Friday, December 11, 2009

கிளிப்பேச்சு கேட்க வா!!

ஒரு பச்சைக் கிளி ஜோஸியக் காரனிடம் இருந்து விடுதலையை எதிர்பார்க்குது, விடா கண்டன் கொடாகண்டன் போல கிளிக்கும் ஜோஸியக்காரனுக்கும், வேடிக்கை பார்க்கிற மக்களுக்கும் நடக்கும் "ருசி" கரமான உரையாடல்...


மீரா:
உன் எதிர்காலம்
சொல்லும் எனக்கு
எப்போது விடுதலை?
கிளி ஜோசியம்



தாமரை :
கொஞ்ச நாள் பொறு..
காசே கிடைக்காமல்
வயிற்றுப் பசி
தாங்க முடியாவிட்டால்
தந்து விடுகிறேன்
ஒரேடியாக

மீரா:
அடடா!நான் உங்ககிட்ட ஒரேடியா விடுதலை கேக்கல சாமி.கூண்டுல இருந்து விடுதல கேட்டேன்.

இப்படி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் விடுதலையே கேட்டிருக்கமாட்டேன்

தாமரை :

பிறர் பசி தீர்த்தல்
பெரிய புண்ணியம்..
புண்ணியத்தை
பிறருக்குத் தருதல்
மாபெரும் புண்ணியம்
உனக்குப் புண்ணியம்..
எனக்கு
மாபெரும் புண்ணியம்
சரியா கிளியே!! 

மீரா:

தனக்கு பின் தானம்.நானே பசியோடு இருக்கும் போது உன் பசியை தீர்க்க என்னால் முடியாது.
ஒரு உயிரை கொன்று புசிப்பது பாவம்.
அதிலும் நானோ மிகச் சிறிய பறவை.என்னை கொன்று ஏன் பாவத்தை சம்பாதிக்க நினைக்கிறாய்.

தாமரை :

தனக்கு மிஞ்சியதே தானம்..
உனக்கு மிஞ்சி யிருப்பது இப்போது 100 கிராம் கறி..
அதைதான் தானம் செய் என்றேன்
நான் உன்னைக் கொல்ல நினைக்கவில்லை
நெல்மணி வாங்க காசில்லை..
செத்துதானே போகப்போகிறாய்..
செத்தும் கொடுத்தாள்
பச்சைக்கிளி என
உன் பெயர் நிலவட்டும்.

மீரா:

அடடா என்னே ஓர் உயர்ந்த எண்ணம்.தலைவா, நான் ஒன்றும் கர்ணன் பரம்பரையில் வரவில்லை.உனக்கு நெல்மணி வாங்கவே காசில்லையே அப்புறம் ஏன் என்னை வைத்து கஷ்டபடுகிறாய்.என்ன விடுதல செய் என் உணவை நான் தேடிக்கொள்வேன். நா ஒன்னும் உன்ன மதிரி சோம்பேறி இல்ல


தாமரை :

பாவமாய்த்தான் இருக்கிறது..
ஒத்துக் கொள்கிறேன்..
நீ கேட்டது கிடைக்கும்..
விடுதலை யென்றாய்..
விட்டு விடுகிறேன்.
தலையை மட்டும்.

ராகவன் :

நெல்லுக்கு வந்ததா கிளி
ஊர்க்கான
சொல்லுக்கு வந்ததா கிளி
சோதிடனோடு
மல்லுக்கு வந்ததா கிளி
இல்லை குழம்பில்
கொதித்து வெந்ததா கிளி

தாமரை :

வெந்திருச்சு வாங்க சாப்பிடலாம்..
சோதிடம் பார்ப்பவனிடம்
திடம் இல்லை
"சோ:" திடம் பார்க்கிறான்



மீரா :

எப்போ டா கொஞ்ச நேரம் பேசாம இருக்கும் குழம்பு வச்சு சாப்பிடலாம்னு காத்துட்டு இருக்குப்பா ஒரு கூட்டம்.தலைவா உங்களுக்கே அந்த கிளி பத்தாது நீங்க மன்றத்துல இருக்க எல்லாரையும் கூப்பிடறீங்களா?ஓசில கெடச்சா உடனே குழம்பு பண்ணலாமா,குருமா பண்ணலாமானு பட்டிமண்றம் நடத்தீடுவீங்களே


பென்ஸ் :

எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????


