Thursday, December 24, 2009

வினாடிக் கவிதைகள் - 2





பிரம்மச்சாரிகள்  ஒற்றுமையாய்..
ஒருவருக்கொருவர் உயிர் கொடுத்து
காதல் வளர்த்து
கல்யாணம் செய்து
பிரிந்தார்கள் 


-------------------------------------------------------------------------- --


என்னவோ ஏதோ 
எனக் கலங்காதே
நான் கடைபிடிப்பது
ப்ரம்மச்சாரியம்
நீ
ப்ரம்மத்தின் ஆச்சர்யம்


------------------------------------------------------------------------------------


படிகள்
ஏறி இறங்கிய கால்களில்
மிதிபட்டு ..


காலால் இடறியவன்
படிகட்டைப் பார்த்துச் சொன்னான்
சனியன் 


----------------------------------------------------------------------------------- 

தலைச் சுற்றல்
வாந்தி மயக்கம்
மசக்கை அல்ல
வீட்டில் இருந்து
அலுவலகம் செல்வதற்குள்
காற்றில் மாசு 


---------------------------------------------------------------------------

திருமணம்
நல்ல பல்கலைக் கழகம்
இங்கிருந்து தான்
எத்தனை சாதனையாளர்கள்
தத்துவ வாதிகளாய்
கவிஞர்களாய்
வியாபாரிகளாய்
அரசியல்வாதிகளாய்
திருமணம்
நல்ல பல்கலைக் கழகம்


----------------------------------------------------------------------------------

வாழவைக்கிறது
உன் தூரத்துப் பார்வையும்
என் கிட்டத்துப் பார்வையும்
கண்ணாடிக் கடையை  


---------------------------------------------------------------------------------------



மனிதம் சுயம்
மௌனம் நலம்
கொட்டிய வார்த்தைகளில் உரசி
மனம் காயம்.


-----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment