Tuesday, December 22, 2009

மின்னணு இயந்திரமா? வாக்குச் சீட்டா?

தமிழ்நாட்டு பிரச்சனையாக இருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் புகார், இப்போது தேசிய அளவில் உயர்ந்து விட்டது..

மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களித்தவர்களே!

எப்படி வாக்களித்தீர்கள் என விளக்க முடியுமா?

மின்னணு இயந்திரத்தைப் பற்றிய தகவல்கள்..

http://www.indian-elections.com/electoralsystem/electricvotingmachine.html


http://www.andhrapradeshstate.in/how-to-cast-vote-using-evm-in-india-casting-vote-with-electronic-voting-machine/

முக்கியமான விஷயம். இதில் உள்ள ஃபர்ம்வேர் மைக்ரோகண்ட்ரோலர் உற்பத்தி ஆகும் பொழுதே ப்ரோக்ராம் ஆனது. இதை மாற்ற முடியாது..

http://toastmasterspeeches.blogspot.com/

இதையும் படித்துக் கொள்ளுங்கள்..

நான் கொடுத்த சுட்டிகளின் மூலம் எப்படி ஓட்டுப் போடுவது என்று படித்து இருப்பீங்க..

1. வோட்டுப் பதிவு ஆரம்பம் என்பதற்கான பொத்தானை அழுத்தி வாக்குப் பதிவு ஆரம்பமாகும்.

2. முதலில் அலுவ்ல்ர் ஒரு பட்டன் அமுக்குவார். இதனால் எந்திரம் வாக்கைப் பதிவு செய்து கொள்ளத்தயாராகிறது.

3. வாக்குப் பதிவு செய்பவர் தனது விருப்பமான சின்னத்திற்கான நீலப் பொத்தானை அழுத்தினால், அந்தச் சின்னத்திற்கு ஒரு ஓட்டு பதிவாகும். பீப் ஒலி வரும். அந்தச் சின்னத்திற்கு எதிராக சிவப்பு விளக்கு எரியும்.

4. மறுபடி அலுவலர் அடுத்த வாக்காளருக்கு அனுமதி அளித்து பொத்தானை அமுக்குவார். அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்.

சிவா.ஜி சொல்வது போல நடந்திருந்தால், அலுவலர் பொத்தானை அமுக்கியவுடன் உதயசூரியனுக்கு எதிரான விளக்கு எரிய ஆரம்பித்திருக்கும்..

ஓட்டுப் போட வந்தவர் மாற்று கட்சியைச் சேர்ந்தவர் என்னும் பட்சத்தில் அனைத்து விளக்குகளும் அணையாமல் நான் ஓட்டுப் போட மாட்டேன் என்று அடம் பிடிக்கலாம். அலுவலர் மாட்டிக் கொள்வார்...

இப்படி நடக்கிறது என்று தெரிந்தாலே அந்த அலுவலரை கண்ணி வைத்துப் பிடித்து அவர் வேலைக்கே உலை வைத்து விட முடியும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வன்முறையாளர்கள் உள்ளே நுழைந்தால் வாக்குப்பதிவை உடனே மூடிவிட பொத்தானைக் கொண்டுள்ளது. அதை மறுபடி எப்படி ஓபன் செய்வது என்று அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. அதனால் வன்முறையின் மூலம் வாக்குச்சாவடியை பிடித்து ஓட்டுப் பதிவு செய்வதை தடுக்க முடியும்.

இதை ஏன் செய்வதில்லை? இது மாற்று கட்சியினருக்குத் தெரியாதா என்ன?

முதலில் பதிவான ஓட்டுகளுக்கும் எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றன என்கிறார்களே, அதை நிரூபிக்க வேண்டும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவானது என்று ஏஜெண்டுகளுக்குத் தெரியும் அல்லவா? அதைக் கூட்டினாலே போதுமே.. ஆனால் இதை எல்லாம் ஏன் புகார் கூறுபவர்கள் செய்வதில்லை என யோசிக்க வேண்டும்.

