Wednesday, December 16, 2009

வல்லவனுக்கு வல்லவன்!!!



அந்த பால்காரன் ரொம்பத்தான் ஹை டெக்.. பால் தான்னாலும் வீட்டிக்கு வீடு இண்டர்நெட் மூலம் ஆர்டர் செய்து குழாயைத் திறந்தா ஆர்டர் பண்ணிய பால் உங்கள் வீட்டிலேயே.. உங்கள் கிரெடிட் கார்டில் பணம் கழித்துக் கொள்ளப்படும்..

என்னதான் டெக்னாலஜி முன்னேறினாலும் மனிதனின் கலப்பட புத்தி மாற்ரதில்லையே.. தண்ணீர் பாலை விட காஸ்ட்லின்னாலும் மனுஷன் புதுசா ஒரு திரவம் கண்டுபிடித்து வச்சிருக்கான்.. பாலோடு சேர்த்து கலந்து விடுவான்..

ஆனால் இன்புட் - அவுட்புட் சரியா காமிச்சாகணுமே.. அதற்காக ஒரு செயற்கைப் பசு வச்சிருந்தான்.. அது பாலும் கறக்காது ஒண்ணும் கறக்காது.. சும்மா மிச்சமான பாலில் இன்னும் ஒரு திரவம் கலந்து பசும்பால் என்று வித்துகிட்டு இருந்தான்..

மிச்சமான காசை எல்லாம் வச்சு ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும் னு ரூபாய் தாள்களை மூட்டையாக் கட்டிகிட்டு ஒரு டாக்ஸி பிடிச்சு ஷோரூம் போனான்..

திடீர்னு டாக்ஸி வேற ரூட்டில திரும்ப, முன் சீட்டுக்கு அடியில பதுங்கி இருந்த குரங்குகள் பல்லை காட்டி இளிச்சிகிட்டே ஒரு மயக்க மருந்தை தூவ.. மனுஷன் சூ-வைக் கழட்டி மோந்து பார்த்தாப்பல பட்டுன்னு மயங்கிட்டான்..

குரங்குகள் அவன் ஏமாத்தி சேர்த்த பணத்தையெல்லாம் மூட்டையா தூக்கிகிட்டு போயிடுச்சு..

அடுத்த நாள் பேப்பர்ல கொட்டையாய் அதுதான் தலைப்புச் செய்தி...

குரங்குகள் கைது - கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற போது கையும் களவுமாய் பிடிபட்டன..

ஆமாம் கலப்பட பாலுக்கு வாங்கற மக்கள் கள்ள நோட்ட கொடுப்பாங்கன்னு பால்காரனுக்குத்தான் தெரியுமா இல்லை குரங்குகளுக்குத்தான் தெரியுமா??

.

1 comment:

  1. உலகத்தில் இதுவும் ஒரு பகுதிதான் ! " இந்த உலகத்தில் எதை கண்டும் பிரமித்து விடாதே, இங்கு எல்லாமே சாத்தியம் !" இது சுவாமி விவேகானந்தருக்கு அவரது தந்தை சொன்னது

    ReplyDelete