சேர் போட்டு உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க.. காலேஜ் டிரஸ்ட் சேர்மன், இவனாங்கற மாதிரி ஒரு சுளிப்புப் பார்வை பார்க்க, ஆள் உருவத்தைப் பார்த்து ஏமாந்திராதீங்க.. பையன் பலே கில்லாடின்னு சொல்லிட்டு டைரக்டர் எங்கிட்ட, தாமரை, நாளை நெடுஞ்செழியனுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை மாதிரி பெருசா எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கனும்.. ஒரு கவிதை வேணும் எப்ப கிடைக்கும்னு கேட்க.. அரைமணி நேரத்தில் கொண்டு வர்ரேன் சார்னேன்..

நல்லா டைம் எடுத்துக்கோ, நாளை நீ மேடையில அதை வாசிச்சுக் குடுக்கணும் அப்படின்னார். ஹாஸ்டலுக்கு ஓடி என் நோட்டை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு ஓடினேன்...

முத்தமிழ் தந்த எம்தமிழ் நாட்டு
பத்தரை மாற்றுத் தங்கமே
சித்திரை நிலவே செந்தமிழ் நாட்டில்
முத்திரை பதித்த நித்திலமே

வரிகள் குதித்து விழுந்தன.. தமிழில் சிறப்பு ""ழ" ன்னு சொல்லுவாங்க.. நான் ""த"" ன்னு சொல்லுவேன்,

முத்தைத்தரும் பக்தித் திருநகை
அத்திக்கிரை சக்திச் சரவண
வித்துக்கொரு முத்துக் குருபர
எனவோதும்..

அருணகிரியார் நாவில் குதித்து விளையாடிய அந்த "த" தான் எதுகையில் சிறந்தது.. இரண்டு பாக்கள் எழுதிக் கொண்டுபோய் கொடுத்தேன் அரைமணி நேரத்தில்..

சத்தத்தில், இரத்தத்தில், யுத்தத்தில், மொத்தத்தில், தத்திக் குதித்து விளையாடும் தகரம் இல்லையா..

கவிதையை வாங்கிப் படித்த சேர்மன், நாவலருக்கு நடமாடும் பல்கலைகழகம் என்று ஒரு பட்டம் உண்டு.. அதை எப்படியாவது இதில் சேர்க்கண்ணுமே என்று சொல்ல, "ட" கர எதுகையில் மத்தியில் ஒரு பா எழுதி, அண்ணா, நடமாடும் பல்கலைக்கழகம் எல்லாம் ஒட்ட வைத்துக் கொடுத்தேன்..

எனக்கு இருப்புக் கொள்ளலை.. என்ன ஓசை..எனது கணீர் குரலுக்கு மேடையில் இந்த தகர டகர எதுகை எவ்வளவுக் கைதட்டல் கிடைக்கும்னு நினைச்சுப் பார்க்கும் பொழுது தூக்கம் வரலை.. பயங்கரச் சந்தோஷமா இருந்தது...

அடுத்த நாள் காலை 10 மணிக்கு டைரக்டர் கூப்பிட்டார். அவர் முகத்தில சங்கடம் குடியேறி இருந்தது,,

தொடரும்.
.

No comments:

Post a Comment