Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 19

பாட்டெழுதிப் பாட்டெழுதி!!
மெசன்னஸுக்குப் பின் என் தமிழின் தடம் மாறியது.. அப்ப இருந்த ஜூனியர்ஸுக்கு எழுதக் கத்துக் கொடுப்பதுதான் முதல் பணி. முருகானந்தம், ஜெயக்குமார், பாசு என்கிற பாலசுப்ரமணியம் இப்படி இளைஞர்கள்ள் என்னைச் சுத்தி சுத்தி வர அவங்களுக்கு எழுதக் கருப்பொருள் கொடுத்து சிந்திக்க வச்சு இப்படியும் எழுதலாமேங்கற சிந்தனைகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.

என்.எஸ்.கே முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களோட தம்பி மகன். அவனுக்கு ஒரு ஆசை. சினிமா எடுக்கணும்.. (ஆஹா இப்ப வந்ததா கனெக்ஷன்..)

அவனுடைய சித்தப்பா பெரியப்பா மக்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிச்சாங்க. சிக்ஸ் ஃபோர்ஸஸ் (ஆறுபடை) என்று பெயர். அதில் வாழற வயசுன்னு ஒரு படத்துக்குப் பூஜையும் போட்டாங்க..

எல்லோரும் ஒரு நாள் காலேஜூக்கு வர என்.எஸ்.கே என்னை எல்லோருக்கும் அறிமுகம் செய்தான்..

எதெதோ கதை டிஸ்கஷன், அப்புறம் பாட்டு எழுதனும்.. நானும் கதை டிஸ்கஷனில் பங்கு கொள்ள, இப்ப வந்திருக்கற கல்லூரி மாதிரி இளமையான ஒரு கதை ரெடிபண்ணி முடிச்சோம். பாட்டு சிச்சுவேஷன் எல்லாம் புடிச்சு அஞ்சு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அடிப்படைக் கதையை வாங்கிகிட்டு, பாடல்களையும் வாங்கிகிட்டுப் போனவங்க ஆறுமாசம் கழிச்சு திரும்பி வந்தாங்க..

கதைக்கு ஃபைனான்ஸ் புடிச்சாச்சி, புது டைரக்டர், இசை வேதா அப்படின்னு ஒரு கேரள இசையமைப்பாளர். என் ஐந்து பாடல்களையும் ரெகார்ட் பண்ணின கேஸட் கொடுத்தாங்க... நம்ம பாட்டை நாம கேஸட்ல கேட்கறப்ப இருக்கற இன்பம் அலாதிதானே.

எட்டாவது செமஸ்டர் வந்திட அனைத்து கொட்டங்களும் அடங்கி ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சிட்டோம். அதுக்குப் பின்னால நான் எழுதிய ஒரே கவிதை நாங்க பிரிஞ்சு போவதைப் பத்திதான்..

தமிழ் என் நாக்கிலிருந்தும், கைகளில் இருந்தும் ஓய்வெடுக்கற காலம் வந்தது. 1989 லிருந்து 1997 வரை, எனக்கும் தமிழுக்கும் இருந்த தொடர்பு குமுதம், குங்குமம், மாலைமதி, பாக்கெட் நாவல்கள், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இப்படி வார மாத இதழ்கள் தான்.

1997 லில அமெரிக்கா வந்தேன். எல்.எஸ்.ஐ லாஜிக்ஸ்ல காண்ட்ராக்டர்.. அப்பதான் நியூஸ்குரூப் மெம்பரானேன்..

தொடரும்

.

No comments:

Post a Comment