Tuesday, December 1, 2009

மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா?

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அந்த எண்ணெய் இந்த கிரீம்னு தடவி முடியை கறுப்பாக்க முயற்சி பண்ணினா அது என்னவோ வெளுத்து பளீர்னு ரின் வெண்மையாய் இருக்கு...

அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...


தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..


ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.

தாடிக்கு பதிலா தலை முடி வளருமே!

மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???

No comments:

Post a Comment