Wednesday, December 23, 2009

தொழிலும் சமுதாய நோக்கும்!!! - பாகம் 1

சமுதாயத்திற்கு தேவையான ஒன்றைக் கூட கொடுக்காமல், சமுதாயத்தில் இருந்து பெற்று மட்டுமே வாழ்வது தவறு..

ஒவ்வொரு தொழிலும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள எதாவது ஒன்று உண்டு. அப்படிப் பகிர்ந்து கொள்ளாதது தொழிலல்ல

நாம் செய்வது தொழிலா இல்லையா யோசித்துப் பார்க்க வேண்டும்..

சட்டென்று சிதறி விழுந்த இந்த எண்ணத் துளிகள் ஆராயத்தக்கவை.. நம்மையே எடுத்துக் கொள்வோம். நமது பணி சமுதாயத்திற்கு எப்படி பலனளிக்கிறது?

நான் செய்யும் மென்பொருள் உலகமக்களை இணைக்கிறது. பரிமாற்றங்கள் நடக்க உதவுகிறது.. அறிவியலார் தங்கள் கண்டுபிடிப்பை உலகின் எக்கோடியில் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது..

வீட்டின் ஒரு மூலையில் இருந்து கொண்டே, ஒருவர் தான் கண்டுபிடித்த நுட்பங்களை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கவும், மேலும் கற்கவும் உதவுகிறது.

இப்படி "நெட் ஒர்க்" என்பது மக்கள் வாழ்க்கையில் பிணைந்துள்ளது.. மக்களுக்கு பயன்படக் கூடியது..

ஆனால்...

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், பொழுது போக்குகளான சினிமா, கலைகள் போன்றவை ஆராயப்படல் வேண்டும்..

ஏனென்றால் இவைகளில் ஈடுபட்டோருக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அள்ளிக் கொடுக்கிறோம். அரிசி விலை 20 ரூபாய் என்றால், விலையேறிப் போச்சு என புஜம் தட்டி போராடும் நாம், இது போன்றவற்றிற்கு கொடுக்கும் பண மதிப்பு அதிகம்தான். ஆனால் அந்த மதிப்பிற்கேற்றார் போல் இவையின் பங்கு சமுதாயத்திற்கு இருக்கிறதா?
இல்லை அல்லவா?

விஞ்ஞானி ஆகி விட வேண்டும், பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்று கனவு காண்பவர்களை விட இந்த பொழுது போக்கு துறையில் புகழ் பெற வேண்டும் என துடிப்பவர்களே அதிகம்..

காரணம் சொன்னேனே .. புகழ்.. மற்றவர்களால் போற்றப்படுதல்..

அப்படியானால்..

அப்படியானால், தொழிகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பும், அதன் சமுதாயப் பலனும் ஒத்துப் போகவில்லையா? ஏன் ஒத்துப் போகவில்லை..

உற்பத்தி செய்பவனை விட வினியோகிப்பவன் அதிக லாபம் பெறுகிறான்.

அந்த லாபத்தை உற்பத்தி செயபவனுக்கு கடனாய் கொடுத்து வட்டியும் பெறுகிறான்

எங்கே தோன்றியது இம்முரண்? காரணம் என்ன?

கொஞ்சம் விவரித்தால் இன்னும் ஆழமாக சிந்திப்பிர்கள் என நினைக்கிறேன்..

கலெக்ஷன் ஆஃப் நாலெட்ஜ் - அறிவு!!!!!

காட்டு மிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்து சமுதாயமானது வரை உயிர் வாழவும், பசியாறவும், இனம் காக்கவும் மட்டுமே நேரம் இருந்திருக்கும்..

சமுதாய அமைப்பு உண்டான பிறகு, இத்தேவைகளுக்காக எல்லா மனிதர்களும், எல்லா நேரங்களிலும் உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று..

மனிதனுக்கு நேரம் மிச்சமானது. அந்த மிச்சமான நேரத்தை என்ன செய்வது? மனிதன் அதை உபயோகமாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் கழிக்க விரும்பினான்

இதனால் உண்டானவை, பொழுது போக்குகள். இந்தப் பொழுதுபோக்குகளின் பக்க விளைவுகள் கலாச்சாரம் பரப்புதல், எது நல்லது எது கெட்டது என எடுத்துக் காட்டல், இப்படி எவ்வளவோ உண்டு. சொல்லப் போனால் நாடகங்கள் வரலாற்றை சுமந்து நின்றன்.. நல்ல சிந்தனைகளைத் தூண்டின. இதனால் மக்களுக்கு பல செய்திகளைக் கொடுக்க முடிந்தது..