இளசு :

மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
இம்மொழி விருந்துக்கு முன்னால்.

தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்.


மீரா :

வாங்கய்யா வாங்கா அந்த ஒத்த கிளிக்கு எத்தன பேரு பங்குக்கு வரது ம்ம்ம்ம்........முடியல முடியல இப்பவே மூச்சுவாங்குதே ஷ் ஷ் ஷ்.......


தாமரை :

அதான் அதான் சொன்னேன் மூச்சை வாங்கவும் வேண்டாம் விக்கவும் வேண்டாம்,,, நிறுத்திடுவோம்.. எல்லாத்தையும் நிறுத்திடுவோம்.. (அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் டயலாக் ரிசர்வ் செய்யப்படுகிறது.. வேறு டயலாக் உபயோகிக்கவும்..)

இளசு:: புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு கிளி உயர்ந்தது... கண்ணில் தெரியும் பலாக்காயை விட கையில் உள்ள களாக்காயே மேல்.
பென்ஸ் :

நீங்க ஏன் நிறுத்தனும்...
ஏன்...

குப்பை லாரின்ன்ற பெயரில வழி நெடுக்க குப்பை போடுறான அவன் நிறுத்துறான
வழி நெடுக்க போலிஸ் நின்று கெட்லைட்ல பொட்டு வைக்கலன்னு காசு வாங்குறனே அவன் நிறுத்துறானா...
சினிமா நடிகைங்க ரிபன் கட்டி நடிக்கிரதை நிருத்துறாங்களா...

அது எல்லாம் ஏன்...

பிரதிப்பு சாப்பிடுரத நிருத்துறானா..
இல்லை ராகவன் சாப்பாடை பற்றி எழுதுறது நிறுத்துறானா...
சரவணன் கடலை போடுறது நிறுத்துறானா....

இவங்க எல்லாம் நிறுத்தலையே
அப்புறம் நீர் மட்டும் எதுக்கு நிறுத்தனும்....
நீரு தொடருமையா...
உம்ம வேலையை நீரு தொடருமையா.... 
மீரா :

பென்ஸ்,கரீட்டுப்பா க்கும். அண்ணா மூச்ச நிறுத்தறதுல என்னா ஒரு சந்தோஷம்.அவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியாதுங்கண்ணாவ்......

 தாமரை :

பென்ஸ், நான் நிறுத்தறுதை நிறுத்தக்கூடாதுன்னு சொன்னீங்களே சூப்பர்.. பென்ஸூ என்னைத் தொடரச் சொல்ல அதைப் புரியாம அவருக்கு கரீட்டு சொல்லிட்டு நிறுத்தமுடியாதுன்னு அடம் பிடிக்கக் கூடாது..

ஒண்ணு மூச்சை நிறுத்தணும் இல்லைன்னா பென்ஸூக்கு கரீட்டு சொன்னதை வாபஸ் வாங்கணும். எதைச் செய்யறதா உத்தேசம்?

 பென்ஸ் :

என்ன இதோட நிப்பாட்டி விட்டீர்கள்....
மீரா இந்தா அருவா...
செல்வன் இந்தாரும் பிளேடு (அது ஏற்க்கனவே இருக்கா???)
வெட்டு...
குத்து...
ரத்த ஆறு ஓடனும்....

இப்போ தேவர்மகன் கமல் ஸ்டைலில் எல்லாம் இப்படி டயலாக் பேசபிடாது
" அட போங்கட.. போயி உங்க பிள்ளை குட்டியளை படிக்க வையுங்க, ரத்தம், உயிரு எடுத்தது எல்லாம் போதும்... போங்கடா

தாமரை :

மீராகிட்ட அரிவாளா
மீரா அறிவாளா
மீறாட்டா அரிவாள் எதுக்கு
மீறிட்டா அறிவால அடக்கு..

