Thursday, December 17, 2009

நிழலுக்கு உயிர் கொடுத்தேன் - 1





கவிதை - 1
-------------

முத்தமுரசிச் சொல்வேன்
காதோர ரகசியம்
உனக்கொன்று கண்ணே!

உன் முனகல் கூட
அம்மா என ஒலிக்கக் கேட்டு
மரத்த மனது
துளிர்க்குதடி!

பூவின் மென்மை
தண்டின் உறுதி
இலையின் கருணை
வேரின் ஆற்றல்

(தொப்புள்)கொடியில் பூத்த மலர்
உன்னுள்ளும் இருக்கட்டும்

உன் பூவிதழ் கோதலில்
பூத்துச் சுரந்து
மேகங்களுக்கு மேல் எனைப்
பறக்க வைப்பவளே

கண்ணுறங்கு மகளே
காலங்கள் காத்திருக்கும்
உனக்காக.


கவிதை - 2

அரசுத் தொட்டில் கூடப்
பரவாயில்லை
குப்பைத் தொட்டி வேண்டாம்
வேண்டுமானால்
பாலோடு பாலாய்
கள்ளியும் சேர்த்து
அதற்கு முன்
ஒன்ஸ் மோர் ப்ளீஸ்!

.

No comments:

Post a Comment