Friday, December 11, 2009

நானும் தமிழும் - பாகம் 5

ஏணிப்படிகள்!

8 ஆம் வகுப்பில் தான் நிறைய பொறுப்புகள் இருந்தன. மாணவர் மன்றம் மாதந்தோறும் கூட்டம். வாரந்தோறும் பரேடுன்னு அடுக்கடுக்கா வேலை. ஆனால் சந்தோஷமான வேலை.. மக்களுக்கு பேச்சுப் போட்டிக்கு புதுப்புது தலைப்பு கொடுப்பது சவாலான வேலை..அப்புறம் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா, குழந்தைகள் தின விழாவிற்கு மாணவர்களை காந்தி ஸ்டேடியம் அழைத்துப் போய் ஒரு பரேடு..

மைக்கில் பேசும் வாய்ப்பு நிறைய வந்தது,, வாத்தியாருங்க மத்தியில கம்பீரமா உட்காந்து நாட்டாமை தீர்ப்பு சொல்லுங்க அப்படின்னு கேட்டு பரிசுகளைச் சொல்லி நன்றி சொல்லி ஆஹா ஒரு பொதுக்கூட்டம் நடத்த தேவையான எக்ஸ்பீரியன்ஸ் அப்பவே கிடைச்சது..

ஒன்பதாம் வகுப்பில தமிழ் இலக்கணம்,. கத்துக் கொடுத்தவர் வெ.சு.பழனிச்சாமி. இவர் கதைப்பிரியர், நெப்போலியன் அரிஸ்டாட்டில் னு ஈரோப்பியக் கதையும் சொல்வார் அதே சமயம் ஆட்டனத்தி, ஆதிமந்தி, ஆதிரை ன்னு சங்க இலக்கியமும் சொல்வார்

10ம் வகுப்பில் பிள்ளார் செட்டி ஆசியரானார்.. இவர் எழுதி பிரசுரமான சில புத்தகங்களைப் பார்த்த பிறகே நாமும் கவிதை எழுதினால் என்னன்னு தோணுச்சி. வெண்பா. ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுத ஆரம்பித்தேன்.. சில சமயம் இவர் கவிதையைத் திருத்தியும் தந்திருக்கிறார்.

இனி கல்லூரிக்குப் போவோமா!

காலேஜ்ல, என்னோட மரபுக் கவிதைகள் மதிக்கப்படவில்லை. புரியலை என்று ஒரு கூட்டம், பீடா மாதிரி வார்த்தைகளை மடித்துப் போட்டு வந்து கொண்டிருந்த புதுக் கவிதைகள் மக்கள் மனசை ஆக்ரமித்திருந்தன. வார்த்தைகள் வசப்பட்ட பிறகு வடிவா கஷ்டம்.

நான் முதன்முதல் எழுதிய அந்தப் புதுக்கவிதை கல்லூரியில் ஒரு புயலையேக் கிளப்பி விட்டது. அந்தக் கவிதை அப்போதைய வயசுக் கோளாறு.. அதனால் சொல்ல விரும்பவில்லை. இப்படியும் யோசிப்பாய்ங்களோ, ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ என மக்கள் கலங்கி விட்டனர்..


சடாரென என்னைச் சுற்றி இருந்த அப்பாவி நண்பர்களை ஓரங்கட்டி புது நண்பர்கள் முளைத்தனர்.. தினம் தினம் கவிதை மழை ஆரம்பித்தது. என்னுடைய நோட்டுப்புத்தகங்கள் இல்லாத காதலிக்காக எழுதிய கவிதைகளால் நிறைந்தன. நடு வரிசையில் அமர்ந்திருந்த நான் கடைசி பெஞ்சுக்கு ஷிப்ட் ஆனேன்,

எனக்குன்னு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க.. எனக்கு துக்காராம் என்ற பட்டப் பெயர் வந்தது .. (அதுக்கு காரணம் புதையல், சிவாஜி கணேசன் படத்தில் வரும் சந்திர பாபுவைப் போல இருந்தேனாம்)

கணக்கு பீரியட், எனக்கு வசதியாய் இருந்தது கவிதை எழுத, ஏன்னா வாத்தியார் சொல்லிக்கொடுக்கறது ஆரம்பத்திலயே புரிஞ்சுடும்.. நிறைய நேரம் கிடைக்கும் எழுத,,

அதே சமயம், இங்க்லீஷ் பீரியட்ல எழுத ரொம்ப விஷயம் கிடைக்கும்.

அப்போதெல்லாம் நான் பேசினாவே அதிரும்.. ஓங்கி ஒலிக்கும் என் குரலால் இரண்டாவது மாடியில இருக்கறங்க கூட தூங்க முடியாம கஷ்டப்படுவாங்க.. ஒல்லிக்குச்சி உடம்பு (46 கிலோ), இடிச்சிரிப்பு, கணீர்குரல் இதெல்லாம் தான் என் அடையாளங்கள்..

ஹாஸ்டல் வார்டன்களுக்கு நான்னா தலைவலி.. ஆனால் ரெண்டு பேரும் எங்க கிட்ட மாட்டிகிட்டாங்க ..

வேற என்ன காதல்தான்...

தொடரும்

.

No comments:

Post a Comment