இப்பவே ரத்த ஆறு ஓடுதே
 ஓவியா :

இந்த கவிதையை படித்துட்டு
மீரா சொந்தமா அரிவாள் எடுத்து வெட்டிக்க போறாங்க...
மீரா :

நீங்க சொன்ன மாதிரி அந்த கவிதை படிச்சுட்டு ஒரு நிமிஷம் யோசிச்சேன் வெட்டிக்கலாமானு.

தற்கொலை கோழைத்தனம் இல்லயா அதான் யோசிக்கறேன்

 தாமரை :

தற்கொலை கோழைத்தனம் தான்
உயிர் தியாகம் வீரமல்லவா??
 மீரா :

அண்ணா, பென்ஸுக்கு கரீட்டு சொன்னத வேணா வாபஸ் வாங்குவேன், மூச்ச நிறுத்த சம்மதம் இல்லீங்கோ :


தாமரை

நிறுத்த வேணாம்.. விடாதீங்கோ....

நான் பச்சைக் கிளிகளை
சாப்பிடுவதில்லை
சமைத்துதான்...
மீரா :

சமைத்து சப்பிடுவது உங்கள் சாமர்த்தியம்
தங்களிடம் மாட்டாமல் இருப்பது என் சாமர்த்தியம்.
சமைக்கலாம்,சப்பிடலாம் என்ற கனவை கலைத்துவிடுங்கள் அண்ணா

தாமரை :

கவலைப் படாதே கிளியே!
உன் பெயர் (சமையல் குறிப்பு புத்தகத்தில்
பொன்னெழுத்தில் பொறிக்கப்பட போகிறது..

நீயும்தான்
பொன்னிறத்தில்...
பொரிக்கப்படப் போகிறாய்

பிடிப்பது என் சாமர்த்தியம்..
நான் பிடிக்காமல் நீ எப்படி கூட்டில்..
தப்பிபது உன் சாமர்த்தியம்..
கமுக்கமாய் செய்திருக்கலாம்..

சமைக்கலாம் என்பது கனவல்ல
அது இலட்சியம்.



மீரா :


அண்ணா,தங்களின் இலட்சியமே இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலட்சியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரிசு என்ன தரலாம்(பரிசு தொகையா கிளியை மட்டும் கேக்க படாது சரியா).

தாமரை :

கிளியை மட்டும் கேட்கலை.. கூடவே பொரிக்க எண்ணெயும், மணக்க மணக்க அரைத்த மசாலாவும், ஒரு வாணலியும் குடுங்க,,,
(மட்டும் என்பதை இப்படியும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமே!!)
 மீரா :

அண்ணா,தங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது தான் ஒத்துக்கறேன்.
(ஆனா என்ன நடந்தாலும் கிளி தற்கொலையும் செய்யாது,உயிர் தியாகமும் செய்யாது க்கும்ம்ம்.) 


ராகவன் :

தற்கொலையும் செய்யாது...தியாகமும் செய்யாதுன்னா....பேசாம நம்மளே எடுத்துக்கிற வேண்டியதுதான். கபால மோட்சம் குடுத்துட்டா சரியாப் போகும்.
மீரா :
அட கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா


ஓவியா :

கிளி ஜொஷியமும் ஒருவகை மோட்டிவேஷேன் தான்...

இன்று உங்களுக்கு அந்த
திருமலையானே தரிசன்ம் தரான்
எடுத்த காரியம் கைகூடும்..........
கடவுள் உங்க பக்கம்.......
தைரியமா ஆரம்பிங்க............

இப்படியெல்லாம் சொன்னா
எந்த நாளும் நல்ல நாளே நம் நாளே.....
மனதில் ஒரு தெம்பு வரும்....