1. அவர்களிடம் ஆதாரம் இல்லை.

2. ஓட்டுப் பதிவு முறையை குறையற்றதாக்க அவர்களுக்கு எண்ணமில்லை. அப்படிச் செய்தால் பிற்காலத்தில் தான் முறைகேடு செய்ய முடியாது என்று நம்புகிறார்.

நான் இரண்டாவதையே சரியான காரணம் என்று நினைக்கிறேன்,

முக்கிய விஷயம்.. இன்று உபயோகிக்கும் இந்த வாக்கு இயந்திரத்தை வடிவமைத்தவர்.. அமரர் சுஜாதா...

இந்த இயந்திரத்தைப் பற்றி அவர் தெளிவாகவே விளக்கி இருக்கிறார். அது மட்டுமல்ல. இதை முறித்துக் காட்ட சவால் கூட விட்டிருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு.

இதைப் பற்றி சுஜாதா ஒரு வார இதழில் எழுதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையைப் பற்றிய கட்டுரை கிடைத்தால் பதிகிறேன். படித்தால் இன்றைய எதிர் கட்சிகள் எப்படி எல்லாம் பொய் சொல்கின்றன எனத் தெரியும்.

உதாரணமாக பா.ம.க மென்பொருள் மாற்றம் என்று சொன்னார்கள்.

1. மென்பொருள் மாற்றவேண்டுமானால் வாக்குப் பதிவு இயந்திரத்தை திறக்க வேண்டும். அதன் பிறகு அதில் இருக்கும் மைக்ரோ கண்ட்ரோலரை டி-சால்டர் செய்து எடுக்க வேண்டும். அதற்குப் பின் அந்த தொகுதிக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலரை அங்கே சால்டர் செய்ய வேண்டும். எந்தப் பொத்தான் நம்ம கட்சிக்கு என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் சிறப்பு உபகரணங்கள் வேண்டும்.. சுஜாதாவின் மூளையில் உருவான பாதுகாப்புத் திட்டங்கள் மிகவுமே சிக்கலானவை.

உள்ளே என்ன இருக்கிறது என்று அறியாமலேயே 2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்களே அதைப்போலத்தான் மின்னணு இயந்திரம் மாற்றம் செய்யப்படுகிறது என்பதும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கே உரிய முறையில் ஓட்டுப் பதிவு நடக்கும். ஆனால் இந்தியா முழுவடும் ஒரே முறைதான் என்பது மிகப் பெருமையானது. அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஜெயிக்கக் காரணம் என்ன? ஃ புளோரிடா மாநிலத்தில் பஞ்ச் கார்ட் என்ற முறையில் நாம் வாக்களிக்கும் வரிசைக்கு எதிராகா முதலிலேயே குறியிடப்பட்ட இடத்தை துளையிட்டு ஓட்டு செலுத்த வேண்டும். பலஎ துளையை முழுமையாக இடாமல் விட்டதால் பல ஓட்டுகள் செல்லாததாகி விட்டன. இதனால் புஷ் ஜெயித்தார். இருந்தாலும் அவர்கள் ஓட்டுப் பதிவு முறையை மாற்ற வேண்டும் என கதறவில்லை,


நம்முடைய மின்னணு எந்திரத்தில் இந்தக் குளறுபடி இல்லை. இது மட்டுமல்ல, இன்னும் பல குளறுபடிகள் இல்லை,


எங்கள் வீட்டினருகில் ஒரு அரசு உழியர் இருக்கிறார். சம்பளம் என்னவோ ஏழாயிரம்தான். ஆனால் கார் பங்களாவோடு மிக வசதியாக வாழ்கிறார். பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. சரி விஷயத்துக்கு வருகிறேன்,

