Wednesday, December 2, 2009

தவம்

அலைகள் அறைந்தறைந்து
மொட்டையாய்ப் போன
மனத்தின் மோனத் தவம்

அறைந்து எழுந்த
அலைகளின் அழகு
தலைக்குப் பின்
வர்ணஜாலம் காட்டி
மதியும் ரவியும்
எழுந்து விழும்
அழகு என

நிழற் படங்களாய்
அதன் பிம்பங்கள்
சுவர்களை அலங்கரிக்க

சலனமின்றி
மொட்டைப் பாறையின்
மோனத்தவம்

No comments:

Post a Comment