ஆமாம் தானே.. இல்லையா....
தாமரை :

ஆமாமுங்கோ.. நாம தனியா சொன்னா ஏத்தி விட்டு வேடிக்கை பாக்கறாங்கன்னு சொல்லுவாங்கோ.. ஒரு கிளியை (?!) பக்கத்தில வச்சுகிட்டு சொன்னா நம்புவாங்கோ..

கண்மணி :

யார் யாருக்கோ சீட்டெடுத்த கிளியே!
பேசும் முன்
உன் பெயருக்கு ஒரு சீட்டு எடுத்துப் பார்த்திருக்கக் கூடாதா?
ஒரு வேளை எருமை மேல் எமதர்மன் வந்து
எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா?
தாமரை :

அந்தச் சீட்டு கட்டில் இருக்காது..
அது வந்தால்
அது சோதிடனுக்கே சோதனையாகவும் போகலாம்..

யாருக்காவது போய்
உங்க உயிர் இப்பவோ அப்பவோன்னு ஊசலாடிகிட்டு இருக்குன்னு சொன்னா
கேட்டவன் அறிவால யோசிக்காம, யோசிக்காம அரிவாளை எடுத்தா??

எதுக்கு வம்புன்னு எந்த சோதிடனும் அந்த சீட்டை வைத்துக் கொள்வதில்லை.
 ஆதவா :

பாவம் அந்த கிளி யார் பெத்த கிள்ளையோ!! சீ. பிள்ளையோ!! சீ... என்ன சொல்றது? ரெம்ப கொடுமை படுத்திரீங்க அந்த் கிளிய... புளு கிராஸ்ல போட்டு கொடுத்துருவேன் ஆமா...
தாமரை :

பச்சைக் கிளி, சிவப்பு மூக்கு, வெள்ளை மனசு, புளூ கிராஸ்.. கலர்ஃபுல்லா இருக்கு...

ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.. இந்த பாக்டீரியா வைரஸ், கொசு போன்ற சிறு சிறு உயிரினங்களை வேரோட அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை நிறுத்தச் சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்

ஆதவா :

நாயகன் பட டயலாக் மாதிரி இருக்கே!! இருந்தாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்... !!
தாமரை :

எது ஓவர்? பத்து கிலோ ஆட்டை அடிச்சு குளம்பு முதல் கொம்பு வரை குழம்பாக்கி சாப்பிடறீங்களே அது ஓவரா இல்லை ஒரு 100 கிராம் கிளி இது ஓவரா?
ஆதவா :

100 கிராம் கிளி!!! உங்களுக்கே தோணலியா? யாருக்குத்தான் பத்தும்?

நம்ம மன்றத்தில ஏற்கனவே பங்கு கேட்டுட்டாங்க!! (நானும் இந்த லிஸ்ட்ல இருக்கேன்)

நான் அதுக்கு "ரெம்ப ஓவர்"னு சொல்லல...

வைரஸ் பாக்டீரியாவைக் கொல்ர டாக்டரை கொல்லனும்னு சொல்றீங்களே அதுதான் ஓவர்,,, வேணும்னா மனுஷன கொல்ர டாக்டரை..... வேண்டாம் வேண்டாம். அப்றம் நம்மள காப்பாத்த யாரும் இருக்கமாட்டாங்க!!
தாமரை :

புளூ கிராஸின் நோக்கம் என்ன? கொள்கை என்ன? அதைக் கொஞ்சம் ஆழமா ஆராய்ந்தால் உங்களுக்கு நான் சொன்னது தப்பு இல்லைன்னு புரியும்..

புறாவின் பச்சை இரத்தத்தை (அட ஆமாங்க நிஜமா) ஜிஞ்சர் சோடாவில் கலந்து குடித்து வளர்ந்த பரம்பரையாக்கும்.. எங்க பரம்பரை..

ஆதவா :

யப்பா சாமி, ஆள விடுங்க,,, மொதல்ல அந்த கிளிய காப்பாத்தனும்யா... எஸ்கேப்..

No comments:

Post a Comment