Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 20

அதிரடி மறுபிரவேசம்!!

நியூஸ் குரூப்னா அப்ப தமிழ் ஃபாண்டெல்லாம் இல்லை. அதனால இங்கிலீஸ் லெட்டர்ஸ், தமிழ் வார்த்தைகள்ள். அங்க விவாதங்கள் எல்லாம் படு பயங்கர ஆவேசமா இருந்தது.

திருவள்ளுவர் ஒரு சமணர் அப்படின்னு ஒரு விவாதம். திருமந்திரத்தையும் திருக்குறளையும் ஒப்பிட்டு சைவம் உண்டு என வாதாடினேன்.

சமணமும் இந்தியாவில் பிறந்துதானே.. பண்பாட்டு ஒப்புமை இருக்கத்தானே செய்யும். திருவள்ளுவர் அது பொதுநூலாய் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் வெளிப்படையாக எந்த மதத்தையும் காட்டாமல் எழுதினார்.

மழித்தல் சமணம், நீட்டல் சைவம் எனவே மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொல்வதின் மூலம் அவர் ஒரு பொது மனிதனாகத்தான் தன்னை அடையாளம் காட்டுகிறார்.

இப்படி எத்தனையோ வாதங்கள். ஒவ்வொரு வாதத்திற்கும் இது சமணத்தில் உண்டு என்று சொல்பவர்கள் இது சைவத்தில் இல்லை என நிரூபிக்க வேண்டும் என வாதாடினேன். மெல்ல மெல்ல பதில்கள் குறைந்தன

அடுத்த சூடான விவாதம் வேதத்தில் எல்லாம் உண்டு என்பது. வேதத்தில் அது உண்டு இது உண்டு என ஒருவர் ஒரு பதிவு போட்டிருக்க அவரைக் கேட்ட கேள்வி..

அய்யா பல்லாயிரம் வருடங்களாக வேதம் கற்று வருகிறோம். நீங்கள் சொல்லும் அத்தனை நுட்பங்களும் தற்போது வெளிநாட்டுக்காரர்களின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

இப்பொழுது இதைச் சொன்னால் மக்கள் ஒத்துக் கொண்டாலூம் சரி மறுத்தாலும் சரி, பயனொன்றுமில்லை. போனது போகட்டும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இன்னும் வேதத்தில் பல நுணுக்கமான தொழில் நுட்பங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றையாவது கண்டுபிடித்து வெளியிடுங்கள். அது நம் வேதத்தின் பெருமையை நிலை நாட்டும் என ஒரு போடு பொட அவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடினார்.

அடுத்து பாமியான் புத்தர் சிலை இடிப்பு.. ஒருவர் உருவ வழிபாடு எங்கள் மதத்திற்கு ஒவ்வாததது. வழிபாட்டு உருவங்கள் எங்கிருந்தாலும் உடைப்போம் என்ற்று கொக்கரித்தார்..

ஐயா சற்று தலை உயர்த்திப் பாருங்கள் அதோ வானில் தெரிகிறதே சூரியன் அதை நாங்கள் வனங்குகிறோம்.. முடிந்தால் அழித்து விடுங்கள்.

சற்றுக் குனிந்து பாருங்கள், உங்கள் காலடியில் தெரிகிறதே பூமி, அதையும் நாங்கள் வணங்குகிறோம் உடைத்து விடுங்கள்.

சரி கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்து சுவாசியுங்கள். அடடா அந்தக் காற்றைக் கூட நாங்கள் வணங்குகிறோம்.. மூச்சு விடாதீர்கள். மூக்கிலும் வாயிலும் வெடி வைத்துக் கொள்ளுங்கள் என ஏக கிண்டலாக ஒரு பதிவிட்டேன்..

அடுத்த விவாதம் இராமன் மற்றும் கிருஷ்ணரின் காலங்களை கிரக நிலைகளைக் கொண்டு கணித்து வெளியிட்ட ஒரு பதிவு..

அதில் இருந்த பளீரிடும் முரண்பாடுகளை, ஜோதிட நுணுக்கங்களைக் கொண்டு வாதிட்டேன்.. ஆமாம் ஜோதிடம் எப்போது படித்தேனா?

அது கல்லுரியில் இரண்டாம் ஆண்டு படித்த காலம். அப்பா ஜோதிட ஆசான் என்று 4 தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டிருந்தார். லீவு நாட்களில் படித்தேன்.

இதெல்லாம் எல்.எஸ்.ஐ யில் இருந்த ஆறு மாதக்காலம்தான், அப்போது ஜியோசிடிஸ் தளத்தில் முரசு அஞ்சல் மூலம் ஒரு தளம் தொடங்கினேன். இன்னும் அது இருக்கிறது. http://www.geocities.com/stselvan/ முரசு அஞ்சல் ஃபாண்ட் இருந்தால் படிக்கலாம். எனது பழைய கவிதைகளையும் இன்னும் சில எண்ணங்களையும் இதில் பதித்தேன்.

அடுத்து நான் வைத்த அடி - நெட் ஃபிரண்ட்ஸ். இணைய நண்பர்கள்,

தொடரும்.

.

No comments:

Post a Comment