Tuesday, December 22, 2009

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி!

தொடரை வென்றவுடன் தொடர் முடிவில் மாற்றமேதும் ஏற்படுத்தாத கடைசிப்போட்டியை Dead rubber/Dead match என்று அழைப்பார்கள்.

ஆனால் இந்திய அணி அண்மையில் இரண்டு dead rubberகளை இழந்தது. இலங்கையில் வைத்து முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்றபின்னர் ஐந்தாவது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியை வென்றிருந்தால் ICC ஒருநாள் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பிடித்திருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாகப் பத்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற மைக்கல்லையும் கோட்டை விட்டார்கள்.


இலங்கையில் வைத்து White wash அடிப்படையில் ஒருநாள் தொடரை முதல் தடவையாக வென்ற பெருமையையும் பெறமுடியாமல் போனது.

இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.

இதனால் இம்முறை இந்தியா இழந்திருப்பது ICC யின் தரப்படுத்தலில் முதலாம் ஸ்தானத்தை மட்டுமல்ல – பெறுமதிவாய்ந்த பணப்பரிசையும் தான்!


இப்படி எல்லாம் என்னுடைய நண்பர் லோஷன் ரொம்பவே கவலை தெரிவித்து இருந்தார். அவருக்கு நான் சொன்ன ஆறுதல் மொழிகள் கீழே


1. தொடரை ஜெயித்து விட்டுதான் ஓய்வெடுப்பது என்று தீர்மானத்துடன் இதுவரை இந்தியா ஆடியதில்லை. தற்பொழுது அந்த பழக்கம் வந்து விட்டிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்.

2. எல்லா மேட்சுகளையும் வென்றால் அப்புறம் அந்த நாடுகளில் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடும். அப்புறம் அந்த நாட்டுப் பணம் கிரிக்கெட் மூலமாக இந்தியாவிற்கு எப்படி வரும்??  

3. இவங்களை அடுத்த முறை வென்றுவிடலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை எதிரி அணியின் மனதில் உருவாக்குவதன் மூலம், அடுத்த தொடருக்கு அச்சாரம் போட்டு விடலாம். இல்லையென்றால் அடுத்த முறை நம்மோட விளையாட மாட்டாங்க இல்லையா?

4. அடிச்சா வலிக்காத மாதிரி அடிக்கணும். வலிச்சதுன்னா அந்த அணிக்கு ரோஷம் வந்திடும். அப்புறம் அவங்க தீவிர பயிற்சியெல்லாம் எடுத்து நம்மளை துவைச்சு எடுத்திடுவாங்க. அதிரடி மாற்றமெல்லாம் செய்வாங்க. இதெல்லாம் தேவையா?

5. எப்பவுமே டாப்பில் இருக்கறவங்களை பல பேர் குறைசொல்லிகிட்டே இருப்பாங்க. பொறாமை நிறைய இருக்கும். அரசியல் அதிகமா விளையாடும். அதனால கொஞ்சம் அடக்கி வாசிச்சா, நல்ல பேர் கிடைக்குமில்ல..
இப்போ ஆஸ்திரேலியா இந்தியாவை ஜெயிச்சா அது செய்தி.. இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சா அது வரலாறு. எதுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும் யோசிச்சுப் பாருங்க.

6. இப்போ ஆஸ்திரேலியா நம்பர் 1 என்றால் இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கறப்ப ஆஸ்திரேலியா தோக்கணும் என்பதற்காக இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண மத்தவங்க வருவாங்க. பரிசுகளை அள்ளி வீசுவாங்க. அவங்களைப் பொறுத்தவரை இந்திய அணிதான் கதாநாயகன். ஏன்னா மத்த அணிகளை புழுமாதிரி நசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா சரிசமமா ஆடி ஜெயிக்குது. அதே இந்தியா எல்லா அணிகளையும் நசுக்கினா அப்போ இந்தியா வில்லனாகிடுமே. அப்புறம் சப்போர்ட்டெல்லாம் ஆஸ்திரேலியா பக்கம் போயிடும்.

7. இன்னார்தான் ஜெயிப்பாங்க அப்படின்னு தெரிஞ்சு பார்க்கிற போட்டி போர்

8. இப்படி எல்லா டீமும் கொலை வெறியோட (கில்லர் இன்ஸ்டிங்க்ட்???) விளையாடினா எப்படி கென்யா, பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், நெதர்லேண்ட், நமீபியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், அமீரகம் இப்படிப் பலப் பல புது அணிகளை வளர்ப்பது? தோல்விகள் அவங்களைத் துவளச் செய்யாதா? அப்புறம் கிரிக்கெட் எப்படி மத்த நாடுகளில் வளரும்?

9. வெற்றியே சலிச்சுப் போயிடும் தோல்வி இல்லாவிட்டால். அப்புறம் சோம்பேறித்தனம் வந்திடும்.

