Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 16

மெசன்னஸ் 88

இவ்வளவு நாள் போட்டிகளில் கலந்துகிட்ட கொண்ட நாங்க, போட்டிகளை நடத்த ஆசைப்பட்டோம். மேனேஜ்மெண்ட் ஓ.கே சொல்லி ஒரு லட்ச ரூபாய் தர்ரதாச் சொல்ல விறுவிறுன்னு வேலை நடக்க ஆரம்பிச்சது..

சரவணன் தலைமையில் கூடி, கமிட்டிகள் அமைக்கப்பட்டது, எடிட்டோரியல், மற்றும் தமிழ் ஈவண்ட் ஆர்கனைசிங் நம்ம கையில. மக்கள் பம்பரமா சுழன்று திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைன்னு எல்லா இடத்திலும் ஸ்பான்ஸர்ஸ், டொனேஷன்னு கலெக்ட் பண்ணினாங்க.. வசூல் மட்டுமே மூணு லட்சத்தைத் தாண்ட பிரம்மாண்டமாய் பந்தல்கள் மேடைகள் போட்டோம். மூன்று நாட்கள் விழா.. முதல் நாள் மாலை ஆரம்பம்.. வெல்கம் ஈவண்ட்ஸ், எங்கள் கல்லூரி மாணவர்களோட கலை நிகழ்ச்சிகள், இரவு உணவு.. அடுத்த நாள் கலையில் இருந்து மூணாம் நாள் மதியம் வரைப் போட்டிகள்.. மூணாம் நாள் மாலை பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா..

பம்பரமா சுத்தி வாங்கி வந்த விளம்பரங்களையும், கல்லூரி மக்களோட படைப்புகளையும் வச்சு மெஸன்னஸ் 88 இதழ் லே-அவுட் போடப்பட்டது. அப்ப புதுக்கோட்டையில கம்ப்யூட்டர் எடிட்டிங் பிரிண்டிங் இருந்ததால ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து பார்த்து செதுக்கினோம்.. மேகசின்ல பேர் வரணும்னு ஆசைப்பட்டவங்களுக்கு ஒரு துணுக்கோ, ஹைக்கூவோ சின்னதா நாங்களே எழுதி பேர் போட்டோம்..

நிகழ்ச்சி அட்டவணைத் தயாரித்தோம். கவிதை, ஒரு நிமிடம் தமிழில், பிளேடு (ஹாஹாஹா நாந்தானே நடுவர்) பாட்டுக்குப் பாட்டு, அபவ்ட் டர்ன் இப்படி நச்சுன்னு நாலே நாலு நிகழ்ச்சி மட்டும் என்னுடைய அரேஞ்மெண்ட்..

கவிதைப் போட்டி வெறும் எழுத்துங்கறதால அமைதியாப் போயிடுச்சி.. முதல் பரிசு பச்சையப்பாஸ்ல எம்.ஏ தமிழ் லிட்டரேச்சர் படிக்கிற மாணவர்..

ஒரு நிமிடம் தமிழிலும் அவரே கலக்கினார்.. 4 ரவுண்ட் கழிச்சு பார்த்தப்ப அவர் மட்டுமே இருக்க அதிலும் முதல் பரிசு,,

பாட்டுக்குப் பாட்டு போட்டி.. படுசூடாப் போயிட்டு இருக்க அவருக்கு கிடைத்த எழுத்து ஞா...

என்ன செய்யறது ஞானப் பழத்தை பிழிந்து ரசம்... என ஆரம்பிச்சிட்டு தடுமாற தகுதி நீக்கம் ஆனார். அன்னிக்குத்தான் நான் மேடையில் முதன் முதலா பாடினேன், கூட்டத்தின் சவாலை ஏற்று (40 நாள் தொடர்ந்து திருவிளையாடல் செகண்ட் ஷோ பார்த்தவனாச்சே). சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுக்கு பாட்டில் கூட இதைப் பாடி இருக்கேன்,.

எபவ்ட் டர்ன் ஒரு காமெடியாப் போச்சு.. நிறையபேர் சொதப்பிட்டாங்க.. உருப்படிய பண்ணின மூணு பேர்தான். அழகப்பா கல்லூரி முதலிடம், அண்ணாமலை இரண்டு பச்சையப்பாஸ் மூணாவது இடம்.

என்னுடைய தலைமையில் நடந்த கடைசி போட்டி பிளேடுப் போட்டு.. கன்னா பின்னான்னு கடி.. வந்தவனுங்க எல்லாம் அறுக்கறதுன்னு முடிவு பண்ணி வந்தவனுங்க. உரலில தலையை விட்டுட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமா?

அந்த பச்சையப்பாஸ் மாணவர் பேச எழுந்தார்..

நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இருந்தா இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கலாம். அதுவே நான் நானா இல்லாம நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்க முடியாது. அதே சமயம் நான் நானா இருந்து நீ நீயா இல்லாம அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கமுடியாது.. அதே மாதிரி நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இல்லாம இது இதுவா இல்லாட்டி நாம நாமளா இருக்க முடியாது.. அப்படித்தாங்க நான் நானாக...

அவர் அறுத்துத் தள்ள மக்கள் கூட்டம் தாங்க முடியாமல் அலறியது..

எனக்குள் ஒரு சாத்தான் டக்கென்று விழித்தான்..

தொடரும்
.

No comments:

Post a Comment