அவர் என்னிடமே ஒருமுறை அதாவது போன சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சொன்னார். என்னை ஹொசூருக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் வாக்குச்சாவடி பணிக்கு அனுப்பியிருந்தார்கள். அந்த கிராமத்துமக்களில் பெரும்பாலோனோர் எழுதப் படிக்கத்தெரியாதவர்கள். வாக்கு இயந்திரத்தை கையாளத் தெரியாமல் என்னிடம் வந்து கேட்பார்கள். நானும் எழுந்து சென்று இப்படித்தாம்மா அழுத்தனும் என்று சொல்லி உதயசூரியனுக்கு அழுத்தி வாக்கை பதிவு செய்துவிட்டு வந்து ரீசெட் செய்யாமல் இருப்பேன். அவர்களும் அவர்களுக்குப் பிடித்த சின்னத்தில் அழுத்துவார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதால் ஒரு எர்ரர் சத்தம் கேட்கும். அதை தங்கள் வாக்கு பதிந்துவிட்டதாக நம்பி திருப்தியோடு போய்விடுவார்கள். நானும் சளைக்காமல் அவர்களுக்கு ”உதவி” செய்துகொண்டேயிருந்தேன்.

என்று சொன்னார். நானும் உங்களைப் போலவே கேட்டேன். கட்சியின் பிரதிநிதிகள் இருப்பார்களே என்று. அவர்கள் வாக்குப் பதிவு செய்யுமிடத்துக்குள் வரமாட்டார்கள், அதனால் பிரச்சனையில்லை என்றார்.

மேலும் எங்கள் கிராமத்திலும் அந்தமுறை தி.மு.கவே நிறைய வாக்குகள் வாங்கியிருந்தது. அதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். எங்கள் கிராமத்திலிருப்பவர்களுக்கு இரட்டை இலையைத் தவிர எதற்கும் வாக்களித்து பழக்கமில்லை. அவர்களும் ஆச்சர்யப்பட்டு போனார்கள். எப்படி நிகழ்ந்தது இது என்று.

மீண்டும் அந்த அரசுஉழியரை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு எப்படியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது. வந்தால் எங்களுக்குத்தான் ஆபத்து. அதனால் எங்களுக்குள் முடிவு செய்து இப்படி செய்தோம். என்றார்.

அதே போலத்தான் எல்லா கிராமங்களிலும் தி.மு.கவும், நகரங்களில் மற்ற கட்சிகளும் நிறைய வாக்குகள் வாங்கியிருந்தன. எங்கள் மாவட்டத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் மிக அதிகம் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறேன்.

இது அத்தனையும் உண்மை. என்னால் எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கமுடியும்

1977 -ல் இந்திரா காந்தி இரஷ்யாவில் இருந்து மை வரவழைத்து ஓட்டுச் சீட்டுகளில் காங்கிரஸீற்கு முத்திரையை அந்த மையால் பிரிண்ட் செய்து தயாரித்து இருக்கிறார் ஓட்டு எண்ணும் நாளன்று நாம் குத்திய முத்திரை மறைந்து போய் அந்த முத்திரை வெளிவரும் என்றார்கள்.

எப்படி ஓட்டுப் போடுவது என்று அரசியல் கட்சிகள் மேடையில் அப்பாவி ஜனங்களுக்கு விளக்கலாமே? அதை ஏன் யாரும் செய்வதில்லை?

வீடு வீடாக போய் கவர் டெலிவரி செய்ய ஒரு கட்சிக்கு நேரமும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்றால், வீதி வீதியாகச் சென்று எப்படி ஓட்டளிப்பது என்று விளக்க வேண்டியதுதானே? அதுவும் நாட்டிற்கு செய்யும் தொண்டுதானே மக்கா.. வாழைப்பழத்தை நாங்க உரிச்சு வைக்கணும் என்று எதிர்பார்த்தால் எப்படி.. இவர்களுக்கு ஓட்டு வேணும்னா இவங்கதான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எப்படி ஒரு சிஷ்டத்தை உடைக்க முடியுமோ அதே மாதிரி சதித்திட்டத்தையும் உடைக்க வழி இருக்கு. அதைச் செய்யாமல் இருப்பதாலேயே நாட்டை ஆளும் திறமை இவர்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியுமே!

