Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 15

அடுத்த வெற்றி- சண்முகா இஞ்ஜினியரிங் காலேஜ். இதில் தமிழின் பங்களிப்பு அதிகம் இல்லையென்றாலும், மன்றத்தின் பங்களிப்பு இருந்தது. இங்கும் சுழல் கோப்பை எங்கள் கையில்..

இது முடிந்ததும் அக்கல்ஃபெஸ்ட். காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரி.. இங்கும் கடும் போட்டி. காட்டாற்ற்று வெள்ளமாய் இல்லாமல் கரை கட்டிய காவிரியாய் எங்கள் கலைக் குழு பயணித்தது.. இங்கு இரு போட்டிகளில் நான் கலந்து கொண்டேன். 1. அபவ்ட் டர்ன்.. அதாவது ஒரு தலைப்பு கொடுத்து விடுவார்கள். அதைச் சார்ந்து 5 நிமிடம் பேச வேண்டும். அதன் பிறகு மணி ஒலித்தவுடன் அதே கருத்துகளை எதிர்த்துப் பேச (ஏச) வேண்டும்.

எனக்குக் கிடைத்த தலைப்போ ""வகுப்பறையில் தூங்கக் கூடாது". செண்டிமெண்டலாக பேச ஆரம்பித்த நான் மணியடித்த பின் நான் கூறிய அத்தனைக் கருத்துக்களையும் உடைத்த போது, அதுவும் சுயநிதிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களின் தரத்தை உரசிப் பார்த்தபொழுது எழுந்த கரகோஷமே என் வெற்றியை உறுதி செய்து விட்டது (ஆமாம் ஆதவா, அப்பவே அண்ணன் அப்படித்தான், மாற்றுபொருள் எடுப்பதில் மன்னன். ஒரே வசனம். இருவேறு அர்த்தங்கள்.. அசத்திபுட்டமில்ல)..

இரண்டாவது போட்டி தெதே தெத் அதாவது நேர்முகப் போட்டி.. இவர்கள் சந்தித்தால் போன்ற ஒரு போட்டி.. நானும் சரவணனும் கலந்து கொண்டோம். எங்களைச் சோதிக்கவே வந்த மாதிரி கிடைத்த தலைப்பு, வ.உ.சி. யும், ம.பொ.சி யும்.. மற்றவர்களுக்கோ ரவிசாஸ்திரியும் பிள்ளையார் கொவில் சாஸ்திரியும், டி.ஆரும், டி ஆர் மகாலிங்கமும் இப்படி சத்துள்ளதாக நகைச்சுவை வாய்ப்புள்ளதாக இருக்க, விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ண்டு நகைச்சுவையாய் பேச எங்களுக்கு மனமின்றிப் போனது.

ம.பொ.சி நிரந்தர மேலவை உறுப்பினர், சிலப்பதிகாரம் கரைத்துக் குடித்தவர் என்பதுவும், ஊழல்களை எதிர்க்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்தவர் என்பதையுமே கொண்டு வ.உ.சி ம.பொ.சி க்கு அறிவுரைச் சொல்வதைப் போல அமைந்த அந்த உரையாடல் கைதட்டல் பெற்றாலும் மூன்றாம் பரிசையே பெற்றது. இருந்தாலும் அதுவே எங்களுக்கு மதுரை வக்ஃப் போர்டு காலேஜ் தான் இந்த முறைப் போட்டி..

இறுதிப்போட்டி வரை யார் வெல்லப்போகிறார்கள் எனத் தெரியாமல் இருந்தது. வக்ஃப் போர்டு கல்லுரியில் நடிகர்களிம் டூப்பாக, மிமிக்ரி கலைஞர்கள் இருந்தது அவர்களுக்கு வசதியாக இருக்க கடைசிப் போட்டியாக பேஷன் ஷோ!

தெதே தெத்தினால் நாங்கள் 2 புள்ளிகள் முண்ணனியில் இருக்க, பேஷன் ஷோவில் இரண்டாம் இடத்தில் வந்தாலே அவர்கள்ள வென்று விடுவார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் டீமோ இதில்தான் வீக்.

எங்கள் மூளைகளை கசக்கி பேஷன் ஷோவிற்கு ஐடியாக்கள் பிடித்தோம். போட்டி ஆரம்பமானது. எங்களுக்குத் தெரியும் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரிதான் முதலிடம் பெறுமென்று..

இம்முறையும் தங்கைகள் தான் எங்கள் பிரம்மாஸ்திரம். மடிசார், குஜராத்தி ஸ்டைல், என புடவை அணியும் ஸ்டைல்களே எங்களில் அஸ்திரம். வக்ஃப் போர்ட் காலேஜோ, கூலாக அரைக்கை சட்டையுடன் டை கட்டிய எம்.ஜி.ஆரையும், பைப் புகைக்கும் ரஜினியையும் இப்படி பாப்புலர் கலைஞர்களைக் களத்தில் இறக்க, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. எங்களாலேயே கைதட்டாமல் இருக்க முடியவில்லை..

நடுவர் - பாலகுமாரன்..

பேச எழுந்தார்..

முதல் பரிசு முன்னால் எதிர்பார்த்து தற்போது எதிர்பார்க்காத முகம்மது சதக், இரண்டாம் பரிசு மூகாம்பிகை, மூன்றாவது பரிசு வக்ஃப் போர்டு கல்லூரி..

மிகப் பெரிய கூஊச்சல் குழப்பம். என்னதான் நாங்க ஜெயிச்சுட்டாலும், கொண்டாட முடியுமா?? பெரிய கலவரமே மூளுகிற நிலமை. பாலகுமரன் சொன்னார்.

கூட்டத்தின் அபிமானம் வக்ஃப் போர்டு கல்லூரிப் பக்கம்தான். அவர்கள் செய்தவை அனைவரையும் கவர்ந்தன. ஆனால் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான் உணர்ச்சி பூர்வமான தீர்ப்பை அளிக்க விரும்பவில்லை..

இது பேஷன் ஷோ.. அப்படி இருக்க உடையில் புதுமை இருக்க வேண்டும். ஆனால் அது மட்டும் அந்தக் கல்லூரிப் போட்டியாளர்களிடம் மிஸ்ஸிங். இது ஒரு மாறுவேடப் போட்டியாக இருந்திருந்தால் முதல் பரிசு அவர்களுக்குத்தான். ஒரு ஓவியப் போட்டியில் சிறந்த கவிதைக்கு பரிசளிக்க முடியாது. அதனாலேயே அவர்களுக்கு மூன்றாமிடம் என விளக்கி அமைதிப்படுத்தினார்.

நான்கு சுழல் கேடயங்கள். அடுத்தது என்ன??

எங்கள் சொந்தக் கலை விழாதானே!!.. வேலைகளை ஆரம்பித்தோம்

மெசன்னஸ்...

தொடரும்
..

No comments:

Post a Comment