ஒரு பக்கம் பொழுது போக்கு. அதனால் சிறிது பயணும் கூட. சந்தோஷமான மனம் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் வேலை செய்ய பலன் கூடியது..

சந்தோஷமான மனதில் கோபம் குறைகிறது. களைப்பு குறைகிறது.. இப்படி பல விளைவுகள் உண்டு, அப்படி இருக்க பொழுது போக்கு ஒரு தொழிலில்லை. அதனால் சமுதாயத்திற்கு பலனில்லை என்று எண்ணுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

அந்தத் தொழிலை நாம் நேர்மையாக்ச் செய்கிறோமா என்று கேட்டால் அதில் தான் விவாதம் வரக் கூடும்.

இப்போ சொல்லுங்கள்.. சினிமா தொழிலில்லை என்று நானா சொன்னேன்?

நான் கேட்ட கேள்வி என்ன?

ஒரு விஞ்ஞானி வாழ்நாளில் சம்பாதிப்பதை ஒரு சினிமாக் கலைஞன் ஒரு நாளில் பெற்று விடுகிறானே!!!

சமுதாயத்தில் தொழில்களின் இந்த மதிப்பு வேறுபாட்டைக் கேட்கிறேன் விவாதிக்க..

விளையாட்டிற்கும் இதே மாதிரி சமூக பலன்கள் உண்டு. ஆனால் அத்துறையில் முக்கியமாக் கிரிக்கெட்டில் உள்ளவர் பெரும் வருமானத்தையும், சமுதாயம் அதனால் அடையும் பயனையும் ஒப்பு நோக்கும் பொழுது விவசாயியை பட்டினி போட்டு நாம் இவர்களை தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகின்றோமே இது ஞாயமா எனக் கேட்கிறேன்.


நான் சினிமா / விளையாட்டு போன்றவை தொழில் அல்ல எனக் கூறவில்லை. ஆனால் நாம் அவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் / அதில் ஈடுபட்டோருக்கு கிடைக்கும் வருமானம் சரியா எனக் கேட்கிறேன்.


30000 ரன் அடிச்ச டெண்டுல்கரை தலையில வச்சுகிட்டு ஆடற நமக்கு, ஒரு ஹெக்டேரில் ரெகார்ட் விளைச்சல் என்னன்னு தெரியாது..

உற்பத்தி செய்பவன் முதலீடு செய்கிறான். விற்கா விட்டால் நஷ்டம் அதிகம். ஆனால் இடைத்தரகன் அப்படி அல்ல. அவனுக்கு விற்பவன் விற்றாக வேண்டிய கட்டாயம். வாங்குபவனுக்கு தேவை இருக்கு.. அதனால் பேரத்தில் இடைத்தரகன் கை ஓங்கி இருக்கு..

இதை மாற்றணும் என்றால் உற்பத்தி செய்பவனுக்கு தேவை எவ்வளவு என்று புரியணும். சப்ளை டிமாண்ட் - சரியாய் மெயிண்டெய்ன் செய்யணும். உற்பத்திப் பொருளை நீண்ட நாட்ளுக்கு பாதுகாக்கவும், தன் வட்டத்தை விட்டு வெளியில் வரவும தெரிய வேண்டும்.

அளவுக்கு அதிகமாக லாபம் வைப்பது, அதனால்தான் சில மதங்களில் பாவமாகச் சொல்லப்பட்டுள்ளது,

தொழில் போட்டி சமுதாயத்திற்கு நன்மைதான், விலை குறைகிறது..

ஆனாலும் செய்யும் தொழிலில் அநியாய லாபம் பார்ப்பதுதான் தவறு..


கொஞ்சம் அப்படியே ஒரு ஸ்டெப் பின்னாடி வருவோம்..

மேனேஜர் கிட்ட போய் ஊதிய உயர்வு கேட்கிற நாம் எந்த எந்த அடிப்படையில் கேட்கிறோம்? 

ஞாயமான கோரிக்கைகள் தானா?


(இதுக்கு பேரு ஆப்பு என்று யாராவது அர்த்தம் சொன்னால் அது ஹி ஹி)

தொடரும் .
.

No comments:

Post a Comment