எப்படி ஓட்டுப் போடுவது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு இல்லையா? வாக்கு பதிவு இடத்தில் பணி செய்யும் அதிகாரிகள் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் செய்யும் தவறை இது தடுக்குமே!!!

வாக்குப் பதிவு எந்திர மாடலை ஒரு தொகுதிக்கு 10 செய்தால் கூட (அதிகம் லாஜிக் தேவையில்லை.. சிம்பிளா செய்தால் போதும், ஆட்சி அவங்க கையில்தானே? ஏன் செய்யவில்லை? ஏன் வெறுமனே குரல் கொடுக்கிறார்கள்?

யார் மேலேயாவது பழியைப் போட்டு அவர்களைத் திட்டுவதால் எதுவும் என்றும் சரியாகப் போவதில்லை. இதை யோசிக்க எனக்கு 5 நிமிடம் கூட ஆகவில்லை. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்?

அரசு ஊழியர்களை சலுகையும் பாதுகாப்பும் தந்து தி.மு.க ஓட்டு வாங்க முயற்சிக்கிறதென்றால் அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று யார் யோசிக்கிறார்களோ அவர்கள்தான் தி,மு,க வை வெல்ல முடியும்.

உலகில் எல்லாவற்றிற்கும் வழி இருக்கிறது,...திட்டுவதால் என்றும் எதுவும் சரியாகப் போவதில்லை...

சிவா.ஜி என் கருத்துக்களை ஆழச் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

எந்த எதிர் கட்சியினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது பிதற்றல். அதைச் செய்ய அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மை...

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கற்பனை..

அரசு அதிகாரிகள் மீது சும்த்தும் குற்றச்சாட்டு சோம்பேறித்தனம்.. எஸ்கேப்பிஸம் என்னும் நழுவல்...

சிவா.ஜி இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னால் அவரால் எதுவும் செய்ய முடியாது என ஒப்புக் கொள்வேன்.

ஆனால் இந்த நாட்டை நங்கள் ஆளுவோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் புலம்பினால்...

அப்புறம் அவங்களுக்கு எதுக்குங்க நாங்க ஓட்டுப் போடணும். இதையே, அதுவும் அவங்க ஆதாயத்துக்கு, மாற்றத் திட்டமிட முடியாதவர்கள் எப்படி நாட்டை வழிநடத்தப் போகிறார்கள்?


தாமரையின் விளக்கம் அருமை. நானும் இதையெல்லாம் நெட்டில் படித்தேன். AVM ஐ ஒன்றுமே செய்ய முடியாது என்பது உண்மையல்ல. ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஐந்தாவது வாக்கும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுமாறும் ப்ரோகிராம் செய்ய முடியுமென்று.


EVM கட்டமைப்பு புரியாமல் அவர் பொதுப்படையாகச் சொல்லி இருக்கிறார். எந்தப் பொத்தானுக்கு எந்த வேட்பாளர் என்பது தொகுதிக்கு தொகுதி மாறும். போட்டியிடும் வாக்காளர் எண்ணிக்கை, பெயரின் அகரவரிசையை வைத்தே இது முடிவு செய்யப்படுகிறது, ஆகவே ஒரு தொகுதியில் தி.மு.க. விற்கு எந்தப் பொத்தான் என்பது வேட்பாளர் இறுதிப் பட்டியல் வந்தப் பின்புதான் தெரியும்.

அடுத்ததாக EVM கட்டமைப்பின் படி மென்பொருளில் மாற்றம் செய்ய மைக்ரோ கண்ட்ரோலரைப் பெயர்த்தெடுத்து மாற்ற வேண்டும். எந்தத் தொகுதிக்கு எந்த EVM என்று தெரியாத நிலையில் மாற்ற முடியாது, எந்திரங்கள் தேவை நிர்ணயிக்கப்பட்டு மத்திய குடோனிலிருந்து அவை அனுப்பப் பிரிக்கப்பட்ட பின்னரே இதைச் செய்ய முடியும். ஆனால் அதற்கான கால அவகாசம் கிடையாது.


