எம்.ஜி.ஆரைப் பற்றிய எவ்வ்ளவோ நல்ல நினைவுகள் இனிமையான் நினைவுகள் இருந்தாலும் என் நெஞ்சில் வடுவாய் பதிந்து விட்ட காயம் இது.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் (23 ஆ 24 ஆ தெரிய வில்லை மாலை 6 மணி இருக்கும்..
செமஸ்டர் லீவில் வந்த நான் சேலம் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு என்னுடைய மூத்த அக்காவின் கணவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
எங்கள் கல்லூரி டிசம்பர் 28 ஆம் தேதி திறக்க இருந்தது. இன்னும் இரண்டு நாட்கள்தான்.. ஞாயிறு ஹாஸ்டலுக்கு போகவேண்டும்..
இன்னும் இரண்டு நாட்கள்தான் உன் கொண்டாட்டமெல்லாம் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்த அவரிடம்
"அதை பற்றிக் கவலைப் படாதீங்க.. நாளைக்கு காலையில் பாருங்க எம்.ஜி.ஆர் செத்துட்டதா நியூஸ் வரும் ஒரு வாரம் லீவு விடுவாங்க.. அப்புறம் அடுத்த வருஷம் தான் காலேஜ்" என்று வீம்பு பேசிவிட்டு ஒரு சினிமா சென்று வந்தோம்.
அடுத்த நாள், காலை 6 மணி. அவசர அவசரமாய் என் அக்கா கணவர் எழுப்பி டேய் எம்.ஜி.ஆர் செத்துட்டாருடா.. எந்த நேரத்தில டா வாயை வச்சே என்று கத்த... கனவா நிஜமா எனப் புரியாமல்.. 1 நிமிடம் விழித்தேன்.
வாய் விட்டு சொன்ன வார்த்தையும் போனது.. மெய் விட்டு போன உயிரும் போனது.
இனியாவது இது போல் விளையாட வேண்டாம் என் முடிவெடுத்தேன்..
நான் என்ன சொன்னேன்.. ஏன் சொன்னேன் ஒரு விளையாட்டுக்குத்தானே! என்ன சோதனை இது! இன்னும் புரிந்து கொள்ள முடியாத புதிர் இது..
No comments:
Post a Comment