Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 7

ஆப்புக்கு ஆப்பு!

ஆப்பு செய்த பாவம் என்ன? என்னை டேய் மறந்திடாத, வீட்டுக்குப் போய் லட்டர் போடு.. போட்லன்ன திரும்ப வந்தா இருக்குடீ என மிரட்டலாய்ச் சொன்னதுதான்,...

வீட்டிற்கு வந்தவுடன் ஒரு லாங் சைஸ் 80 பக்க நோட்டு வாங்கினேன். கடகடவென ஜூன் 1 ஆம் தேதி ஹாஸ்டல்ல இருந்து புறப்பட்டதிலிருந்து, வீடு வந்து சேர்ந்தது வரை நான் மாறி வந்த பஸ்களின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரிலிருந்து, மாட்டு மேல் உட்கார்ந்திருந்த காக்காய் வரை எல்லாத்தையும் எழுதி புக் போஸ்ட் செய்தேன்.. இரண்டு வாரத்தில் மன்னிப்புக் கடிதம் வந்துடுச்சி,,


தட்சன் (ஈரோடு) கடாச் (ஈரோடு) பெரியசாமி (எலச்சிப்பாளையம்) என எனது ஆரம்ப நண்பர்களுக்கும் கடிதம் எழுதினேன்.. கல்லூரி திறந்தது..

மூன்றாம் செமஸ்டர் ஆரம்பித்த பொழுது ஒரு வாரம் கழித்துதான் காலேஜ் போனேன். காலேஜ் இப்போது களமாவூர் (கீரனூர்) போய்விட்டிருந்தது.. மெக்கானிகல் ஷெட் தான் ஹாஸ்டல்.. ஐந்தே ஐந்து கிளாஸ் ரூம்.. ஆமாம் அந்த பாழடைந்த மண்டபமும் கூடத்தான். அதைத்தான் தனியா எழுதியாச்சுல்ல.. அழிச்சிருங்க..

வந்த உடனே முதல் ஷாக் என்னன்னா, நான் மூகாம்பிகை முத்தமிழ் மன்றத்திற்குச் செயலாளராம்.. புளுகர் பொன்னிவளவன் தலைவராம், பழனியப்பன் இன்னொரு செயலாளராம்.. எப்ப நடந்திச்சு என்ன நடந்திச்சுன்னு தெரியாது.,.. ஆனால் என் பெயர் இல்லாம மன்றம் அமையாதுங்கற அவங்க நம்பிக்கை பளிச்சுன்னு தெரிஞ்சது.

ஹாஸ்டல் ஒரே ஷெட் தானே.. நாங்கள் நீச்சல் கத்துக்க ஆரம்ப்பிச்சோம்..

அதே சமயம் ஹாஸ்டலில் அந்தப் போட்டி ஆரம்பமானது.. ஒரு வாரம் தொடர்ந்து நடந்த அந்தப் போட்டி...


தொடரும்

.

No comments:

Post a Comment