பொத்தான்களில் எதோ சங்கேதம் இருக்கிறது என்பது மொக்கைத்தனமானது. EVM எந்திரத்தை கணினி மயமாக்காமல், இணையத் தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட கருவியாக செய்ததின் காரணம் அதுதான். படம் பார்த்தீர்கள் அல்லவா அந்தப் பொத்தான்களைத் தவிர வேறு உள்ளீட்டு முறை இல்லை. அதில் சங்கேதக் கோடு என்பது யார் செய்ய முடியும்? அதை மென்பொருள் அல்ல, மைக்ரோ கண்ட்ரோலர் சப்போர்ட் செய்ய வேண்டும்.

ஒரு EMV ஐப் பெற்று அதை உடைக்காமல் தவறாக பணிசெய்வதை நிரூபிக்க மனு செய்யலாமே... ஒரு நிபுணர்.. பல கட்சி பிரதிநிதிகள்..

நிபுணர் பலவாறு அதைப் பரிசோதனை செய்யலாமே.. ஏன் இந்த ஹேஷ்யங்கள் எல்லாம்? எதிர் கட்சிகள் இதை கேட்க உரிமை உண்டு. ஆனால் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் EVM அரசியல்வாதிகளால் வடிவமைக்கப்பட்டது அல்ல. ஒரு நாட்டு நல விரும்பியால் வடிவமைக்கப்பட்டது.


அரசுஊழியர்கள் செய்தது படிப்பறிவில்லாத கிராமத்து மக்களிடம்தான். லைட் எரியவில்லையென்றாலும் கேட்பதற்கு தைரியமில்லாத அப்பாவிகளிடம்தான்.

இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்பவர்கள் எப்படி ஓட்டுப் போடுவது என்றுச் சொல்லிக் கொடுக்க வேண்டுமல்லவா? எதிர் கட்சிகள் ஏன் எப்படி ஓட்டுப் போடுவது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யக் கூடாது?


அரசு அதிகாரிகள், குடும்பத்துடன் தி.மு.க.விற்கு ஓட்டளிப்பது அவர்களின் ஜனநாயகக் கடமையை அவர்களின் விருப்பப்படி நிறைவேற்றுவ்து ஆகும். தேர்தல் கமிஷன் பரிசீலித்து அங்கீகரித்த வேட்பளருக்குத்தானே ஓட்டளிக்கிறார்கள் அதில் தவறில்லை. மற்றவரின் ஓட்டு தவறுதலாக தனது விருப்பமான கட்சிக்கு விழுமாறு செய்பவரை கண்ணி வைத்துப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதுதான் எதிர் கட்சிகள் நியாயமாக செய்ய வேண்டிய காரணம். ஆந்திராவில் இது போன்ற சில பூத் ஏஜெண்டுகள் EVM எந்திரத்தில் ஓட்டுப் பதிவு செய்த்து கண்டுபிடிக்கப்பட்டு மறுதேர்தலுக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது. அலுவலர் கூட மாட்டி இருக்கிறார்.


இப்படி ஒரு வழி இருக்கே அப்பு... நம்ம நாட்டிலேயே இருக்கே.. ஏன் இதை வலியுறுத்தலை. ஏன் ஓட்டுச் Cheat? விலை போகும் ஏஜெண்டுகளை நம்பி கட்சியின் எதிர்காலத்தையே ஒப்படைத்தால் எப்படி?



காகித வாக்களிப்பு இருந்தபோது ஒருமுறைகூட ஜெயிக்காத சில அ.தி.மு.க கோட்டைகளிலும், முழுக்க இயந்திரம் அறிமுகப்படுத்திய பிறகு தி.மு.க ஜெயித்திருப்பது எதைக் காட்டுகிறது?