10. ஜெயிச்சுகிட்டே இருந்தா அரசியல் உள்ளே நுழையும். நம்ம மக்களைப் பற்றிதான் தெரியுமே.. ஜால்ரா போடறவங்களை அணியில் நிலைக்க வைக்கவும், எதிர்கருத்துள்ளவங்களை ஒதுக்கவும், களத்தில் ஆடாம அறையில் ஆடுறவங்க ஆட்டம் ஆரம்பமாகும். அப்புறம் அடுத்த தலைமுறை அணியை எப்படி உண்டாக்கறது?

11. கிரிக்கெட் விளையாட்டை விட பெட்டிங்லதான் அதிக பணப்புழக்கம் இருக்கு. அப்பப்போ தோக்காட்டி அப்புறம் இப்படி இருக்கிற ஒரு தொழிலே நசுங்கி பொருளாதாரம் நசுங்கிடாதா?

12. ஹார்த்தே ஹார்த்தே ஜீத்னே வாலேக்கோ பாஜிகர் கஹதேஹேன்..அப்படின்னு ஒரு டயலாக் இருக்கு. தோல்வியின் மூலம் வெற்றி பெறுபவன் தான் பாஜிகர் என்று அர்த்தம். (பாஜிகர் அப்படின்னா என்னப்பா? ஹிந்தி நல்லா தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்).. இந்த மாதிரி சில தோல்விகளை பெருந்தன்மையா ஏற்றுக் கொள்ளுதலை விட்டுக் கொடுத்தல் அப்படின்னு சொல்வாங்க. இந்தப் பொன்னான மனசை புரிந்து கொள்ள வேண்டும்.


13. விளையாட்டை விளையாட்டா எடுத்துக்கணும். ஜெயிக்கணும் என்கிற சீரியஸ்னஸ் எதுக்கு?

14. கடைசிப் பந்தில ஹார்ட் அட்டாக் வந்து ரசிகர்கள் அவுட் ஆகி இருக்காங்க. அப்படி இருக்க, கொலைவெறி எதுக்கு?


15. நம்மிடம் மீண்டும் மீண்டும் தோற்பவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிச்சா நம்ம வீரத்திற்கு என்ன மரியாதை? நீ அடிச்சது ஒரு புள்ளைபூச்சியை என்று வடிவேலு மாதிரி டயலாக் பேசமாட்ட்ங்களா?

16. ஏற்கனவே டஃப் ஃபைட் குடுக்கறப்ப, அவர் குரங்குன்னு சொன்னார், இவர் முறைத்தார், இவர் கைதட்டினார் அப்படின்னு எக்கச்சக்க கோள்மூட்டல்கள். இதில மத்தவங்க கைஜாலம் காட்ட வாய்ப்ப்பளிக்கலன்னா, வாய்ஜாலம் இன்னும் அதிகமாகிடாதா?

17. இஃப் அண்ட் பட்ஸ்.. அதாவது அப்படி நடந்திருந்தா இப்படி நடந்திருந்தா அப்படிங்கற சுவாரஸ்யமான விவாதங்களுக்கு வழியே இல்லாம போயிட்டா அப்புறம் நாங்க எதைத்தான் வச்சு டைம்பாஸ் பண்ணறது?

18. இந்தியா மட்டும் நியூசிலாந்துடன் கடைசி ஒரு நாள் போட்டியைத் தோக்கலைன்னா இப்படிப்பட்ட வாதங்களை நாம் யோசிச்சுதான் இருப்போமா?

19. நம்மால ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கைதான் வளர்ச்சியின் வேர்.. அந்த நம்பிக்கையை அத்தனை அணிகளுக்கும் இந்திய அணி தருவதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் விளையாட்டுக்கே நன்மைதானே

20. ஐ.பி.எல் ஆடறதால பணம் கொழிக்குது. ஐ.பி.எல் ஆடறதால இந்திய அணி கூட விளையாடறப்ப காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறாங்க என்ற அவப்பெயர் வீரர்களுக்கு வராம தடுக்குது இல்லையா? இந்திய அணியினருக்கு மத்தவங்களோட பலவீனம் தெரிஞ்சிட்டது. இனிமே வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடக் கூடாது அப்படின்னு யாராவது குரல் கொடுத்தா என்னாவது?

21. பழைய சாதனைகளால் டீமில் அசைக்க முடியாத சக்தி படைத்தவர்களை ஆட்டிப் பார்க்க வழி வேணாமா?

22. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. அப்புறம் வெற்றி மட்டும் எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்?


வாஸ்தவந்தானுங்களே????


.

3 comments:

  1. மி்க நல்ல இடுகை

    ReplyDelete
  2. Point 15 Chanceless comment :)

    ReplyDelete
  3. யாருக்காவது எந்த விஷயத்திற்காவது சப்பைக் கட்டு கட்டணுமா? என்ன காரணம் சொல்லணும்னு தெரியாம முழிக்கிறீங்களா?

    எனக்கு ஒரே ஒரு தகவல் குடுங்க... சப்பைக்கட்டு வாதங்களை இப்படி அள்ளி அள்ளித் தாரேன்.

    ReplyDelete