இது காகித ஓட்டுப் பதிவில் அதிமுக அந்தத் தொகுதிகளில் தில்லுமுல்லு செய்ததாகக் காட்டுகிறது?

இப்படியும் பார்க்கலாம் அல்லவா?

புலம்புவதால் பிரயோசனும் இல்லை என்பது ஒருபக்கம். இவர்களைப் பார்த்துக் கொதித்து உங்க உடம்பை கெடுத்துக் கொள்ளாதீங்க. நமக்கு எக்கச்சக்க ஆசை இருக்கத்தான் செய்யும்.

ஆனால் நாம இறங்கி வேலை செய்யாம எல்லாம் மாறிடனும்னு ஆசைப்படறது தவறு... நம்மால ஒண்ணும் செய்ய முடியலையே என்பது இன்னும் அதிகமான ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் கொடுக்குமே தவிர அதனால் நன்மை எதுவுமே விளையப் போவதில்லை..

ஆனால் சின்னதா எதையாவது செய்து சின்ன மாற்றத்தை உண்டாக்கி சின்னச்சின்ன சந்தோஷம் பட ஆரம்பிச்சோம்னா ஆரோக்யமும் நல்லா இருக்கும், நாட்டுக்கும் நல்லது.

மின்னணு இயந்திரம் வாக்குச் சீட்டை விட நல்லது என்பதால்தான் நான் இவ்வளவு சொல்கிறேன். வாக்குச் சீட்டுகளில் பலப்பல முறையில் ஏமாற்ற முடியும்.. மின்னணு எந்திரத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. வாக்கு எண்ணும் பொழுது கூட செல்லாத ஓட்டுக் கணக்கிலும், 50 வாக்குக் கட்டுகளில் 49ம் 51 மாய் கட்டுகளைக் கட்டுவதாலும், வாக்குச் சாவடியில் அடாவடியாய் புகுந்து கள்ள ஓட்டுக்களை மானாவாரியாய் போடுவதாலும் இப்படிப் பலப்பல வகையிலும் நடந்த தவறுகள் குறைந்திருக்கின்றது. அதை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர நடக்கும் முயற்சியே வாக்குச்சீட்டுக்கு மாறக் கேட்பது என நம்புகிறேன்.

வாக்குச் சீட்டுதான் வேண்டும் என்று சொல்பவர்கள் மின்னணு இயந்தியரம் பற்றி பயம் கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர வாக்குச் சீட்டு விஷயத்தில் என்ன ஸ்பெஷல்?

1. செல்லாத ஓட்டு போடலாம். அனைத்து சின்னங்களிலும் முத்திரை இட்டு.
2. அழகா இலட்டர் எழுதி கூடப் போடலாம். நாட்டுக்கே தகவல் சொன்ன மாதிரி இருக்கும்.


இப்படி சிறப்புகளை எடுத்துச் சொல்லலாமே..


பொதுவாகவே பிறரைக் குறை சொல்வது, திட்டுவது போன்ற விஷயங்களை நான் ஆதரிப்பதில்லை . அப்படிச் சொல்றதா இருந்தாலும் அதை எப்படிச் சரி செய்வது என்ற கருத்தையும் சேர்த்துதான் சொல்வேன்..

பல இடங்களில் என்னோட குறை சொல்ற பதிவுகளைப் படிச்சீங்கன்னா, அது இது போல சும்மா திட்டுவதை எதிர்த்தே இருக்கும். பல விசயங்களை ஒழிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதுதான் முக்கியம்.

கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கேட்டுக் கேட்டு காது புளித்து விட்டது.

நீங்க ஓட்டு போட்டா நாங்க செய்வோம் என்பது நல்ல அணுகுமுறை அல்ல.

நாங்க செய்யறோம்.. உங்க ஆதரவு அதிகரிச்சா இன்னும் பலப்பல நல்லதுகளைச் செய்வோம் என்பதோ கட்சிகளின் சரியான அணுகுமுறையா இருக்கும். உழைக்க உழைக்க ஆதரவு அதிகரிக்கும்..

எங்களில் ஒருவரைத்தான் நீங்க தேர்ந்தெடுத்தாகணும் என்ற "கெத்து" தான் அனைத்திற்கும் காரணம். அதை மாற்றணும்னா அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மாற்றணும் அல்லது இது போன்ற எண்ணம் கொண்ட கட்சி வரணும். 

 இதுவரை வந்து விழுந்த வாதங்கள்

மின்னணு எந்திரம்

நல்ல விஷயங்கள்

  • எளிமையானது
  • செலவு குறைவு
  • எண்ணுவதும், மறு எண்ணிக்கையும் சுலபம்
  • அடுத்த தேர்தல் வரை வாக்குகளை எளிதாக பாதுகாக்கலாம்
  • செல்லாத வாக்குகள் கிடையாது
  • வன்முறை மூலம் வாக்குச் சாவடியில் திடீரென நூற்றுக்கணக்கில் ஓட்டுக்களை குவிக்க முடியாது

சந்தேகத்திற்கிட்மான விஷயங்களும் தெளிவும்
  • அங்கே இங்கே என்று மக்கர் ஆகிவிடுது. நினைச்ச இடத்தில் அதை திறந்து சரி செய்றாங்க.
  • 10 இலட்சம் எந்திரங்களில் 1800 எந்திரங்கள் பழுது என்று தகவல் சொல்கிறது. எந்திரம் நல்ல முறையில் பணி செய்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அதுவும் அனைத்து பூத் ஏஜெண்டுகளும் ஒப்புக் கொண்ட பின்னரே ஓட்டுப் பதிவு ஆரம்பமாகிறது.
  • கிராமத்துமக்களில் பெரும்பாலோனோர் வாக்கு இயந்திரத்தை கையாளத் தெரியாமல் இருப்பதால் அரசு அலுவலர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்கள்
  • தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தேர்தல் கமிஷனும் அனைத்துக் கட்சிகளும் எப்படி ஓட்டளிப்பது என மக்களுக்கு விளக்கலாம்.
  • பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் ஓட்டளித்தவர் எண்ணிக்கையும் சில இடங்களில் வித்தியாசப்படுகிறது.
  • ஓட்டளித்த உடனே எண்ணிக்கை உயர்ந்ததா இல்லையா என பூத் ஏஜெண்டுகள் சரி பார்த்துக் கொள்ளலாம். ஓட்டளித்தவர்களின் பட்டியல் எண்ணிக்கையுடனும் சரிபார்க்கலாம். இல்லையென்றால் உடனே புகார் கொடுத்து மறுவாக்குப் பதிவு கோரலாம்.
  • ஒவ்வொரு ஐந்தாவது வாக்கும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுமாறும் ப்ரோகிராம் செய்ய முடியும்.
  • ஆனால் கட்டமைப்பின் படி வாக்குப்பதிவு எந்திரத்தின் மைக்ரோகண்ட்ரோலரை பெயர்த்தெடுத்து சரியான மென்பொருள் கொண்ட இன்னொரு மைக்ரோ கண்ட்ரோலரை பொருத்தும் வரை முடியாது. இது வெறும் ஹேஸ்யம்.
  • அரசு ஊழியர்கள் நினைத்தால் குறிப்பிட்டக் கட்சியை ஜெயிக்க வைக்க முடியும்
  • இது எல்லாவகை ஓட்டுப்பதிவிற்கும் பொதுவானது. மின்னணு இயந்திரத்தின் மீதான விழிப்புணர்வு உண்டானால் அரசு ஊழியர்களால் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய முடியாது..

காகித வாக்குச் சீட்டு

நல்ல விஷயங்கள்

எதிர்கட்சிகள் கேட்கின்றன


தீமைகள்
  • செலவு
  • செல்லாத ஓட்டு ஆகும் நல்ல ஓட்டு
  • வன்முறையால் கள்ள ஓட்டு
  • எண்ணுவதில் தாமதமும் குழப்பமும்
  • போலி வாக்குச்சீட்டுகள் வெளியில் அச்சடிக்கப்பட்டு ஒன்றிற்கு மூன்றாக ஒருவர் வாக்களிக்க முடியும்

புதுமுறைக்கு ஆலோசனைகள்
  • நவீன அடையாள அட்டை
  • வாக்கு இயந்திரத்தின் தர உயர்வு
கடைசியா ஒரு ஆலோசனை!!!

காகிதசீட்டை விட கணினிச்சிட்டு வரவேற்கத்தக்கதே!

அதை அறிமுகப்படுத்தியவர்களுக்கு அதனைப் பாவிக்கும் அறிவை மக்களுக்குப் புகட்டும் கடமையும் இருக்கிறதல்லவா. இதனைச் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு யாருக்கு உண்டோ அவர்கள் அதைச் செய்ய முன்வராதது ஏன்? என்மீது சுமத்தப்படுவது குற்றமல்ல பழியே என்று எடுத்துக் காட்டுவது என் நடவடிக்கைதானே. அதனை அறிந்து நான் பொறுப்புடன் நடக்கவேண்டாமோ? தேர்தல் நேரம்தவிர்த்து மற்ற நேரங்களில் ஆணையம் தூங்குகிறதேன்?
இது பலமுறை நடத்தப்பட்டாலும் யாரும் இதற்கு வருவதில்லை. நான் ஒரு முறை போய் கலந்து கொண்டிருக்கிறேன். வாக்குச் சாவடியிலும் எப்படி ஓட்டுப் போடுவது என்று படங்களுடன் கூடிய விளக்கங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

ஏன் அனைத்து டி.விகளும் தேர்தல் நேரத்தில் எப்படி ஓட்டுப் போடுவது என்ற விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது?

எப்படி ஓட்டுப் போடுவதென டி.விகளில் விளம்பரம் செய்தால் பலனிருக்கும். எலக்சன் கமிசன் இணையதளத்தில் சென்று ஆலோசனை கொடுத்து வைக்கிறேன். (டி.வியை பார்க்காதவர் உண்டோ?)

அனைத்து டி.வி களும் இலவசமா இதை ஒளிபரப்பலாமே!!!




இங்க போய் ஒர் மெயில் போடுங்களேன். என்ன நடவடிக்கை எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

.

3 comments:

  1. Dear sir,

    You are saying to create a awareness among the innnocent public. Why the Govt Employees misusing their power. Dont they have the awareness? Why are they doing this kind of ugly things. You are supporting the stupid fellows.

    regards

    ReplyDelete
  2. முதலில் ஒண்ணு புரிஞ்சுக்கிங்க. நான் நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பவன். யாருக்கும் தலையசைப்பவன் அல்ல.

    ஒவ்வொரு மனிதனும் இன்னிக்கு சுயநலவாதியாக மாறிக் கொண்டு இருக்கிறான். அப்பாவி மக்களுக்கு மிஷின், கம்ப்யூட்டர் என்ற உடனேயே பயம் வந்திடுது. அவர்களைத் திட்டணும்னு உருப்படியா அவர்களுக்கு எதாவது செய்தாத்தான் உங்களுக்கு அந்த உரிமை கிடைக்கும்.. சும்மா திட்டறதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது..

    உங்க பதிவை நியாயமா நான் தணிக்கை செய்து இருக்கணும். ஆனாலும் ஏன் பப்ளிஷ் பண்ணறேன்னா, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..அதுக்குதான்

    ReplyDelete
  3. //மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர நடக்கும் முயற்சியே வாக்குச்சீட்டுக்கு மாறக் கேட்பது//

    Great Buddy!!! This is 10000000000% TRUE.. Keep writing

    ReplyDelete